Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணித்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்குலகின் மாற்றங்களினூடாகப் பயணித்து எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும்: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை ஆசிரியர்

இலங்கைத் தீவில் தமிழினப் படுகொலை ஒன்று அரங்கேறுவதற்குத் துணை நின்ற சக்திகள், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான இலங்கையின் அணுகுமுறையால் வெகுவாகக் குழம்பிப் போயுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால், இந்து சமுத்திர பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும் என்று நம்பியிருந்த மேற்குலக ராஜபக்ஷ சகோதரர்களின் அடாவடி நடவடிக்கைகளினால் ஆத்திரமுற்றுள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் இலங்கை அரசு தமிழர்கள் மீது நட்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அரவணைத்து ஆறுதல் படுத்துவதன் மூலமே இலங்கைத் தீவில் நீண்ட கால அமைதியை உருவாக்க முடியும் என்று எதிர்பார்த்திருந்த மேற்குலகுக்கு இலங்கை ஆட்சியாளர்களின் அணுகுமுறை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை பிரிக்க முடியாத இலங்கைத் தீவிற்குள் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் உணர்வுடன் கூடிய அடக்கு முறை ஊடாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றது.

இது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போகாததனால், இலங்கையுடனான மேற்குலகின் உறவு வேகமாக சிதைவுற்று வருகின்றது.

சிங்கள தேசத்தின் கொடூரங்களிலிருந்தே தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உருவானது என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளத் தவறிய மேற்குலகு, விடுதலைப் புலிகளை இல்லாது ஒழித்துவிட்டால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தது.

அமெரிக்கா மீதான 11 செப்ரம்பர் தாக்குதலின் பின்னரான ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு எதிரான உலகின் கருத்தியலை இலங்கை தமிழர்களுக்கு எதிரான தனது இன அழிப்பு யுத்தத்திற்கான அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு தீவிரமாகச் செயற்பட்டது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை விரிவு படுத்தும் நோக்கோடு போட்டி போடும் சீனாவும், இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சினையின் தார்ப்பரியத்தையும், அது தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் பின் தள்ளின.

சீனாவின் பிடியில் இலங்கை முற்றாக வீழ்ந்துவிடக் கூடாது என்ற மேற்குலகின் விருப்பங்கள் இந்தியாவின் பக்கம் சாய்ந்ததனால் தமிழீழ மக்கள் தனித்து விடப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை இந்திய நிகழ்ச்சி நிரலுக்குச் சார்பாக நடந்து கொண்ட மேற்குலகு, இறுதி நாட்களில் தமது முடிவை மாற்றிக்கொள்ள முற்பட்ட போது, இந்தியா அதற்கு முட்டுக்கட்டை போட்டு, முற்று முழுதான தமிழின அழிப்பிற்கான கால அவகாசத்தை சிங்கள தேசத்திற்குப் பெற்றுக் கொடுத்தது.

மிகப் பெரிய மனிதப் பேரவலம் நடைபெற்று முடிந்த பின்னரும் இந்தியா தனது தமிழர் எதிர் நிலையிலிருந்து மீண்டு வராத நிலையில் மேற்குலகம் இலங்கை மீதான அழுத்தங்களை இறுக்கி வருவதை தற்போது அவதானிக்க முடிகின்றது.

இதன் ஒரு முக்கிய பாகமாகவே இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கி வந்த ஜி.எஸ.பி. பிளஸ் வரிச் சலுகையை நிறுத்தும் முடிவை ஐரோப்பிய யூனியன் எடுத்துள்ளது.

அத்துடன், இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்து ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பாலிக ஹோகன்ன, இலங்கையின் உல்லாசப் பயணத்துறை பிரதி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா ஆகியோருக்கு இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெலவுக்கு கனடா அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளது.

மேற்குலகை அலட்சியப்படுத்தும் இலங்கை அரசின் போக்குக் காரணமாக மேலும் பல அழுத்தங்களை இலங்கை அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குலகின் விருப்பங்களுக்கு மாறாக வவுனியா முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும், மேற்குலகின் வேண்டுகோளுக்கு மாறாக ஐ.நா. பணியாளர்களை நாடு கடத்துவதும், ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கிய 20 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனையும் மேற்குலகை அதிருப்திக்குள்ளாக்கியுள்ள

இங்கை ஒண்டு ....... சர்வதேசத்தின் மாற்றங்களுக்கு அமைவாக ... பயணிக்க வேண்டும் எண்டுது!

அங்கை ஒண்டு ........ வுபுகளின் வலையில் சர்வதேசம் எண்டுது!!!

........ தாங்கதடா சாமி!!!! .... விட்ட ராக்கட்டுகள் போதும்(லெனின்கிராட்டிலிருந்

... உதை "சுடலை ஞானம்" என்ன "கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்" என்கிறதோ .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.