Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகாரத்தை நிராகரித்து, மக்கள் அதிகாரத்தை உருவாக்வோம் - ரனில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிறைவேற்று அதிகாரம் துரத்தியடிக்கப்படுவதுடன் மக்கள் அதிகாரம் கொண்ட அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதே இன்று உதயமாகியிருக்கும் முன்னணியின் குறிக்கோளாகும் அத்தோடு குடும்ப அதிகாரத்திற்கு முடிவுகட்டப்படும் என்று தெரிவித்தார். என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. இதற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெர்pவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். அதில் சகலரும் சகல உ,மைகளையும் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்காக தோற்றம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் எந்த அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் இணைந்துகொள்ள முடியும். இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை. விரும்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கூட வந்து இணைந்து கொள்ளலாம். இன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் மக்களுக்கான பாதுகாப்பு சீர்கெட்டுள்ளது தெளிவாக புலப்படுகின்றது.

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் எவ்வாறு தாக்கி, கடலில் தள்ளப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதிலிருந்து இங்குள்ள சட்டம் ஒழுங்கு குறித்து தெளிவாகின்றது.

மறுபுறத்திலே இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். சம்பள உயர்வு கேட்டு போராடும் உழைக்கும் வர்க்கத்தின் குரல் ஒடுக்கப்படுகின்றது. வெள்ளை வேன் கலாசாரம், ஊடக அடக்குமுறை போன்ற அனைத்து செயற்பாடுகளும் இன்றைய அரசின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கின் கீழேயே இடம்பெற்று வருகின்றன.

சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு எமது நாட்டில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினதும் அபிலாஷைகள், உரிமைகள் ஆகியவை அடிப்படைப் பிரச்சினையாக நோக்கப்பட வேண்டும். பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு உருவாக்கப்பட வேண்டும்.

அதனை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது ஐக்கிய தேசிய முன்னணியின் இணக்கப்பாடாகும்.

இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் சக்தியுடனான மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அப்படியானால், அதற்கு முதலில் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகார முறைமையை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி தான். இதற்கு நானும் வாக்களித்துள்ளேன்.

நாட்டில் திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு அன்று அது தேவைப்பட்டது. நாட்டின் தேவைக்காக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் இன்று வேறுவிதமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

இதன் காரணத்தினாலேயே நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உருவானது. இதற்காக இன்று ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர்.

இறுதியிலேயே இவ்வாறானதோர் முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலமே நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் என்றும் உணரப்பட்டு ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்துரைகளுக்கு அமைவாக சர்வகட்சி குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரணவே நிறைவேற்று அதிகாரம் இரத்துச்செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தான் இன்று நாமும் செய்கிறோம். ஆகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதில் இணைந்துகொள்ள முடியும்.

நாட்டுக்கு மிகவும் அவசியமான சுயாதீன ஆணைக்குழுக்கள் இதுவரையில் நிறுவப்படவில்லை. இது நாட்டு மக்களின் உரிமையாகும். ஆனால், அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை எமது ஐக்கிய தேசிய முன்னணி பாதுகாக்கும் என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்நாட்டில் இடம்பெற்று வருகின்ற ஊழல் மோசடிகள் முற்றாக இல்லாதொழிக்கப்படும். அது மட்டுமல்லாது, இதில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக புதிய சட்ட விதிகளை உருவாக்கி, குற்றவாளிகள் அனைவரையும் விட்டுவைக்க மாட்டோம். அவர்களை சிறைகளில் தள்ளுவோம் என்றும் இங்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

நாடு எதிர்கொண்டுள்ள சகலவித சிக்கல்களுக்கும் விடிவு காணப்படுவதுடன், தனியார் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படும். சமுர்த்தி நிவாரணம், கைத்தொழிற்றுறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஐக்கிய தேசிய முன்னணியில் உறுதிப்படுத்தப்படும்.

இன்று நாட்டைப் பீடித்திருக்கும் "ருபெல்லா' அமைச்சுக்குப் பதிலாக ஆரோக்கியமானதொரு சுகாதார அமைச்சை உருவாக்குவோம் என்றார்.

மேலும் செய்திகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐக்கிய தேசிய முன்னணியின் உருவாக்கத்தில் மேற்குலகின் பங்கு நிச்சயம் இருக்கும். இலங்கை அரசை தங்கள் பக்கம் இழுப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சியாகக் கூட இருக்கலாம்.

மகிந்தாவினால் நிலைமைகள் சமாளிக்க முடியாமல் போகும் சமயத்தில் ரணில் தலைமைக்கு வருவார். இலங்கை மேற்குலகம் பக்கம் தாவும். போர்க்குற்றம் பற்றிய பேச்சுக்கள் நின்றுபோகும். கடன்களும் சலுகைகளும் தாராளமாகக் கிடைக்கும். பொருளாதாரம் நிவர்த்தியடையும். <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.