Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் எம்.பி. சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா?: ஜே.வி.பி. கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசில் எம்.பி. சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா?: ஜே.வி.பி. கேள்வி

சிறிலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாரா, அப்படியாயின் எப்பொழுது நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என ஜே வி பி கேள்வி எழுப்பியுள்ளது.

பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே..லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதே ஜே.வி.பி. எம்.பி.யான அனுரகுமார திஸாநாயக்க சபையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெவிக்கையில், சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தொடர்பில் எமது கட்சியின் உறுப்பினர் கேட்டிருந்த கேள்விக்கு 38 பேர் என்று தெவிக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்பான தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அந்தத் தகவல்களின் பிரகாரம் 38 ஆலோசகர்களே இருக்கின்றனர்.

சிறிலங்கா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் பெயர் உள்ளடக்கப்படவில்லை. அவ்வாறெனில் அவருடைய பெயர் நீக்கப்பட்டு விட்டதா? இல்லையேல் சிரேஷ்ட ஆலோசகர் இல்லையா? எனினும், ஊடகங்களில் அவருடைய பெயரை குறிப்பிட்ட போதும், பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பினர் உரையாற்றும் போதும், அவருடைய பெயரை குறிப்பிடும் வேளையிலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்றே விளித்து கூறுகின்றனர். எனினும், சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் அவருடைய பெயரில்லை.

அவருடைய பெயர் நீக்கப்பட்டு விட்டதா? அல்லது அப்பதவியில் அவர் இல்லையா? அப்பதவியில் அவர் இல்லையெனில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்று பெயரில் செய்யப்பட்ட காயங்களும் பெயரை பயன்படுத்தியமையும் சட்டவிரோதமானவை என்றார்.

இதேவேளை, பொலிஸ் தடுப்பின் கீழ் இருந்த ஒருவர் மரணமடைந்தாக நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டிய அனுரகுமார திசாநாயக்க, குறித்த நபர் களுத்துறையில் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 20ம் திகதி கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.

எனினும், அவர் கடந்த 2006ம் நவம்பர் 18ம் திகதியே மரணமடைந்தாக அதிகாரிகள் மரண சான்றிதழ் வழங்கியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.

http://www.meenagam.org/?p=10078

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.