Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவே அகதிகள் அழைக்கப்பட வேண்டும் ‐ மங்கள சமரவீர ‐ தயா மாஸ்டரும், ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவிக்க முடியுமாயின் குற்றம் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது –றணில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் காரணமாக முகாம்களில் உள்ள அகதிகளை பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என அழைக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தொழில் வாய்ப்பு, பணம், உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளைக் கொண்ட நபர்களை எவ்வாறு உள்ளக இடம்பெயர்வாளர்கள் என அழைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அகதி முகாம்களில் தங்கியிருந்த 10,000 பேரைக் காணவில்லை என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் அண்மையில் தெரிவித்திருந்தார் எனவும், அந்தக் கூற்றை அரசாங்கமே மறுத்ததாகவும் அகதிகள் காணாமல் போகவில்லை எனவும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்தே மக்கள் தப்பிச் செல்வார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு, அனுராதபுரம், பூசா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு போன்ற இடங்களில் எவ்வித குற்றச்சாட்டும் இன்றி தமிழ் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தடுப்பு முகாம்களில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகல்கள் வெளியிடப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், பிணையில் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களுக்கு உரிய நியாயம் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி,எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உயரதிகாரி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயா மாஸ்டரும், ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவிக்க முடியுமாயின் குற்றம் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டு உள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது –றணில்:

யுத்தம் காரணமாக அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் ஆகியோரது முழு விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியிடப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனோரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்படுவதன் மூலம் உறவினர்கள் அதிகளவு நன்மையடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தயா மாஸ்டரும், ஜோர்ஜ் மாஸ்டரையும் விடுவிக்க முடியுமாயின் குற்றம் சுமத்தப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான நபர்களை ஏன் விடுதலை செய்ய முடியாதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் மற்றும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும் ஐக்கிய சமத்துவக் கட்சியின் செயலாளருமான சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் போனவர்கள் மற்றும் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் பூரண விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1...14600&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.