Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. கூட்டத் தொடரை மகிந்த தவிர்த்துக்கொண்டது ஏன்?: இராஜதந்திர வட்டாரங்களில் எழுப்பப்படும் பலமான கேள்வி

Featured Replies

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 64 ஆவது அமர்வில் தான் கலந்துகொள்ளாமல் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்துள்ள முடிவானது இராஜதந்திர மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்த பின்னர் இடம்பெறும் முதலாவது பொதுச் சபைக் கூட்டமாக இது இருப்பதால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாம் பெற்ற வெற்றியைப் பறை சாற்றுவதற்கான ஒரு மேடையாக இதனை மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இதில் கலந்துகொள்ளாததது பெரியளவில் வெளிப்படையாகத் தெரியும் ஒன்றாகவுள்ளது என அவதானிகள் கருதுகின்றார்கள்.

"போரில் வெற்றி பெற்றமை தொடர்பாக அனைத்துலக சமூகத்தின் முன்பாக வெளிப்படுத்துவதற்கான சிறந்த ஒரு இடமாக மகிந்த ராஜபக்சவுக்கு நியூயோர்க் சிறந்த ஒரு இடமாக இருந்திருக்கும்" என மேற்கு நாட்டு மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறும் சென்னையில் இருந்து வெளியாகும் 'இந்து' நாளேடு, "நியூயோர்க்குக்குப் பயணம் செய்வதில்லை என்ற தீர்மானத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே மகிந்த ராஜபக்ச எடுத்திருக்கின்றார்" எனவும் "அவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்குப் பல காரணங்கள் அவரை நிர்ப்பந்தித்திருக்கலாம்" எனவும் தெரிவித்துள்ளது.

அரச தலைவரின் செயலகம் இது தொடர்பாக தகவல் எதனையும் வெளியிடாமல் தொடர்ந்து மெளனமாக உள்ளது.

இதேவேளையில் ஐ.நா.வின் 64 ஆவது அமர்வில் சிறிலங்காவின் சார்பில் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க கலந்துகொள்ளவிருப்பதுடன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வார் என கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அரச செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.