Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏதிலி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும் – சிறிலங்கா அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதிலி முகாம் மக்களை விடுவிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க முடியும் – சிறிலங்கா அரசாங்கம்

வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள ஏதிலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை விடுவிப்பதற்கு விரும்பும் உறவினர் நண்பர்கள் விண்ணப்பிக்க முடியும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏதிலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்புவோர் விசேட விண்ணப்பப் படிவமொன்றை பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக உறவினர்கள் மற்றும் ஏனையோர் ஏதிலி முகாமில் உள்ள நபர்களுக்கு அடைக்கலம் வழங்க விரும்பினால் அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சிற்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடைக்கலம் வழங்க விருப்பம் தெரிவிப்போர் குறித்த நபர்களுக்கு தேவையன உணவு, உடை மற்றும் இருப்பிடங்களை வழங்குவதாக உறுதியளிக்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த விண்ணப்பப் படிவங்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வது மற்றும் அவற்றைப் பூர்த்தி செய்வது குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

தொலைபேசி இலக்கங்கள்

0094112 395524

0094112 395512

http://www.meenagam.org/?p=9954

இடம் பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 6,833 பேரை நாளை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 35,000 பேரின் விவரங்களை வவுனியா அரச அதிபர் யாழ்.செயலகத்துக்கு அனுப்பியிருந்தார்.

அந்த விவரங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. முதலில் கிடைத்த, தகவல்களின் அடிப்படையில் 6,833 பேர் வவுனியாவில் இருந்து நாளை அழைத்துச் செல்லப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மக்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக உறவினர்களிடம் சேர்க்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.