Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி.எஸ்.பி. பிளஸ் மற்றும் ஏனைய கதைகள் சுனந்த தேசப்பிரிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜி.எஸ்.பி. பிளஸ் மற்றும் ஏனைய கதைகள் சுனந்த தேசப்பிரிய:

இலங்கை இன்று சர்வதேச ரீதியில் எதிர்நோக்கிவரும் பாரிய பிரச்சினை என்ன? மேலோட்டமாக பார்க்கும் போது பல பிரச்சினைகளை இலங்கை எதிர்நோக்கி வருகின்றது. தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 12வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆற்றிய உரையின் அடிப்படையில், சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் இலங்கை மனித உரிமை சம்பந்தமாக மூன்று விடயங்கள் தொடர்பாக அக்கறை செலுத்துகிறது.

வவுனியா தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் வன்னி மக்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. செனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட மனித படுகொலைகளைச் சித்தரிக்கும் காட்சிகள் போலியானது என நிராகரித்தல். மூன்றாவது, ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு விதிக்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத்தண்டனையை நியாயப்படுத்தல். ஆகிய மூன்று விடயங்கள் குறித்தே இலங்கை அரசாங்கம் அக்கறைச் செலுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரான நவநீதன்பிள்ளை தனது ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பாக இரண்டு விடயங்களை முன்வைத்திருந்தார். ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகம் சிறைவைக்கப்பட்டவை (இலங்கையின் ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பாக நாம் அனைவரும் கவலையடைகிறோம்) இரண்டாவது, வன்னி மக்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை. இலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படையற்ற வகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படையாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்களுக்குச் செல்ல மனித நேய உதவி அமைப்புக்களுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிவாரண அமைப்புக்களின் அதிகாரிகள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என நவநீதன்பிள்ளை தெரிவித்திருந்தார். அமைச்சர் மகிந்த சமரசிங்க, இலங்கைக்கு இதுவரை கிடைத்துவந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரணம் அற்றுப் போகக் கூடியதாகக் காணப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்து எதனையும் சர்வதேச சமுகத்திற்குத் தெரிவிக்கவில்லை.

இந்த வரி நிவாரணத்தின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 7200 பொருட்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் கிடைத்து வந்தன. இதன்மூலமே சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் குறைந்த விலையிலான உற்பத்திகளோடு இலங்கை உற்பத்தியாளர்கள் போட்டியிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 27 மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கடைபிடிக்கும் நாடுகளுக்கே ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், இலங்கை கடந்த காலங்களில் மனித உரிமைகள் விடயங்களைக் கடைபிடிக்கவில்லையென்றே கூறப்படுகிறது. எனக்குத் தெரிந்து பல வருடங்களாக இலங்கையிலுள்ள பல மனித உரிமை அமைப்புகள் இந்த நிவாரண சலுகைகளை மனித உரிமைகளை மதிக்கும்படியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பயன்படுத்த வேண்டுமெனக் கூறிவருகின்றன. இதில் ஒரு முன்னேற்றம் என்னவெனில், ஜெனீவா மனித உரிமைக் குழுவின் தீர்மானங்களை மதிக்க வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தவிர்த்து வந்துள்ளது. (ராவய ஆசிரியர் விக்டர் ஐவன், சின்னராசி ஆயர் ஆகியோர் இந்தக் குழுவின் முன் தாக்கல் செய்த வழக்குகள் இலங்கை அரசுக்கு பாதகமான தீர்ப்புக்களை வழங்கின.

எனினும், இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்ப்புக்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டுவந்தது) 2005ம் ஆண்டின் பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் இலங்கைக்கு அற்றுப் போகும் நிலை இருந்த போதிலும், அந்த வருடத்தின் இறுதியில் இலங்கை எதிர்கொண்ட சுனாமி அனர்த்தம் காரணமாக ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரணத்தை மேலும் மூன்று வருடங்களுக்கு இலங்கைக்கு

வழங்குவதென ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தது. இந்த நிலையில், 2008ம் ஆண்டின் பின்னர், இந்த வரி நிவாரணத்தை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து விசாரணைகளை நடத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் யோசனை முன்வைத்தது.

எனினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறான விசாரணைகளுக்குத் தாம் இணங்கப் போவதில்லையெனத் தெரிவித்தது. எனினும், ஐரோப்பிய ஒன்றியம் இந்த விசாரணைகளுக்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமித்தது. கடந்த மூன்றாம் திகதி வெளியாகிய இக்கனநொமிக்ஸ்ட் சஞ்சிகையின் அடிப்படையில் அந்த ஆணைக்குழு 130 பக்கங்கள் அடங்கிய இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இலங்கை முக்கியமான மனித உரிமை விடயங்களை கவனத்திற்கொள்ளாது தவறவிட்டிருப்பதாகவும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரணத்தைப் பெற இலங்கை பொருத்தமற்றது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

காவல்துறை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள், ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றமை, அரசியல்மயப்படுத்தப்பட்ட நீதித்துறை, விசாரணைகள் நடத்தப்படாத காணாமல் போனவர்கள் குறித்த சம்பவங்கள் போன்ற குற்றங்களுக்கு தண்டனை வழங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பது புதிய வகையிலான சிறைபிடிப்பாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரணம் இல்லாமல் போகும் நிலையில், இலங்கையின் ஆடைத் தொழில்துறை மாத்திரமல்லாது மேலும் பல தொழில்துறைகளுக்கு அது மரண அடியாகவே இருக்கக்கூடும். இந்தத் தீர்க்கமான பிரச்சினை குறித்து விசேடமாக மனித உரிமைகளுடன் தொடர்புடைய இந்த விடயம் குறித்து ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை கருத்துக்களை வெளியிடாமையானது அதிசயமானதாகும்.

அந்த வரி நிவாரணத்தை வழங்குமாறு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. நிறைவேற்றப்படாத மனித உரிமைகள் தொடர்பாக கூறுவதற்கு எதுவும் இல்லை என்பதே இதன்மூலம் தெரியவருகிறது. உண்மையில் வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் வன்னி மக்களின் பிரச்சினையைத் தவிர இலங்கைக்கு சர்வதேச ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் தேசிய ரீதியான பிரச்சினையானது ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணமாகும்.

வவுனியா தடுப்பு முகாம்களில் இருக்கின்ற மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் குறித்து விரிவாக விளக்கிய அமைச்சர், தீர்க்கமான பல விடயங்களைத் தவறவிட்டிருந்தார். அதில் முக்கியமானது கடந்த மே 26ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான விசேட கூட்டத்தொடரில் வழங்கிய உறுதிமொழியாகும். முகாமில் வைக்கப்பட்டுள்ள மக்கள் 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

இந்த நாட்கள் குறித்து இம்முறை முழுமையாக அரசாங்கம் மறந்துபோயிருந்தது. அதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க அரசியல் தீர்வு குறித்து தொடர்ந்தும் கூறிவந்தார். எனினும் இம்முறை இலங்கை அரசாங்கம் இதுகுறித்து எந்த வார்த்தையையும் குறிப்பிடவில்லை. அத்துடன், ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, யுத்த காலத்தில் அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராயும் கட்டமைப்பு தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் முன் வழங்கிய உறுதிமொழிகளானது, இலங்கை அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கும் உறுதிமொழிகள் போன்று காற்றில் பறக்கவிடப்படுமா?

http://www.globaltamilnews.net/tamil_news1...14763&cat=5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.