Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்தவுக்கு மனைவி வீசும் மரணக்கயிறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு மனைவி வீசும் மரணக்கயிறு

- வி.சேந்தன் -

தமிழினத்துக்கு எதிராக கடும்போர் நடைபெற்று வந்ததால் இவ்வளவு காலமும் வெளியில் புலப்படாமல் இடம்பெற்றுவந்த இன்னொரு போர் சிறிலங்காவில் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அதுதான் மகிந்த குடும்பத்துக்குள் இடம்பெறும் அதிகாரப்போட்டி. குடும்பத்துக்குள் நடைபெறும் இந்த குடுமிப்பிடி சண்டை. இது நாளையே மகிந்தவுக்கு மரணக்கயிறாக மாறப்போவது நிச்சயம் என்று மகிந்தவின் குடும்ப வட்டாரங்களே முணுமுணுக்க தொடங்கிவிட்டன.

இந்த குடும்ப உட்பூசல் எவ்வாறு ஆரம்பித்து ஆரோகணித்தது என்பதை ஆராய்ந்தால், அங்குதான் மகிந்தவின் மனைவியின் அரசியல் ஆசையும் அவரது உள்வீட்டு நடவடிக்கைகளும் தெரியவரும்.

மகிந்தவின் அரசியல் வாழ்க்கை என்பது அவரது தகப்பனார் டொன் அல்வின் ராஜபக்சவிடமிருந்து பெற்றுக்கொண்ட சாதாரணமானதே தவிர, சிறிலங்காவை இவ்வளவுகாலமும் ஆட்சி செய்த பாரம்பரிய குடும்ப பின்னிலைக்கொண்டது அல்ல. பண்டாரநாயக்க குடும்ப அரசியலுடன் இவரது தகப்பனார் காலத்தில் இருந்து பேணிவந்த தனிப்பட்ட நட்பும் நம்பகத்தன்மையும் மகிந்தவை காலாகாலமாக அரசியலில் நிலைநிறுத்தி வந்தது.

தனது காலம் வரும்வரை பொறுத்திருந்த மகிந்த, தான் சார்ந்த சுதந்திரகட்சியினரின் ஏகோபித்த ஆதரவை கட்டிவளர்த்துக்கொண்டார். ஈற்றில், கதிர்காமருக்கு போகவேண்டியிருந்த பிரதமர் பதவியை தனது கட்சியினரின் ஆதரவுடன் தட்டிப்பறித்துக்கொண்டு அரசியல் மேல்தட்டுக்கு வந்து, தனது கட்சியின் ஆரம்பகால கொள்கையான சோசலிசத்தை புதிய வடிவில் சிங்கள தேசத்துக்குள் பிரசாரம் செய்து அரசுத்தலைவர் பதவியை பற்றிக்கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெருவிருட்சத்திடமிருந்து பிரிந்து சிறிலங்கா சுதந்திர கட்சி உருவானதும் பின்னர் அதனை பண்டாரநாயக்க தலைமுறை குடும்பச்சொத்தாக பயன்படுத்தி அரசியல் செய்து வந்ததும் பாரம்பரியமாக இருந்து சிறிலங்காவில், தனது காலப்பகுதியில் தன்குடும்ப அரசியலை உருவாக்கிவிடவேண்டும் என்ற பெரும் திட்டத்துடன் தனது சகோதரர்களை அருகில் வைத்திருந்து ஒருவரை இராணுவத்துக்கும் மற்றையவரை அரசியலுக்கும் பொறுப்பாக்கவிட்டு ஆட்சி நடத்த ஆரம்பித்தார் மகிந்த.

மகிந்த ஆட்சிக்கு வந்த அதிர்ஷ்டம், அக்காலப்பகுதியில் இந்து சமுத்திரத்தை மையமாக கொண்ட பூகோள அரசியல் மாற்றத்துக்கு சிறிலங்காவை மையமாக வைத்து வல்லரசுகள் தமது அதிகாரப்போட்டியை ஆரம்பித்தன. அதற்கு சிறிலங்காவின் முக்கியமான பிரச்சினையான இனப்பிணக்கு துருப்புச்சீட்டாக விளையாடப்பட்டது. இந்த வல்லரசுகளின் அதிகாரப்போட்டியின் இடையில் ஓடித்திரிந்து சிறிலங்காவின் முகவராக பணியாற்றிய மகிந்தவுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கப்பெற்றது. வல்லரசுகளின் அதிகாரப்போட்டி இன்னமும் ஓயவில்லை. ஆனால், அதில் கிடைக்கப்பெற்ற பக்க விளைவினால் தனது இருப்பினை அசைக்க முடியாதளவுக்கு வலுப்படுத்தி சிங்கள மக்களுக்கு வரலாற்று நாயகனாகி விட்டார்.

இந்த வெற்றியின் அடிப்படையில் வைத்து பார்க்கப்போனால், மகிந்த தலைமையிலான கட்சியே சிறிலங்காவை இன்னும் சில தசாப்தங்களுக்கு ஆட்சிசெய்யும் என்ற களநிலை காணப்படுகிறது. இந்த களநிலமையை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை எதிர்காலத்தில் எவ்வாறு தனது குடும்ப சொத்தாக்கிவிடலாம் என்பது தொடர்பாகவே மகிந்தவின் மனக்கணக்கு தற்போது வேகமாக வேலை செய்கிறது.

ஆனால், இங்குதான் மகிந்தவுக்கான மரணக்கணக்கும் வேகமாக வேலை செய்வதாக மகிந்தவுக்கு நெருக்கமானவர்கள் பேச தொடங்கியுள்ளார்கள்.

0001bon.jpg

அதாவது, மகிந்தவின் சகோதரரும் சிறிலங்காவின் அனைத்து படைக்கட்டமைப்புக்களிலும் செல்வாக்குமிக்க கோத்தாபாயவை மகிந்தவுக்கு பின்னர் அடுத்த அரச தலைவராக்கவேண்டும் என்பது மகிந்தவின் ஏனைய சகோதரர்களின் விருப்பம். கோத்தாபாயவுக்கும் அதுதான் திட்டம்.

ஆனால், மகிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்சவுக்கு மூத்த மகன் நாமல் ராஜபக்சவை அடுத்த அரச தலைவர் ஆக்கவேண்டும் என்பதுதான் ஆசை.

சிராந்தி ராஜபக்ச வெளிப்பார்வைக்கு மகிந்தவுடன் நிகழ்வுகளுக்கு வந்துவிட்டு போகும் பவ்வியமான அம்மணியாக இருந்தாலும், அவர் மகிந்தவின அரசியலில் பாரிய செல்வாக்கு செலுத்தும் ஒரு புள்ளி என்பது அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம் என்கிறார்கள் மகிந்த குடும்பத்தினர்.

தமக்கு நெருக்கமான அரசியல் புள்ளிகளில் யார் யாருக்கு அமைச்சு பதவிகள் கொடுக்கப்படவேண்டும் என்பது முதல் மகிந்த குடும்பத்தினர் உறவினர்கள் 62 பேர் இன்று சிறிலங்காவின் பல்வேறு துறைகளிலும் உயர்மட்டங்களில் பணிபுரிய நியமனம் வழங்கியதுவரை சகலதுமே அம்மணியின் கைங்கரியம்தான் என்கிறார்கள் அரசுக்கு நெருக்கமானவர்கள்.

மகிந்த சகோதரர்கள் இவ்வளவு காலமும் இராணுவம் மற்றும் அரசியல் துறைகளில் தலையைப் போட்டுடைத்துக்கொண்டிருக்க, ஏனைய துறைகளில் சிராந்தி ராஜபக்ச தனது செல்வாக்கை மகிந்தவின் ஊடாக அதிகமாகவே செலுத்தியிருக்கிறார்.

அவரது திட்டங்களுக்கெல்லாம் 'தாய்த்திட்டம்"தான் தனது மகனை அடுத்த அரசுத்தலைவராக்கும் திட்டம்.

0002tjc.jpg

இந்த விவகாரம் தற்போது மகிந்த குடும்ப மட்டத்தில் பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. கோத்தாபாயவோ தான்தான் அடுத்த அரச தலைவர் என்ற கொள்கையில் விடாப்பிடியாக நின்றுகொண்டு, குடும்பத்தில் தனக்கு ஆதரவானவர்களை அணிசேர்த்து மகிந்தவுடன் மல்லுக்கு நிற்கிறார்.

ஆனால், மகிந்தவின் மனைவி சிராந்தியோ தனது மகனை அரச தலைவராக்கும் நோக்குடன் அவரை இப்போதே அரசியல் புள்ளியாக்கும் பணிகளில் தீவிரமாக இறக்கியுள்ளார்.

இளைஞர்களின் விடிவிளக்கு என்ற அமைப்பின் தலைவரான நாமல் ராஜபக்சவை தென்னிலங்கையில் இளையோர் மத்தியில் பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள மகிந்தவின் மனைவி, அண்மையில் அவரை யாழ்ப்பாணத்துக்கும் அழைத்து சென்றிருந்தார். அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியாவில் தமிழ்மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் இவர் சென்று வந்தார்.

மொத்தத்தில், எதிர்காலத்தில் சிறிலங்காவின் நாயகனாக அவரை உருவாக்கிவிடவேண்டும் என்ற ஒரே நோக்குடன் சிராந்தி ராஜபக்சவின் காரியங்கள் கடுகதி வேகத்தில் செயற்படுத்தப்படுகின்றன.

தற்போது குடும்பத்தில் மறைமுகமாக ஆரம்பித்து வெளிப்படையாக தற்போது நடைபெற்றுவரும் இந்த சண்டையின் இடையே அகப்பட்டிருப்பவர் மகிந்த.

மகிந்தவின் மூத்த தமையன் நாமல் ராஜபக்ச. அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தொடர்ச்சியாக மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கி வந்தவர். அவர் தலையிட்டும் தீராத பிரச்சினையாக குடும்ப பிணக்கு கூடு கட்டிவிட்டது.

இந்த நிலையில், கோத்தபாயவுக்காக சிராந்தி தனது மகனை ஆட்சிக்கதிரையில் அமர்த்தும் திட்டத்தை விட்டுக்கொடுப்பாரா அது என்றைக்குமே நடக்கப் போவதில்லை என்று அரசு வட்டாரங்கள் அடித்து கூறுகின்றன.

சிராந்தியின் திட்டத்துக்கமைய கோத்தாபாயவை மகிந்த சமாதானம் செய்வாரா என்றால் அது இராணுவ சதிமூலம் ஆட்சியையே கவிழ்க்கும் நிலைக்கு செல்லக்கூடிய காரியமாக அமையலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடும்பத்தில் புற்றெடுத்துள்ள இந்த புதிய பிரச்சினையை பார்க்கும்போது மகிந்த மனைவியின் திட்டங்கள் எதிர்காலத்தில் புதுவீச்சடைந்து அவை எந்த விளைவையும் சந்திக்க தயாராகும் அஸ்திரங்களாக மாறப்போகின்றன என்பது நிச்சயம்.

இந்திரா காந்தி தனது மகன் ராஜீவை அரசியல் கொண்டுவந்த பிரதமராக்கியதும் சோனியா காந்தி தனது மகன் ராகுலை அரசியலுக்கு கொண்டுவந்து பிராமராக்குவதற்கு திட்டம் தீட்டுவதும் பெண் அரசியல் தத்துவங்கள். தாங்கள் நினைத்ததை செய்துமுடிப்பதில் பெண் அரசியல்வாதிகள் அதிக சிரத்தை காட்டுவது வழமை.

இது இவ்வாறு இருக்கையில், பிரதமராக தான் வருவதற்காக தனது கணவரையே கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி அதில் வெற்றி கண்டவர் சிறீமாவோ பண்டாரநாயக்க என்று சிங்கள தேசத்தில் இன்னமும் பேசப்படும் அரசியல் வரலாறாக இருக்கின்றபோது மகிந்தவின் மனைவி தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எவரையும் பலிக்கடாவாக்க துணியமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இன்று இடம்பெறும் குடும்ப குத்துவிட்டு நாளையே நாட்டை உலுப்பும் பூகம்பமாக வெடிக்கப்போவது உறுதி. நாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு நாடு நாடாய் போய் உதவி கேட்டு தற்போது தீர்வு கண்டுவிட்டதாக மார்தட்டும் மகிந்த, தற்போது ஏற்பட்டுள்ள வீட்டுப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு என்ன செய்யப்போகிறாரோ?.

தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.