Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை 'விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார்.

கைது செய்யபபட்ட அவர் வழக்கில், சூரிய ஒளித் தாக்கத்தினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு காரணமாக தாக்கினார் எனக் காரணம் கட்டப்பட்டு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுகின்றார்.

இந்த விடுதலைக்கான நீதி, அந்தத் தாக்குதலை நிகழ்த்திய விஜேமுனி மனநிலை பிறழ்ந்தவராக இருந்தார் என்பதே. ஒரு நாட்டின் பிரதமரைத் தாக்கிய வழக்கில் இந்த நீதியின் அடிப்படையில் தாக்கிய நபர் விடுவிக்கப்பட்ட நாட்டில்தான், பலபேர் முன்னிலையில் பொது இடமொன்றில் மனப்பிறழ்வு அடைந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றார் அல்லது உயிரிழக்கும் நிலைக்குச் செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றார். அந்தத் தாக்குதலை நிகழ்த்தியவர் காவல்துறை அதிகாரி.

நேற்று முன்தினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கரையோரப் பாதையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் வீதியில் செல்லும் வாகனங்களுக்குக் கல் எறிந்துள்ளார். இதன் காரணமாக இரண்டு வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. ரயில் ஒன்றுக்குக் கல் எறிந்ததில் அதில் பயணித்த சிலரும் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் சத்தமிடவே அவர் தப்பிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் கரை திரும்ப முயற்சித்த போதும், அதனைத் தடுத்த பொலிஸார் அவரைக் கட்டைகளால் தாக்கினர். இந்தச் சம்பவம் நீடித்துக்கொண்டிருந்ததால் கரை திரும்ப முடியாத அந்த இளைஞர் கடலுக்குள்ளேயே செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார். இதன் போது அவர் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணமானார் என இது தொடர்பான செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னை தாக்கவேண்டாம். தான் கரைக்கு வருவதாக இறுதி நேரத்தில் கும்பிட்டு கெஞ்சிக்கேட்டபோதும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதை வீடியோப் பதிவாக தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியுள்ளது. படுகொலைசெய்யப்பட்டவர் பாலவண்ணன் சிவகுமார்(வயது 26). தென்பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு மனநோயாளி. அங்கோடை மனநோயாளிகள் வைத்தியசாலையில் இரு தடவைகள் சேர்ப்பிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்த தாக்குதலை மேற்கொண்ட காவற்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன? . இறந்தவர் ஒரு தமிழர் எனும் காரணம் ஒன்றே போதும் இவர் இலகுவில் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவதற்கு அல்லது கண்துடைப்புப் பெறுவதற்கு. ஏனெனில் இப்படியான தாக்குதல்கள் காலத்துக்காலம் தமிழ்மக்கள் மீது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.இதனைவிடக் கடுமையான தாக்குதல், கொலைகளுக்கே முறையான தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் சிறிலங்காவில் தமிழர்கள் மீது காவல்துறையின் கரிசனம் அவ்விதம் இருக்குமாறே வளர்க்கப்படுகிறது. அதனாற்தான் சந்தர்பம் கிடைக்கும்போதெல்லாம் மூர்க்கத்தனமாகச் செயற்படுகின்றார்கள். பலபேர் கூடி நின்று பார்க்க அடித்துக் கொலை செய்கின்றது காவற்துறை. ஆனால் யாராலும் தடுக்க முடியவில்லை. அதிகாரம் எவ்விதம் செயற்படுகிறதெனப் புரிகிறதா?

இல்லை என்கிறீர்களா? 2007ம் ஆண்டு கதிர்காமத் திருத்தலத்தில் தீர்த்தமாடும் தமிழர்கள் மீது தாக்குதல் செய்யும் இந்த காவற்துறை அதிகாரியின் செயல் உங்களக்குப் பரிவாகத் தெரிகிறதா?.

இவர் செயல் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்ட்டிருக்கிறதா?. 1983க் கலவரங்களின்போதும், ஏனைய பல கலவரங்களின் போதும், சிறிலங்கா காவற்துறை தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை பல இடங்களிலும் சுட்டிக்காட்டப்படது. பயன் ?...

அன்மையில் தென்பகுதியில் சிங்கள இளைஞர்கள் இருவரைக் கொலை செய்த காவற்துறை மீது, சிங்களப் பொது மக்கள் கிளர்தெழுந்து தாக்குதல் மேற்கொண்டார்கள். இதன் காரணமாக அந்தக் கொலைகளுக்கான காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார் . இக் கொலைகள் தொடர்பாக நடைபெற்றி செய்தியாளர் சந்திப்பில், 75,300 பேரில், 168 பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே துஷ்பிரயோகம் செய்தனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

சிறிலங்கா ஜனாதிபதி கண்டியில் உரையாற்றும் போது, ஒரு வசனத்தில், " தமிழர்களை நான் விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்" எனத் தமிழில் உரையாற்றிய போது, உச்சரிப்பில் 'விரும்பிக் கேட்டுக் கொல்கின்றேன்' எனத் தொனித்தது. இது ஒரு உச்சரிப்புத் தவறு என்பதே உண்மை. தமிழ் மொழியில் அவர் உரையாற்றும் ஆர்வத்தில் அத் தவறு ஏற்பட்டது. அது ஏற்றுக் கொள்ளவும் மன்னிக்கவும் கூட முடியும்.

ஆனால் அப்பாவித் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குல்கள், கொலைகள் என்பவை தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டு கொள்ளப்படவில்லையானால், அதற்கான தண்டணைகள் வழங்கப்படவில்லையானால், சிறிலங்கா ஜனாதிபதியின் ' விரும்பிக் கேட்டுக் கொல்லுகின்றேன் ' எனும் வாசகம் உச்சரிப்புத் தவறல்ல உணர்ந்தே செய்யும் தவறு என்றே கொள்ளமுடியும்.

மேலதிக செய்திகளுக்கு....

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.