Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்கு நாடுகளை மீண்டும் ஏமாற்ற முயலும் மகிந்த

Featured Replies

மேற்கு உலக நாடுகள் பிழைகளை சுட்டிக்காட்டுவது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு தமது அரசு கூறும் பொய்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ள மகிந்த மீண்டும் சர்வதேச நாடுகளை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நிறுத்தி விட்டு இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் தமது நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்குலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் இலங்கை விடயத்தில் மேற்குலக நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளன என்றும் அவர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த மே மாதம் வெற்றிகொண்ட பிற்பாடு, ஐரோப்பிய பத்திரிகையான "லி பிகாரோ"வுக்கு தாம் வழங்கிய முதலாவது பேட்டியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக நாடுகள் இலங்கை மீது குற்றம் சுமத்துவதையும் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யவேண்டும். இலங்கை மீது பூரண நம்பிக்கையும், விசுவாசமும் வைத்திருக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார நடவடிக்கைகளுக்கு எடுபடவே கூடாது. இலங்கை இராணுவத்துக்கு எதிராக மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுவரும் யுத்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கிறேன். இலங்கை இராணுவத்தினர் யுத்தத்தின் இறுதி நாள்களின்போது ஏராளமான இழப்புகளையும், பேரழிவுகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி உள்ளனர் என்று மேற்குலக நாடுகளால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. புலிகளுடன் போரிட்ட எமது இராணுவத்தினருக்கு நாம்தான் சம்பளம் வழங்கினோம். எமது இராணுவத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தோம். அவற்றைச் செய்தவை வெளிநாடுகள் அல்ல.

நாம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து மீட்டெடுத்தபோது எவ்விதமான உயிரிழப்புகளும் பொதுமக்களுக்கு ஏற்படவே இல்லை. ஆனால், புலிகளிடமிருந்து வடக்கு மாகாணத்தை மீட்டெடுத்தபோது ஒரு சில பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் இடம்பெற்றுத்தான் உள்ளன. ஆனால் நாம் பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கனரக ஆயுதங்களை யுத்தத்தில் பயன்படுத்தியிருந்தால் எமது இராணுவத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் ஏராளமான இழப்புகளை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். இராணுவத்தினர் கலகத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் நாம் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் குறித்து அன்றைய நாள்களில் பகிரங்கமாக வெளியில் சொல்லவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிப்பதற்கான துரும்புச்சீட்டாக இராணுவத்தினருக்கு ஏற்பட்ட பேரிழப்புகளைப் பயன்படுத்தி அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கின்றார்கள்.

மேற்குலக நாடுகள் இலங்கை விடயத்தில் இரட்டை வேடம் பூண்டுள்ளன. இந்நாடுகள் அரசை மட்டுமே விமர்சிக்கின்றன. புலிகள் எவற்றை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மேற்குலக நாடுகளின் நிலைப்பாடாகவே உள்ளது. புலிகள் படுகொலைகளைக் கூட செய்யலாம். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆனால், மேற்குலக நாடுகள் புலிகளின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை கண்டிப்பதும் இல்லை; கண்டுகொள்வதும் இல்லை. மேற்குலக நாடுகளின் இந்த இரட்டை வேடம் மிகவும் வெட்கக்கேடான விடயமாகும்.

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் முதல் கட்டமாக உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் அகதிகளை தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதி வழங்கவேண்டும். இந்த அகதிகள் அவர்களது சொந்த வீடுகளில் மீள் குடியேறுகின்றமையும் தங்கள் தங்கள் நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையும் முதலில் அனுமதிக்கப்படவேண்டிய மிகவும் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விடயங்களாகும். அதன்பின் நாம் எமது நாட்டை நிச்சயம் அபிவிருத்தி செய்வோம்.

அகதிகளின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நிலங்களில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் பாரிய தடைக்கற்களாக இருகின்றன. நாம் எதிர்பார்த்ததை விட இந்த நிலக்கண்ணிவெடிகளால் ஏற்பட்டிருக்கும் தடைகள் மிகவும் பாரதூரமானவையாகும். எமது இராணுவத்தினர் இந்த நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில் அல்லும் பகலும் கடுமையாக ஈடுபட்டு வருகிறார்கள்.சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான அகதிக் குடும்பத்தினர் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள். அவ்வாறே வயதானவர்களும் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். செப்ரெம்பர் மாத நடுப்பகுதிக்குள் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் அகதிகள் முகாம்களை விட்டு வெளியேறி மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருப்பர்.

நாம் எமது மக்களை நிலக்கண்ணி வெடிகளுக்குப் பலிக்கடாக்கள் ஆக்கமுடியாது. அத்துடன் முகாம்களில் தங்கியிருப்பவர்களில் யார் சாதாரண பொதுமக்கள்? யார் பயங்கரவாதத் தொடர்புடையவர்கள் என்று பிரித்தறிய வேண்டிய தேவை எமக்கு உள்ளது. புலிகள் மக்களோடு மக்களாக அகதி முகாம்களில் தங்கியுள்ளார்கள். புலிகளைச் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க இயலாது. முகாம்களில் பொதுமக்களைத் தங்க வைத்திருப்பது எமது தவறு அல்ல. அகதிகளில் எத்தனைபேர் புலித் தலைவர்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று கண்டறிய வேண்டியுள்ளது.

அகதிகள் மீள் குடியேற்றத்தை தொடர்ந்து நான் அவசரகாலச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுப்பேன்.

நான் அடுத்த வருட ஆரம்பத்தில் இயலுமான விரைவில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளேன். நாம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாராக உள்ளோம். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு கொஞ்சம் அப்பாலும் செல்லத் தயாராக உள்ளோம்.

யுத்தத்தின் காரணமாகவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழ்த் தலைவர்கள் எப்போதும் அதிகமாகவே கேட்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் எப்போதும் சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவற்றையே அடைய விரும்புகிறார்கள். பொதுமக்களுக்கு யுத்தத்தில் ஒருபோதும் விருப்பமே இல்லை.

சனல் 4 வீடியோ காட்சிகள் பொய்யானவை, போலியானவை என்பதை நிரூபிப்பதற்கு எம்மிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. புலிகள் வேண்டுமென்றே இராணுவ சீருடையை அணிந்து இவ்வாறான ஒரு வீடியோ காட்சியை எடுத்திருக்கின்றார்கள். புலிகள் இராணுவத்தினரின் உடைகளைப் பயன்படுத்தி இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை இலங்கைப் படையினருக்கு எதிராக முடுக்கி விட்டிருப்பது இது முதல் தடவை அல்ல.

மேற்குலக நாடுகளுக்கு எதிரான நாடுகளுடன் மட்டும் நான் நட்புப் பாராட்டுகிறேன் என்பது உண்மையல்ல. மேற்குலக நாடுகளுடனும் நல்ல நட்புகளைப் பேணவே விரும்புகிறேன். ஆனால் மேற்குலக நாடுகள் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனது நட்பைக் கோரும் நாட்டுடன் நானும் நெருக்கமாகவே செயற்படுவேன். அணிசேரா அமைப்பின் ஸ்தாபகர்களுள் இலங்கையும் ஒன்று. இவற்றின் காரணமாகவே லிபியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு நட்பு பாராட்டிச் சென்றுள்ளேன். நான் சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியாவுக்கும் செல்லவுள்ளேன் என்றார்.

http://www.parantan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.