Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்

[படங்கள் இணைப்பு] ‘சிங்களப் பேரினவாததால் வதைபடும் தமிழர்களும் மறுக்கப்படும் மானிட உரிமைகளும்’ என்ற தலைப்பில் மதுரையில் 13.08.2009 வியாழக்கிழமை காலை கருத்தரங்கமும், அன்று மாலை மாநாடும் நடைபெற்றது.

madurai_13082009000.jpg

இந்தக் கருத்தரங்கில் துவக்கவுரை நிகழ்த்திய இலங்கையில் Platform for Freedom என்ற அமைப்பைச் சேர்ந்த நிமல்கா பெர்ணான்டோ, வன்னியில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்ட்டுள்ள முகாம்கள் திறந்தவெளிச் சிறைச் சாலைகளாகவே உள்ளன என்று கூறினார்.

18 பேருக்கு ஒரு கழிப்பரை வசதி இருக்க வேண்டிய இடத்தில் 800 பேருக்கு ஒரு கழிப்பரை வீதம் உள்ளது என்றும், அவைகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கின்றன என்றும் முகாம்களில் நிலவிவரும் அவல நிலையை விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலர் தியாகு, நிமல்காவின் பேச்சு அங்குள்ள நிலைமையை உண்மையுடன் எடுத்துக் காட்டுகிறது என்றும், ஆனால் இங்குள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அந்த முகாம்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக உள்ளன என்று ராஜபக்ச அளித்த பேட்டி கேள்வி ஏதுமின்றி வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

போர்க் குற்றங்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் பிரிட்டோ தலைமையில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் அய்யநாதன், சிறிலங்க அரசு தொடுத்த இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்திருந்தும், போரை நிறுத்தி அவர்களை காப்பாற்ற உலக நாடுகளும், ஐ.நா.வும் தவறி விட்டன என்று குற்றம் சாற்றினார்.

இதே தலைப்ப்பில் உரை நிகழ்த்திய வழக்கறிஞரும், மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் பொதுச் செயலருமான வழக்கறிஞர் பாலமுருகன், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களுக்கான அடிப்படைக் காரணமாக இருக்கும் சம உரிமை கோரி நடைபெறும் விடுதலைப் போராட்டத்தை கருத்தில் கொள்ளாமல், மனித உரிமைகளை மட்டுமே பேசுவது பயனளிக்காது என்று கூறினார்.

ஈழப் பிரச்சனையில் ஊடகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றி விடுதலை இராசேந்திரன், ஈழத்தில் நடைபெற்றுவரும் இனப் படுகொலைத் தொடர்பான விவரங்களை பத்திரிக்கைகள் உள்ளிட்ட ஊடகங்கள் மறைத்துவரும் நிலையில், அது குறித்த உண்மைகளை இணையத் தளங்களின் வாயிலாக வெளிவந்ததைச் சுட்டிக்காட்டினார். இணையத்தை ஒரு மாற்று ஊடகமாக தமிழர்கள் கருதி தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இராசேந்திரன் கேட்டுக் கொண்டார்.

தமிழர் இனப் படுகொலையைத் தடுக்க தவறிய சர்வதேசச் சமூகம் என்ற தலைப்பில் உரையாற்றிய எழுத்தாளர் சூரியதீபன், இன்றுள்ள சர்வதேச ஒழுங்கின் அடிப்படைகளை விரிவாக விளக்கிப் பேசினார்.

madurai_13082009001.jpg

இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

ஈழத் தமிழர்களின் தாயகப் பூமியான வடக்குப் பகுதியில் சிங்கள இராணுவமும், விமானப் படையும் நடத்திய மிருகத்தனமான எறிகணைத் தாக்குதல்களுக்கும், குண்டு வீச்சுகளுக்கும் இந்திய அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ள அத்தீர்மானம், கனரக ஆயுதங்கள், இராடார்கள் போன்ற இராணுவ உதவி வழங்கியதோடு, இந்திய கடற்படை மற்றும் விமானப் படை கண்காணிப்பும், உளவுத் தகவல் பரிமாற்றமும் சிங்கள அரசின் கொடூரமான இனப் படுகொலையில் பெரிதும் உதவியுள்ளன. சிங்கள இனவெறி அரசு நடத்தும் தமிழின ஒழிப்புப் போரில் இந்திய அரசின் பங்கு என்ன என்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை இந்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளது.

ஆஸ்ட்ரேலயாவில் இங்கென்றும், அங்கொன்றுமாக இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோது அவைகளை வன்மையாகக் கண்டித்த மத்திய அரசு, ஈழத் தமிழர் மீதான ஒடுக்குமுறையையோ, இனப் படுகொலையையோ, தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படை சுட்டுக் கொல்வதையோ பற்றி எள்ளளவும் அக்கறை காட்டவில்லை. இந்திய அரசின் இந்த இரட்டை வேடத்தை வண்மையாக கட்டிப்பதாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய் நம்பியாரை நீக்க வேண்டும்!

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் நடேசன் பாலசிங்கம், அமைதிச் செயலகத்தலைவர் புலித் தேவன் ஆகியோர் வெள்ளைக் கொடியேந்தி சரண்டையச் சென்றபோது அவர்களையும், அங்கு நிராயுதபாணியாக இருந்த தமிழர்களையும் மிகக் கொடூரமாக கொன்று குவித்த சிங்கள இராணுவத்தின் செயல்களை முழுக்க அறிந்து, அதற்கு உடந்தையாக இருந்த ஐ.நா. மன்றத்தின் பணியாளர் தலைவர் விஜய் நம்பியார் மீது பொது விசாரணை நடத்த வேண்டும். அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவை மட்டுமின்றி, வன்னி முகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையையும், போர் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் ஐ.நா. வெளியிட வேண்டும் என்றும், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு முழுமையான நிவாரண உதவிகள் சென்று சேர சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தமிழர்களை இனப் படுகொலை செய்த அதிபர் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை போர் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை அளிக்க வேண்டும் என்றும், தமிழர்களின் பூர்வீக பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் திட்டத்தை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடுவோம் என்று அறிவித்து செயல்பட்டுவந்த விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் குழுத் தலைவர் செல்வராசா பத்மநாதனை சிறிலங்க, மலேசிய அரசுகள் சட்ட விரோதமாக கடத்திச் சென்றுள்ளன. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நியாயமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமை சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு உரிய அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாலை மதுரை வடக்கு மாசி வீதி – மேல மாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி. ம.தி.மு.க. பொதுச் செயலர் நாஞ்சில் சம்பத், இ.க.க. மாநில துணைச் செயலர் சி.மகேந்திரன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சே. இராசன் தலைமை வகித்தார்.

http://www.meenagam.org/?p=7911

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.