Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி உலகத் தொடர்பின்றி புல்மோட்டையில் 2 முகாம்கள்--இவர்களின் துயர வாழ்விற்கு முடிவெப்போது?

Featured Replies

மூன்று தசாப்த காலத்திற்கும் மேலான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்களின் வாழ்க்கை முட்கம்பிவேலிச் சிறைகளுக்குள்ளும் அடர்ந்த காடுகளுக்கு மத்தியிலும்

ஆயுதம் தாங்கிய படையினரின் தீவிர கண்காணிப்பு, பலத்த பாதுகாப்பு, கெடுபிடி, விசாரணை போன்ற பல்வேறு அபாயகரமான சூழலுக்குள்ளேயே இன்னமும் அமுக்கி வைத்துள்ளதையே

தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தெளிவாக சுட்டிக்காட்டி நிற்கின்றன.

வன்னியின் மிகப்பெரும் உக்கிரமான இறுதி யுத்தத்தின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்து இடம்பெயர்ந்தவர்களில் மிகப்பெருமளவிலானோர் சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏனையோர் யாழ். குடாநாட்டிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை நலன்புரி நிலையங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாகவே பெருமளவிலானோரால் அறியக்கூடிய நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் வெளியுலகத் தொடர்புகள் எதுவுமற்ற நிலையில் ஒரு இறுக்கமான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளப்பட்டுள்ளனர்.

610x.jpg

புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள இரு இடைத்தங்கல் முகாம்களில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 6,668 பேர் தற்போது தங்கியுள்ளனர் என்று இங்கு பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

3,227 ஆண்களும் 3,589 பெண்களும் தங்கியுள்ளனர். இவர்களில் குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் உள்ளடங்கலாக பெரும் எண்ணிக்கையிலான அவயவங்களை இழந்தவர்களும் உள்ளதாக தொண்டர் நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற உக்கிரமோதல்களின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்து காடுகள், குளங்கள்,வாவிகள், கடலேரி என்பவற்றையெல்லாம் மிகப்பெரும் துயரங்களுக்கு மத்தியில் தாண்டி கால்நடையாகவும் படகுகள் மூலமும் புல்மோட்டையை வந்தடைந்த இவர்கள் அங்குள்ள பாடசாலைக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் இவர்கள் அனைவரும் பாடசாலைக் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு புல்மோட்டைப் பிரதேசத்தில் இரு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சஹனகம1, சஹனகம2 என்று இந்த முகாம்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

சஹனகம1 நான்கு பிரிவுகள் உள்ளதாக தொண்டர் நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். ஏ பிரிவில் 179 குடிசைகள் அமைக்கப்பட்டு 351 குடும்பங்களைச் சேர்ந்த 1204 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 571 பேர், பெண்கள் 631 பேர் அங்கவீனமானோர் 320 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 67 பேர்.

பீ பிரிவில் 172 குடிசைகள் அமைக்கப்பட்டு 371 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 569 பேர், பெண்கள் 663 பேர் அங்கவீனமானோர் 37 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 73 பேர்.

சீபிரிவில் 173 குடிசைகள் அமைக்கப்பட்டு 452 குடும்பங்களைச் சேர்ந்த 1418 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 651 பேர், பெண்கள் 767 பேர், அங்கவீனமானோர் 57 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 69 பேர்.

டிபிரிவில் 165 குடிசைகள் அமைக்கப்பட்டு 307 குடும்பங்களைச் சேர்ந்த 934 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 406 பேர், பெண்கள் 528 பேர், அங்கவீனமானோர் 35 பேர்,60 வயதுக்கு மேற்பட்டோர் 65 பேர்.

சஹனகம2இல் 759 குடும்பங்களைச் சேர்ந்த 2080 பேர் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1080 பேர், பெண்கள் 1000 பேர், அங்கவீனமானோர் 126 பேர், 60 வயதுக்கு மேற்பட்டோர் 84 பேர்.

வெளியுறவுத் தொடர்புகள் எதுவுமின்றி புல்மோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சஹனகமவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு இடைத்தங்கல் முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிமக்களுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் பல பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.

உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் கூட திருகோணமலை மாவட்ட அரச அதிபர் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றார்கள்.

யூ.என்.எச்.சி.ஆர்., யுனிசெவ், ஐ.ஓ.எம்., மல்டிசார் இன்ரநஷனல், மேர்சிபவுண்டேசன், உலக கரிசனை நிலையம், ஒபர், பீப்பிள் இன்நீட் ஆகிய உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த இரு முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள வன்னி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

20இற்கு மேற்பட்ட தாதிமாரும் வைத்தியர் குழுவொன்றும் தினமும் இந்த இரு முகாம்களுக்கும் நேரடியாக விஜயம் செது நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்கிவருகின்றன.

அரச சார்பற்ற நிறுவனங்களால் குடிநீர்த்தாங்கிகள், மலசலகூட வசதிகள் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் போதியளவு அடிப்படை வசதிகள் இன்னமும் மேலதிகமாக தேவைப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்கிறார் இங்கு பணிபுரியும் மனிதாபிமான பணியாளர் ஒருவர்.

இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பெருமளவிலான மக்கள் தமது உறவுகள் சிதறுண்ட நிலையில் என்ன செவது, எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது, மீண்டும் அவர்களுடன் எப்போது இணைந்து கொள்வது என்ற மனக் கசப்புகளுடனேயே வாழ்க்கையை கழித்துக்கொண்டிருப்பதாகவும

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை. இவர்களின் துன்பங்கள் தொடர்கதையாகாமல் மீண்டும் சொந்த வதிவிடங்களுக்கு செல்ல சர்வதேச தொண்டு நிறுவனக்கள் எந்தவித அழுத்தம் கொடுக்கவும் தயங்கவைக்கப்படுவது கண்டிகத்தக்கது.

  • தொடங்கியவர்

இன்னுமொரு முகாம் இருக்கின்றது அது எங்கிருக்கின்றது என்று தெரியாது ஆனால் அதன் அருகில் கடல் இருக்கின்றது அத்துடன் புகைவண்டி போகும் சத்தம் மட்டும் கேட்கும்

அதிலிருந்து 15 வருடத்தின் பின்னர் ஒருவர் ம்ட்டக்களப்பு பகுதியில் தப்பி வந்தவர் என்னிடம் சொன்னவர்..இங்கு சில ஆயிரம் தமிழர்கள் அடைக்கப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.