Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்போதுள்ள முதலமைச்சர்களில் பிள்ளையானைத் தவிர வேறு எந்த முதலமைச்சருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தெரியாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரால் இன்று கைதுசெய்யப்பட்ட அவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பதில் நீதவான் உத்தரவிட்டார். தேவையற்ற வகையில் மக்களை ஒன்றுகூட்டியமை, சட்டவிரோதமாக ஊர்வலம் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

நிஷாந்த முத்துஹெட்டிகமவினால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல நடிகை அனார்கலி ஆகர்ஷா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.

இதனையடுத்து அவரைக் கைதுசெய்த காவல்துறையினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர். எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், காவல்துறையினருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமொன்றை நடத்தியிருந்தார். இந்த நிலையில், கடந்த 19ம் திகதி காலியில் உள்ள அவரது வீட்டில் ஊடகவியலாளர்களிடம் பேசிய நிஷாந்த முத்துஹெட்டிகம, தானே அடுத்த தென் மாகாண சபையின் முதலமைச்சர் எனவும் தனக்குப் பிரமாணம் செய்துவைப்பது மாத்திரமே ஜனாதிபதியின் பணியெனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், தென் மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரங்கள் அவசியம் எனவும் தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும், ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது மாகாண சபைக்கு காவல்துறை அதிகாரங்களைப் பெறப்போவதாகவும் கூறியிருந்தார். 13வது அரசியலமைப்பில் உள்ள காவல்துறை அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நீதிமன்றம் சென்றாவது அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனைத் தவிர தனக்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் திறமை இருப்பதாகவும், இரண்டு கைகளினால் ஒரே நேரத்தில் துப்பாக்கிகளை ஏந்தி, எத்தனைப் பேரை வேண்டுமானால் சுடமுடியும் எனவும் கூறியுள்ளார். தற்போதுள்ள முதலமைச்சர்களில் பிள்ளையானைத் தவிர வேறு எந்த முதலமைச்சருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தெரியாது எனவும் அவர் கூறினார்.

தென் மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கிடையே விரிசல்கள் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விருப்பு வாக்குப் போட்டி ஏற்பட்டு மோதல் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சஜீன்வாஸ் குணவர்தனவை முதலமைச்சர் பதவியில் அமர்த்தும் நோக்கில் ஆளும் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நிஸாந்த முத்துஹெட்டிகம தானே அடுத்த தென் மாகாண முதலமைச்சர் என அறிவித்திருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் காணப்படும் விரிசலை வெளிக்காட்டியுள்ளதாக கூட்டமைப்பின் தென் மாகாண சபைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம் GTN

Edited by Bctamilan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதுள்ள முதலமைச்சர்களில் பிள்ளையானைத் தவிர வேறு எந்த முதலமைச்சருக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தத் தெரியாது

அப்படிப்போடு

அரிவாளை.........

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.