Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத்திற்கெதிராக விசாரணை நடத்த அமெரிக்காவுக்கு உரிமையில்லை ‐ கோத்தபாய ‐ கான் என்ற பெயருடைய பிரபலங்களைக் கூட மேற்குலகு பிரவேசிக்க அனுமதிப்பதில்லை – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கான் என்ற பெயருடைய பிரபலங்களைக் கூட நாட்டிற்குள் பிரவேசிக்க சில மேற்குலக நாடுகள் அனுமதிப்பதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தோரை மீளக் குடியேற்ற வேண்டுமென கடும் அழுத்தம் கொடுத்து வரும் பல நாடுகள், இனவாத செயற்பாடுகளை கட்டவிழ்த்துவிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

20,000 பயங்கரவாத சந்தேக நபர்கள் கலந்திருக்கும் முகாம்களை உடனடியாக விடுவிக்கக் கோருவது என்ன விதத்தில் நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வயம்ப அபினந்தன பாராட்டு விழா வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சர்வாதிகார கட்டளைகளை பிறப்பிக்கும் மேற்குலக நாடுகள், இலங்கை மக்கள் கடந்த மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி தவித்தமையை புரிந்துகொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் சக்தி வாய்ந்ததும், பலம்பொருந்தியதுமான பயங்கரவாத அமைப்பை எனது மக்கள் இல்லாதொழித்துள்ளனர் என்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

வெட்ட வெளியான பிரதேசமொன்றிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் விரட்டியடிக்கப்படவில்லை, மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தப் பிரதேசங்களில் பல்லாயிரக் கணக்கான நிலக்கண்ணி வெடிகள் பொருத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இந்த நிலக்கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் பின்னர் மக்களை மீளக் குடியேற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாட்டு அரசாங்கமும் தமது மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதனை விரும்பாது எனவும், வெள்ள அனர்த்ததில் பாதிக்கப்பட்டு இந்த மக்கள் முகாம்களில் அடைக்கலம் புகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை புலிகளுக்கு எழுதிக்கொடுத்த காலம் ஒன்று காணப்பட்டதென்பதனை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு ஒதுக்கப்படவோ அல்லது தண்டனை வழங்கப்படவோ மாட்டாது எனவும், மாறாக அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டை பாதுகாப்பதற்காக படைவீரர்களினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புக்கள் ஒருபோதும் மறக்கப்படாது எனவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உரிய கௌரவம் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய் நாட்டின கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் சில சக்திகள் எதனை அடைய எதிர்பார்க்கின்றதென்பது தமக்கு புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா தலிபான்களை ஒடுக்குவதற்காக கடைபிடிக்கும் பயங்கரவாத ஒழிப்பு நடைமுறையானது ஏனைய நாடுகளுக்கும் பொதுவானது கோத்தபாய ராஜபக்ஷ:

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை படையினர் செயற்பட்டமை தொடர்பாக இரட்டை நிலைப்பாடுகளில் இருந்து செயற்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்பிக்கப்பட உள்ள இலங்கை படையினருக்கு எதிரான யோசனை தொடர்பாகவே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா தலிபான்களை ஒடுக்குவதற்காக கடைபிடிக்கும் பயங்கரவாத ஒழிப்பு நடைமுறையானது ஏனைய நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார். அதேவேளை விடுதலைப்புலிகளின் தோல்வியை தவிர்க்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட சுமார் 20 சர்வதேச மற்றும் தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் குறித்த தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன. இவர்கள் யார் என்பதும் தற்போது தெரியவந்திருப்பதாகவும் அரசத் தரப்பினர் கூறியுள்ளனர்.

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள அமெரிக்க சென்றிருந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் இரண்டு பிரதானிகள், அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து ரகசிய பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இலங்கைப் படையினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விஸ்வநாதன் உருத்திரகுமாரனே அமெரிக்காவிடம் முதலில் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க காங்கிரசில் நடைபெற உள்ள விசாரணைகளில் சமூகமளிக்க எந்த இராணுவ அதிகாரிகளையும் அங்கு அனுப்ப போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு எதிராக விசாரணைகளை நடத்த அமெரிக்காவுக்கு எந்த உரிமையுமில்லையாம் கூறுகிறது இலங்கை:

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட்ட இலங்கை இராணுவத்திற்கு எதிராக விசாரணைகளை நடத்த அமெரிக்காவுக்கு எந்த உரிமையுமில்லை என அரசாங்கம், அமெரிக்க அதிகாரிகளுக்கு நேற்று அறிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட 65 ஆயிரம் பேரை கொன்ற விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இலங்கை இராணுவம் போரிட்டது.

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு, இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்த அமெரிக்க காங்கிரசுக்கு அதிகாரமில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தோல்வியடைந்த பின்னர், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதுடன், அமெரிக்காவில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் இதற்கு உதவி வருவதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

http://www.globaltamilnews.net/tamil_news1...14717&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.