Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடக்கூடாது: சிறிலங்காப் பிரதமர்

Featured Replies

நாடுகளின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்களை துரிதமாக மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் எனவும் ஐ.நா.வின் 64 ஆவது பொதுச் சபை அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

ஐ.நா. சாசனத்தின் 2 (7) ஆவது பிரிவின் அடிப்படையில் மற்றொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாதிருக்கும் நிலைப்பாட்டை ஐ.நா. சபை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வல்லமையற்ற பெரும்பாலான எண்ணிக்கையான நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் 64 ஆவது அமர்வுகளில் கலந்துகொண்டு நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

"ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டிருப்பதன் பிரகாரம் நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா. தலையிடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் ஏற்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும். சகல வேளைகளிலும் இதற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஐ.நா. சபை மற்றும் ஐ.நா. பாதுகாப்புச் சபை மறுசீரமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது அவசியம். பலதரப்பு வாதத்தை வலுப்படுத்தல், ஜனநாயகத்தை மேம்படுத்தல், திறமை, பதிலளிக்கும் கட்டுப்பாடு என்பவற்றை ஐ.நா. முறைமையில் மேம்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியதாக மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

பல தசாப்த காலமாக புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளை நிறைவேற்றுவதறகு அரச முன்னுரிமை கொடுத்திருக்கின்றது. அனைத்துலக பங்காளிகளின் ஒத்துழைப்புடன் மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படும்.

அதேவேளையில், பாரியளவு மனித விலையைச் செலுத்தி நிலைநாட்டப்பட்டிருக்கும் உறுதித்தன்மை, பாதுகாப்பு தொடர்பான விட்டுக்கொடுப்புக்களுக்கு இடமில்லை.

குறிப்பாக பெரும் எண்ணிக்கையான விடுதலைப் புலி உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடர்ந்தும் கலந்து இருக்கின்றார்கள்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தரம் என்பவற்றில் அனைத்துலக கடப்பாடுகளுக்கு இசைவாக செயற்படுவதற்கு சிறிலங்கா உறுதி பூண்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்ட உள்ளூர் மட்ட நடவடிக்கைகள் மேலும் எடுக்கப்படும்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலகப் பிரதிநிதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களின் முன்னணி அமைப்புக்களுக்கு எதிராக அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கலான குற்றச்செயல்கள் ஊடாக அவர்களுக்கும் அவர்களின் முன்னணி அமைப்புக்களுக்கும் வரும் நிதிகள் மூலமாக ஆயுதங்களைச் சேகரித்தனர்.

பயங்கரவாதத்தை எமது மண்ணில் நாம் வெற்றிகரமாக முறியடித்திருந்தாலும், தமது மண்ணில் புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் வழிப்புடன் இருக்க வேண்டும்.

கடந்த காலத் தவறுகள் காரணமாக அனுபவங்களின் அடிப்படையில் பாதுகாப்பையும் நிலையான மீள்குடியேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள முடியாது என்பதை நாம் கற்றறிந்துள்ளோம்" எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.