Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் பறிபோகும் தமிழர் அரசியல் உரிமை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ்முரசம்

கிழக்கு மாகாணத்தில் மிஞ்சியிருந்த தமிழர்களின் உரிமைகளும் அவர்களின் அரசியல் அபிலாசைகளும் தொடர்ச்சியாக பறிபோய்கொண்டிருப்பது குறித்து இன்று என்னோடு கலந்துரையாடிய திருகோணமலையை சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண தமிழர்களின் பாரம்பரிய நகராக திகழும் திருகோணமலை இன்று பேரினவாதிகளின் கைக்குள் செல்வதற்கு அமைச்சர் முரளிதரன் மும்முரமாக ஈடுபட்டுவருவது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கில் தமிழர்கள் அரசியல் அனாதைகளாக நின்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் அயராத முயற்சியினால் தமிழ் உணர்வுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு “தமிழ் தேசிய கூட்டணி”உருவாக்கப்பட்டு அதற்கு கோட்பாடுகள் வரையப்பட்டு எந்த நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு சோடை போகாமல் செயற்பட முன்வந்தவர்களைகொண்டு கட்டியெழுப்பப்பட்டது.

இதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிர்களை தியாகம் செய்ததுடன் பலர் தமது உடமைகளை இழந்து இன்றும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றனர்.

இவ்வாறு கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் இன்று பேரினவாதிகளின் கைகளுக்குள் அற்ப சலுகைகளுக்காகவும் மிரட்டல்கள் மூலமும் சென்றுள்ளது கிழக்கு தமிழர்கள், அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்படுவதற்காகன ஏதுவான காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாத நிலையிலும் நாங்கள் உள்ளோம் என்பது உண்மையே.

காரணம், இவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட காலம் தொடக்கம் அதிக நாட்களை தமது மக்களையும் இடங்களையும் விட்டு பிரிந்தே இருந்துவருகின்றனர்.

இதற்கு அவர்கள் ‘பாதுப்பு அச்சுறுத்தல’; என்ற காரணத்தை கூறுகின்றனர்.நிச்சயமாக அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என்பதையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

காலத்துக்கு காலம் தமிழினத்துக்கு சார்பானவர்களை பேரினவாத அரசும் சரி துணை ஆயுதக்குழக்களும் சரி கடுமையாக தாக்கிவந்தன.

எனினும் இவர்கள் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை ஏற்கனவே உணர்ந்தவர்கள். அவர்களை நம்பி பலரும் அவர்கள் பின்னால் நின்றபோது அவர்கள் மட்டும் ஓடி ஒழிந்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அவர்கள் பின்னால் நின்ற பலர் உயிரை இழக்க கூட்டமைப்பினர் பலர் பொறுப்பாக இருந்தனர் என்பதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இந்த நிலையில் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான பல உறுப்பினர்கள் துணை ஆயுதக்குழக்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த நிலைமை இன்று பரிணாமம் பெற்று கூட்டணியை அழிக்கும் நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

ஒரு காலத்தில் தமிழினம் அழிவதை தடுத்து நிறுத்துமாறு வெளியுலகுக்கு எடுத்துக்கூறியவர்கள் இன்று பேரினவாதத்தின் கதிரைகளை அலங்கரிக்க கொழும்பு சென்றுள்ளனர் என்பது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் நிலங்கள் இரு இனக்குழுமங்கள் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுவரும் நிலையில் திருகோணமலை மக்கள் நம்பியிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலர் கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் மகிந்தவுடன் இணைந்துள்ளது இந்த மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

சொந்தங்களை இழந்தபோதும் சொத்துசுகங்களை இழந்தபோதும் கலங்காத தமிழினம் இன்று தமது உரிமைகளை இவர்கள் அடகு வைப்பதையிட்டு ஏங்கித்தவிக்கின்றனர்.

இவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன பதில் கூறப்போகின்றனர்.இதேபோன்று மகிந்தவுடன் இணைந்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர் என்ன காரணம் சொல்லப்போகின்றனர்.

எதுவும் கூறமுடியாது.கடந்த காலத்தைப்போன்று இந்த மக்களை சிங்கள பேரினவாதிகளிடம் விற்று தமது பக்கட்டுகளையும் தமது உறவுகளுக்கு தொழில் பெற்றுக்கொடுப்பதிலுமே இவர்கள் முனைப்புக்காட்டுவர்.

இந்த நிலை இனிவரும் காலங்களில் மாற்றப்படவேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாக உள்ளது.அதற்கு தமிழினம் மீண்டும் துளிர்விடவேண்டும்.

எமது உரிமையை நாமே நிலை நாட்டவேண்டும் அதற்காக எஞ்சியிருக்கும் தமிழின ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்களை கிழக்கில் ஒருங்கிணைக்கவேண்டும்.

உதாரணமாக சொல்லப்போனால் இன்று கல்முனையில் பிரதேச சபை உறுப்பினராக உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆயுதக்குழக்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் செயற்பட்டுவருவதை கொள்ளலாம்.

அவ்வாறான பிரதேச சபை உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் அடி மட்ட உறுப்பினர்களுகு; மீண்டும் ஒரு தடவை உயிரூட்டுவதன் மூலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை காலுன்ற செய்வதற்கான சூழ் நிலைகளை ஏற்படுத்தலாம்.

இன்று இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் பறைசாற்றிவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் செயற்பாடுகளை தடுக்கமுடியாத நிலைக்கு சிங்கள அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஒருங்கே வியூகம் அமைத்து செயற்படுத்துவதன் மூலமே கிழக்கு மாகாண தமிழர்களின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தலாம் என்பது எங்களது திண்ணம்.

http://www.swissmurasam.net/home.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.......தமிழ் தேசிய கூட்டமைப்ப நாலாப்பிரிச்சு புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மகிந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பு, சுயேட்சை தமிழ் தேசிய கூட்டமைப்பு, எண்டு பெயரும் வச்சா இந்தியா மாதிரி அரசியல்செய்ய வசதியாயிருக்கும். :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.......தமிழ் தேசிய கூட்டமைப்ப நாலாப்பிரிச்சு புலிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மகிந்தா தமிழ் தேசிய கூட்டமைப்பு, ரணில் தமிழ் தேசிய தேசிய கூட்டமைப்பு, சுயேட்சை தமிழ் தேசிய கூட்டமைப்பு, எண்டு பெயரும் வச்சா இந்தியா மாதிரி அரசியல்செய்ய வசதியாயிருக்கும். :o

உனக்கு தெரியுமோ!

புலிகளின் சுதந்திரக்கட்சி

ரணிலின் சுதந்திரக்கட்சி

வீரவன்சவின் சுதந்திரக்கட்சி

மகிந்தவின் சுதந்திரக்கட்சி

சந்திரிகாவின் சுதந்திரக்கட்சி

சரதின் சுதந்திரக்கட்சி

என்றும் பல உள்ளன

அதனால்தான் தமிழர்களை பிரித்து உடைத்து விளையாடுகிறார்.

இலங்கையில் அரசியல் தமிழர்களை சுற்றியே வரும்.

இன்னும் கொஞ்ச நாள் தான் பொறுமென்

இவர்க்களுக்கெல்லாம் இல்லாத புலி வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.