Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தமிழர்களை நாடுகடத்தும் முயற்சியில் பிரித்தானியா

Featured Replies

பிரித்தானியாவில் புகலிடம் தேடியுள்ள தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் பிரித்தானியா இறங்கியுள்ளதை அதன் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த கண்டனங்களை வெளிவிடும் பிரித்தானியா, மறு பக்கம் அங்கு தஞ்சமடைந்துள்ள தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. தற்போதைக்கு இந்தச் சிக்கல் நடராஜா என்பவருக்கு ஏற்பட்டுள்ளது.

நடராஜா யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். தற்போது பிரித்தானியாவிலுள்ள இவரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பியனுப்ப பிரித்தானிய அதிகாரிகள் கடந்த வருடம் முயற்சி செய்ததாக பி.பி.சி சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இவர், தாம் பிரித்தானியாவில் இருந்த வேளை, 2007 இல் தமது தகப்பனார் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டதாகவும் இதுவரைக்கும் அவர் பற்றிய தகவல் தமக்குத் தெரியாதென்றும் சொன்னார்.

2002 இல் தாம் புலிகள் இயக்கத்தை விட்டு விலகி இலங்கையில் இருந்தபோது, தம்மையும் கடத்திச் சென்று பலத்த சித்திரவதைகளுக்கு ராணுவம் உள்ளாக்கியதாகவும் அதற்கான சிகிச்சைகளைத் தாம் இப்போதும் தொடர்ந்து வருவதாகக் கூறினார். இவ்வாறான நிலையில் தாம் இலங்கைக்கு மீண்டும் எவ்வாறு செல்வதெனக் கேட்கிறார் இவர்.

தாம் இலங்கைக்கு திரும்பிச் சென்றால் தமக்கு மேற்கூறியவாறான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் சகல ஆவணங்களையும் தாம் சமர்ப்பித்துள்ள போதும், பிரித்தானிய அதிகாரிகளால் அதுபற்றிய தீர்மானம் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் கூறினார் இவர்.

இதேவேளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகம் கடந்த ஜூலை மாத அறிக்கையில், இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருந்தாலும் கூட, அங்கு மனித உரிமைகளுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு இன்னமும் கவலைக்கிடமாகவே உள்ளதால் அகதிகளை இப்போதைக்கு இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனக் கேட்கப்பட்டுள்ளது.

http://appaa.com/index.php?option=com_cont...6&Itemid=59

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பிரித்தானியா வாழ் இலங்கைத் தமிழர்கள்

வீரகேசரி வாரவெளியீடு 9/6/2009 9:39:52 AM -

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம் பெற்று வருவதாக பிரித்தானியா குற்றம் சாட்டி வரும் அதேவேளை, தமிழர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து இரட்டை வேடம் போடுகின்றது என அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த தமிழர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். தனது அகதி நிலை விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டது தொடர்பாக மேன்முறையீடு செய் வதற்கான அனுமதியை பிரித்தானிய உயர் நீதி மன்றம் வழங்குவதற்கு முன்னதாக தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு முயற்சிக்கின்றது என விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான நடராஜா தெரிவித்தார்.

"எனது அப்பா 2007 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டார். அப்போது நான் இங்கு இருந்தேன். 2002 ஆம் ஆண்டு நான் இலங்கையில் இருந்தபோது கடத்தப்பட்டு மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டேன். அதற்காக இப்போதும் மருந்துகளும், உளநல ஆலோசனையும் பெற்று வருகின்றேன் என பி.பி.ஸி சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டியில் நடராஜா கூறியுள்ளார். நடராஜா, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். கடத்தப்படுவதற்கு முன்னதாக அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகியிருந்தார். தான் நாட்டுக்குத் திரும்புவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறார் அவர்.

"நான் திரும்பிச் செல்ல முடியாது. எனது அப்பா எனக்காகத்தான் கடத்தப்பட்டார். எனது அப்பா எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கும் இன்னும் எதுவும் தெரியாது. நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னர் இருந்துள்ளேன். ஆகவே நான் எப்படி திரும்பிப் போக முடியும்? ஆனால் பிரித்தானிய அரச அலுவலகம் எனது விண்ணப்பத்தைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது" என்றார் நடராஜா.

தான் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அனுபவிக்கக்கூடிய துன்புறுத்தல்கள் குறித்து போதியளவு ஆவணங்களைச் சமர்ப்பித்தபோதும் கடந்த ஆண்டு தன்னை பிரித்தானிய அதிகாரிகள் பலவந்தமாக நாடு கடத்த முயற்சித்த னர் என அவர் குற்றம் சாட்டினார். தனது மேன்முறையீடு குறித்த விண்ணப்பம் இன்னும் தீர்ப்பு வராமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜூலையில் விடுத்த அறிக்கை ஒன்றில், சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்த அகதிநிலை அடைக்கலம் கோருவோரை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதை அனைத்து நாடுகளும் நிறுத்தி வைக்க வேண்டும் என அதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகத்தின் தூதுவர் கோரியிருந்தார். விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் இயல்பு நிலை அங்கு இன்னமும் திரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

"அவர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது மட்டுமல்லாமல் இலங்கையின் மனித உரிமைகள் நிலையும் கவலைக்கிடமாகவே இருக்கின்றது" என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கான அறிக்கை தெரிவித்திருந்தது. வடமேற்கில் வவுனியாவுக்கு அருகில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள 300000 வரையான மக்களின் துயரம் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களை பிரித்தானிய அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என தமிழ் அகதிகள் கூறுகின்றனர். ஜூலையில் மட்டும் இலங்கையைச் சேர்ந்த 12 பேரை, அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள், பிரித்தானிய அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர் என மேற்கு லண்டனில் உள்ள தமிழ் சனசமூக நிலையத்தைச் சேர்ந்த தவராணி நகுலேந்திரன் கூறுகின்றார். "இன்னும் 50 பேர் வரையிலான இலங்கை தமிழர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர் என்பது எனக்குத் தெரியும்" என்றார் அவர். "அவர்கள் ஒளிந்து திரிகிறார்கள். பயம் காரணமாக ஊடகங்களிடம் பேசுவதற்கு அவர்கள் தயாராக இல்லை" எனவும் அவர் கூறினார். அகதி நிலை கோரும் இலங்கைத் தமிழர்களுக்கு வேண்டிய சட்ட உதவிகளையும் மொழிப் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் தமிழ் சனசமூக நிலையம் வழங்கி வருகின்றது.

"அகதிநிலை அடைக்கலம் கோரும் தமிழர்களை பிரித்தானிய அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு அங்கே பிரச்சினைகள் ஏதும் இல்லை என்பதால் அவர்கள் திரும்பிச் செல்ல முடியும் என பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் கூறுகின்றது" என மேலும் தெரிவித்தார் தவராணி நகுலேந்திரன்.

2001 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த சிவஞானம் பகீரதன் என்ற தமிழர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு தான் இப்போதும் பிரித்தானிய அதிகாரிகளால் கேட்கப்பட்டு வருகிறார் எனத் தெரிவித்தார். பிரித்தானிய எல்லை முகவர் அமைப்பு அவரை நாடு கடத்துவதற்கு முயன்ற ஒரு சில நாட்களின் பின்னர் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அவரை வெளியேற்றுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்தது.

"கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நான் கைது செய்யப்பட்டேன். இலங்கைக்கான வானூர்தி ஒன்றிலும் ஏற்றப்பட்டேன். ஆனால், நான் இலங்கைக்கு திரும்பிச் செல்வதிலும் பார்க்க தற்கொலை செய்துகொள்வேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தேன். நான் என் கழுத்தை நெரித்ததுடன் தலையை மோதினேன். அதன் பின்னர் அவர்கள் என்னை வானூர்திக்கு வெளியே அழைத்து வந்தனர்" என்றார் அவர். "இப்போது நான் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. எனது பெற்றோரும் சகோதரர்களும் வன்னியில் உள்ள மல்லாவியில் வாழ்ந்தார்கள். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களுடனான தொடர்புகளை நான் இழந்துவிட்டேன். போர் முடிந்த பின்னரும் கூட கடத்தல்களும் கைதுகளும் அங்கு தொடர்ந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரித்தானிய அரசு கூறுகின்றது. ஆனால் பிரச்சினை அதுவல்ல. நான் திரும்பிச் சென்றால் புலனாய்வுத்துறையினரால் அல்லது துணைப் படைக் குழுவினரால் கைது செய்யப்படுவேன்" என மேலும் தெரிவித்தார் பகீரதன்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்கள், "வடபகுதியில் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் தமிழர்கள் பெரிதும் இலக்கு வைக்கப்படுகிறார்கள். பெருமளவிலான தடுத்து வைப்புக்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் அடைத்து வைப்பது என்பது கவலை தரும் விடயமாகவே உள்ளது" எனத் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் போர் வெற்றி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அரச படைகள் புலிகளுக்கு எதிரான போரின்போது பெருமளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்று பிரித்தானிய கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றது.

இந்நிலையில் அரசியல் அடைக்கலம் கோருவோரின் மனித உரிமைகளை பிரித்தானியா மீறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது மட்டுமல்ல, அவர்களின் உயிர்களையும் ஆபத்திற்குள் தள்ளி விடுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட அகதி நிலை விண்ணப்பங்கள் தொடர்பில் கருத்துக்கள் எதனையும் தெரிவிப்பதில்லை என்ற தனது நிலைப்பாட்டை பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் தொடர்ந்தும் பேணி வருகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பி.பி.ஸிக்கு கோரிக்கைக்கு எவ்வித பதிலும் உள்நாட்டு அலுவலகத்திடமிருந்து கிடைக்கப்பெறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.