Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனித் தமிழீழம் என்பதில் உறுதி--கே.பி குமுதத்திற்கு விசேட பேட்டி

Featured Replies

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இனிமேல் தலைவரின் இடத்தில் இருந்து வழிநடத்துபவராக அறிவிக்கப்பட்டுள்ளார் கே.பி. என்கிற செல்வராசா பத்மநாதன்.

`கே.பி. எனது உயிர் நண்பன்' என பலமுறை பிரபாகரனால் சுட்டிக்காட்டப்பட்டவர். குமுதம் பேட்டிக்காக செல்வராசா பத்மநாதனைத் தொடர்புகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரீஸில் சந்தித்திருக்கிறேன். இப்போதும் அந்த நிகழ்வை

அவர் நினைவில் வைத்திருந்தார்.

பிரபாகரனுடன் உங்களுக்கிருந்த ஆரம்ப கால உறவுகள் பற்றிச் சொல்ல முடியுமா?

``நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் தலைவர் தேடப்பட்ட நேரம்... 1976-ம் ஆண்டு... கொழும்பில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெறும் கைகளுடன் அகதிகளாக கப்பலில் ஏற்றப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்தில் வந்து இறங்கிய நேரம். எமது மக்களை இந்த நிலைக்குத் தள்ளிய சிங்கள வெறியர்களுக்கு எதிராக ஏதாவது செய்துதான் ஆகவேண்டும் என்ற வெறி என் இளம் ரத்தத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

இந்த நேரத்தில் நண்பர் ஒருவரின் ஊடாக தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டது. மாவிட்டபுரத்தில் ஒரு நண்பர் வீட்டில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தோம். நாங்கள் நால்வர். திடீரென கதவு தட்டப்பட்டது. திறந்தபோது ஒரு இளம் புலி, ஒப்பற்ற எனது தலைவன், நண்பன் எம் முன்னால் நின்றார். மிகவும் துடிதுடிப்பான, கட்டுப்பாடான, இறுக்கமான முகத்துடன் அகன்ற விழிகளால் அறையை ஒரு தடவை நோட்டம்விட்ட பின்னர், உள்ளே வந்தார். நாங்கள் அப்போதுதான் முதன்முதலில் அவரைச் சந்திக்கிறோம் என்றாலும், அவர் ஏற்கெனவே எம்மைப் பற்றி அறிந்து வைத்திருந்தார். `எனக்கு உங்கள் எல்லோரையும் பற்றி தெரியும்' என்றார்.

`நான் துரையப்பாவைத் தண்டித்துவிட்டு மயிலிட்டியில்தான் தலைமறைவாக பல மாதங்கள் இருந்தேன். நீங்கள் சாப்பிடும் கடையில்தான் தினமும் சாப்பிடுவேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் பார்த்தும் அறிந்தும் வைத்துள்ளேன்' என்றார். இப்படி எமது அறிமுகம் ஆரம்பமாகியது.''

புலிகள் இழைத்த சில தவறுகளும் தற்போதைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி போராட்டத்தை முன்னெடுக்க எவ்வாறான முனைப்புகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்?

``நாம் அதற்குரிய பணிகளை ஆரம்பித்துவிட்டோம். இப்போது, நாம் மீளாய்வு செய்து வருகிறோம். ஒரு நிறைவேற்றுக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். விரைவில் சாதகமான, நம்பிக்கையான பதில் கிடைக்கும்.''

உலகளவில் கட்டுக்கோப்பான போராளிகள் அமைப்புக்குப் பெயர் பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் இன்று சிறுசிறு குழப்பங்களும் பிளவுகளும் உருவாகியுள்ளதே, புலிகள் அமைப்பு உடைந்திருக்கிறதா?

``எமது இயக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. எமது இயக்கம் எமது தேசிய தலைவரினால் உருவாக்கப்பட்டது. எதிரிகள் எதிர்பார்ப்பது போல இலகுவில் எம்மைப் பிரிக்க முடியாது. நாம் எல்லோரும் எமது தேச விடுதலையை நோக்கி, வேகமாக வீறுநடை போடுவோம்.''

தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான வல்லரசுப் போட்டியும் தற்போதைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம். விடுதலைப்புலிகளின் அரசியலோடு தெற்காசிய வல்லாதிக்கப் போட்டி அரசியல் இணங்கிப்போகும் அறிகுறிகள் உண்டா?

``உலகம் நாளுக்கு நாள் புது மாற்றங்களைக் கண்டு வருகின்றது. `அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை'. இந்த நிலையில் எமக்குச் சாதகமான நிலை உருவாகும் என நம்புகின்றோம்.''

இந்தியா குறித்து தங்கள் நிலைப்பாடு என்ன?

``நாம் எப்பொழுதும் இந்தியாவிடம் பிரிக்க முடியாத நெருக்கமான உறவைப் பேணவே விரும்புகிறோம். இதற்குரிய முயற்சிகளைச் செய்து வருகிறோம். ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, இந்தியா தார்மீக ஆதரவைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.''

தனித் தமிழீழம் என்னும் நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியுடன் இருக்கிறீர்களா?

``ஈழத்தமிழ் மக்கள் தந்த ஆணை `தனித் தமிழீழம்'. இதில் மாற்றம் செய்யும் உரிமை எமது மக்களுக்கு மட்டும்தான் உண்டு.''.

http://www.appaa.com/index.php?option=com_...7&Itemid=54

`அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை'

ம்ம்ம்ம்ம்ம்ம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.