Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதி உதவிகளை நிறுத்தி சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் தர நிதி வழங்குநர்கள் முடிவு: தமிழ் மக்களை உடன் விடுவிக்க வலியுறுத்தல்

Featured Replies

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக விடுவிப்பதற்கான அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்கு வழங்க அனைத்துலக நாடுகள் தீர்மானித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக வன்னி முகாம்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு நிதி உதவி அளிப்பதில்லை என்று நிதி வழங்கும் நாடுகள் முடிவு செய்துள்ளன.

தடுப்பு முகாம்களின் வழக்கமான பணிகளுக்காக பிரித்தானியா இனிமேலும் நிதி உதவி வழங்காது என்பது சிறிலங்கா அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

கொழும்பு சென்ற பிரித்தானிய அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர், லண்டனின் முடிவை சிறிலங்கா அரசிற்கு மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.

சிறிலங்காவிற்கு நிதி உதவிகளை வழங்கிவரும் ஏனைய நாடுகளும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்க உள்ளன எனவும் அவர் கூறினார்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை உடனடியாக - பருவப் பெயர்ச்சி மழை இந்த மாதம் தொடங்குவதற்கு முன்னர் - விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொழும்பிற்கு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையை அனைத்துலக நாடுகள் மேற்கொள்ள தீர்மானித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

போஸ்டர் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பைச் சென்றடைந்தார். வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

முகாம்களின் நிலைமைகள் மோசமாக இருப்பதால், பருவப் பெயர்ச்சி மழை தொடங்கியதும் நோய் வந்தே அந்த மக்கள் இறந்து விடுவார்கள் என்று போஸ்டர் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் மக்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இடம்பெயர்ந்த மக்களின் இந்த ஆண்டுக்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக இதுவரை 195 மில்லியன் டொலர் நிதி அனைத்துலக நிதி வழங்குநர்களால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முகாமில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாகச் சிறிலங்கா அரசு மூலமும் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

225 மில்லியன் டொலர் நிதி உதவியை இந்த ஆண்டில் வழங்குவதற்கு நிதி வழங்குநர்கள் உறுதியளித்திருந்தனர். மிகுதி பணம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், அடுத்த ஆண்டும் இடம்பெயர்ந்த மக்களின் பராமரிப்பு மற்றும் மீள்குடியமர்வுப் பணிகளுக்காக மேலும் 225 மில்லியன் டொலர் நிதி தேவையாக இருக்கின்றது என்று சிறிலங்கா அனைத்துலக நிதி வழங்குநர்களிடம் கோரி உள்ளது.

சிறிலங்கா அரசின் இந்த இக்கட்டு நிலையைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு மக்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை வழங்குவதே அனைத்துலக நிதி வழங்குநர்களின், குறிப்பாக மேற்கு நாடுகளின் திட்டம்.

முன்னர் அனைத்துலக சமூகத்திற்கு உறுதி அளித்தபடி 80 விழுக்காடு மக்களை சிறிலங்கா அரசு இந்த வருட இறுதிக்குள் விடுவிக்கவில்லை எனில், முகாமின் வழமையான நடவடிக்கைகளுக்காக மேலதிக நிதி உதவிகளை வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்துலக நாடுகள் எடுத்துள்ளன.

முகாம்களை கொண்டு நடத்துவதற்கு சுயமான நிதி ஆதாரங்கள் எவையும் இல்லாத நிலையில் அனைத்துலக நாடுகளின் முடிவு சிறிலங்கா அரசை நெருக்கடிக்குள் தள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.

ஆனால், நிதி வழங்குநர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு தான்தோன்றித் தனமாகத் தமிழ் மக்களை சிறிலங்கா தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை என்றும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.