Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழையிலை போலவந்த செல்லம்மா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழையிலை போலவந்த செல்லம்மா!

தாழையாம் பூ முடிந்துத்

தடம்பார்த்து நடைநடந்து

வாழையிலை போலவந்த செல்லம்மா!

என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா?

கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை.

'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன்.

"வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம். அப்படி நட்டவுடன் அதன் தண்டுப் பகுதியிருந்து முதல் இலை குருத்துவிட்டுக்கொண்டு எழுந்து வரும். எப்படி வந்தால் வாழைக்கன்று பிழைத்துக்கொண்டது என்று பொருள். அந்த முதல் இலைபோல தான் புகுந்த வீட்டைத் தழைக்கச் செய்ய அவள் வருகின்றக் காரணத்தால் அங்கே வாழையிலை என்ற வருணனையைக் கண்ணதாசன் பயன் படுத்தினார்" என்றார் ஒரு நண்பர்.

"அத்தோடு மட்டுமா? வாழை தழைப்பதற்காக வந்த அந்த முதல்இலை பின் வரும் இலைகள் வளர்ந்துத் தழைப்பதற்காகத் தான் நாருநாராகக் கிழிந்துத் தன்னை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறதே! அதுபோல் புகுந்த வீட்டில் கணவனுக்காக மாமனார் மாமியாருக்காக பிள்ளைகளுக்காகத் தன் இன்பதுன்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களுக்காக உழைத்துழைத்து உடல் மெலிந்து நூலாய்த்தேய்கிறாளே! அதனாலும் வாழையிலை என்று அவளை வருணித்தார்" என்றார் இன்னொரு நண்பர்.

ஒருவன் உடல்முழுதும் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் அவன் உடலைத் துணிகொண்டு மூட முடியாது. துணி தீக்காயங்களில் ஒட்டிக்கொண்டு மேலும் வேதனையை ஏற்படுத்தும் என்பதால் வாழையிலையைக் கொண்டு மூடி அவன் மானத்தைக் காப்பார்கள். வாழையிலை புண்ணோடு ஒட்டாமலும் அவனுக்கு மென்மேலும் வேதனையை ஏற்படுத்தாமலும் அவன் மானத்தைக் காப்பதாகவும் இருக்கும். அதுபோல் புகுந்த வீட்டில் தான் அடியெடுத்து வைப்பதற்குமுன் எத்தனைக் குழப்பங்களும் சிக்கல்களும் இருப்பினும் அதனைப் பெரிதுபடுத்தாது யார்யாரிடம் அப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பகுத்தறிவோடு புகுந்த வீட்டின் மானத்தைக் காப்பவளாகவும் இருப்பதால் வாழையிலை என்றான் கண்ணதாசன்" என்றார் மூன்றாமவர்.

நான்காமவர் வினோதமான ஆணாதிக்கம் மிகுந்த ஓர் கருத்தைக்கூறினார். அதாவது விழாக்களிலும் இல்லங்களில் நடக்கும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் வாழையிலையில் உணவு பரிமாறுவது வழக்கம். அப்படிப் பரிமாறப்படும் இலை ஒருவருக்குமேல் பரிமாறப் படுவதில்லை. அதுபோல் பெண்ணும் ஒருவனோடு உறவாடி இன்புற்று வாழவேண்டியவள் என்பதால் சாப்பாட்டு இலையோடு ஒப்பிட்டே கண்ணதாசன் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்று எழுதினான் என்றார்.

இதுவரை பேசாதிருந்த நான் பொறுமையிழுந்து விட்டேன். "அய்யா! தங்களின் ஆணாதிக்கச் சிந்தனையைக் கொஞ்சம் நிறுத்தும். நீங்கள் கூறுவதுபோல் சாப்பாட்டு வாழையிலையோடு பெண்ணை உவமித்து அந்த வரிகளைக் கண்ணதாசன் எழுதியிருக்கவே மாட்டான். பந்தியில் இடப்படுகின்ற வாழையிலை சுத்தமானதா? மற்றவர்கள் யாரும் அமர்ந்து உண்ணாத புதிய இலையா? என்றெல்லாம் பார்க்கிறோம். ஆனால் பந்தியில் அமர்ந்து உண்ணுபவர் இதற்குமுன் வேறு இலையில் உணவுண்டவரா? சுத்தமானவரா? என்று பார்ப்பதில்லை. இவ்விடத்தில் சாப்பாட்டு இலையோடு பெண்ணைத் தாங்கள் ஒப்பிடுவீரே யானால் ஆணுக்குக் கற்புநிலை தேவையில்லை என்பது போலல்லவா இருக்கிறது!. பந்தியில் இடப்படும் முன் வாழையிலை (அல்லது) சாப்பாட்டு இலை என்ற பேர்கொண்டு அழைக்கப் படும் இலையைப் பந்திகண்டபின் எச்சிலை என்கிறோம். மணம்புரிந்து முதலிரவு கண்ட பெண்ணும் எச்சிலாகிவிடுகிறாளா என்ன? அவளை எச்சில்பெண் என்றா அழைக்கிறோம்? இல்லையே! மாறாக திருமதி என்று உயர்வாக அல்லவா அழைக்கிறோம்!

பந்தியில் அமர்ந்து உண்டவர் எழுந்து சென்றவுடன் அவர் அமர்ந்து உண்ட இலையை எடுத்துக் குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறார்கள். பெண்ணை மணந்த கணவன் அகால மரணமடைந்து விட்டால் அவ்வெச்சில் இலையைப் போல் அவளும் வீட்டின் மூளையில் அமர்த்தப் படவேண்டியவளா? மறுமணம் செய்து வைத்து அழகுபார்க்கப் படவேண்டியவளல்லவா அவள்?

இப்படியானால் இவ்விடத்தில் பெண்ணைத் தட்டோடல்லவா ஒப்பிடவேண்டும். ஏனென்றால் தட்டையல்லவா நாம் ஒவ்வொரு முறையும் கழுவிச்சுத்தம் செய்து உணவிட்டு உண்ணுகிறோம். கழுவியத் தட்டு சுத்தமானது என்று நாம் கருதுவதைப்போல் ஒழுக்க நெறி தவறாத பெண்ணும் சுத்தமானவள் என்று கருதுவதுதானே சாலச்சிறந்தது! என்றேன்.

மேலும் வாழையிலை போலவந்த செல்லம்மா! என்ற வரியை இலக்கியப் பாடல் வரிகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது மிக அவசியமாகிறது.

கம்பன் ஓர் அழகிய வெண்பா வடித்தருளியிருக்கிறான்.

பாடல் இதுதான்:-

அவனி முழுதுண்டும் அயிரா வதத்துன்

பவனி தொழுவார் படுத்தும் -புவனி

உருத்திரா! உன்னுடைய ஓரங்கல் நாட்டிற்

குருத்திரா வாழைக் குழாம்!

-என்பதே அவ்வெண்பா!

பாடல்விளக்கம்:-

இந்திரனின் அயிராவத்திற்கு நிகரான தன் யானையில் ஏறி ஓரங்கல் நாட்டையாளும் உருத்திரம் என்னும் மன்னன் ஊர்வளம் வருவது கண்டு அவன் அழகில் மயங்கிய இளம்பெண்களைக் காமவெக்கை நோய் பீடித்துக்கொள்கிறது.கலங்கிய பெற்றோர்கள் அவ்வெக்கை நோயைப் போக்க வாழையின் குருத்திலையைப் பரித்து வந்து அதில் தம் பெண்மக்களைப் படுக்கவைக்கின்றனர். இது அன்றாடம் தொடர்கதையாவதால் அந்நாட்டில் உள்ள வாழைகளுக்கு எதற்குமே குருத்திருப்பதில்லை. குருத்துவிடக் குருத்துவிட அதைப் பரித்துக்கொண்டு போய் தம்பெண்மக்களை அதில் கிடத்திவிடுகிறார்கள் என்பதே அதன் பொருள். (இதன்மூலம் வாழையிலைக்கு உடல் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது புலப்படுகிறது)

உடல்சூட்டைத் தணிக்கும் அவ்வாழையிலை போல கொண்டவனின் காம இச்சையைத் தணிப்பதற்காக அவள் வருவதாலும் அங்கே வாழையிலை என்று ஒப்பிட்டான் என்றேன்.

இடுகையிட்டது அகரம் அமுதா

http://ilakkiya-inbam.blogspot.com/2008/06/blog-post_10.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.