Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரோகி என்ற பட்டம் உங்களுக்கு வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என்ற பட்டம் உங்களுக்கு வேண்டாம்

இனத்துக்கே துரோகம் செய்துகொண்டிருக்கும் தமிழ் அமைச்சர்களே உங்களுக்குத்தான் எழுதுகிறேன்।

கண்ணாடி முன் நின்று "நான் ஒரு உண்மையான அரசியல்வாதியா?" என ஒரு முறை கேட்டுப்பாருங்கள்। மனச்சாட்சி இல்லாத உங்களுக்கு உங்கள் கண்களாவது உண்மை சொல்கின்றனவா எனப் பார்ப்போம்।

இப்போதுதான் புரிகிறது ஒரு மிருகத்தின் பெயரைக்கூறி மக்கள் உங்களைத் தூற்றுவதற்கான காரணம்। சமுதாயத்தை காவல் காத்துக்கொண்டிருப்பதாக நீங்கள் சொல்லிக்கொள்வதால்தானே?

தேர்தல் வரப்போகிறது. இனி நீங்கள் உசாராகப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரிந்து தான் இதை எழுதத் தொடங்குகிறேன். இனிவரும்நிச்சயமாக உங்களுக்கு பாடத்தை கற்பிக்கும்। எந்தப் பத்திரிகைக்கும் எழுதவேண்டாம் என எத்தனை முறை தொலைபேசி அழைப்பு எடுத்தாலும் உங்கள் ஈனக்குரல் எனக்கு எட்டாது। சமுதாயத்துக்கு நீங்கள் செய்யும் துரோகங்களை எழுதினால் வலிக்கத்தான் செய்யும்। நல்லன செய்யுங்கள்। தூர நோக்குடன் செய்யுங்கள்। உங்களை பாராட்டி எழுதவும் நான் தயாராக இருக்கிறேன்।

இப்போதெல்லாம் வெள்ளை உடையில் அசல் நல்லவரைப்போலவே நடிக்கும் உங்களுக்காகவும் உங்கள் கூட்டத்துக்காகவும் கட்டுரையை இங்கு தருகிறேன்। இதற்காக எந்த வாதிடலுக்கும் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறேன்।

மக்கள் பலவீனத்தை பயன்படுத்தக் காத்திருக்கும்

மலையகத் தலைமைகளுக்கு ஒரு வேண்டுகோள்

மலையகத்தில் தேர்தல் என்றால் சொல்லத்தேவையில்லை। அது அரசியல் அரங்கில் கட்சிகள் நடாத்தும் தேர்த்திருவிழா போல பரபரப்பும் வேகமும் காணப்படும்। அரசியல்வாதிகள் ஒவ்வொரு முறை தேர்தலிலும் அள்ளி வழங்கும் வாக்குறுதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலவற்றை செய்து முடிப்பதும் அதற்கு மேலதிகமாக வார்த்தைகோர்த்து அறிக்கை விடுவதும் நாமறிந்த சமாச்சாரம்.

தொழிலாளர்கள் என்றால் எதிர்க்கேள்வி கேட்காத கூட்டம் என்றுதான் இதுவரை மலையக சமுதாயத்தினர் தமது தலைமைகளால் நோக்கப்பட்டு வந்தனர்। ஆனால் தற்போது அந்த நிலை மாறி யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு சிந்தித்து செயற்படும் தூரநோக்குள்ளவர்களாக அந்த மக்கள் மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கப்போகும் மிகத்தீர்க்கமான வரலாற்றின் மிகத்தேவையான தேர்தலுக்கு மக்கள் முகங்கொடுக்கப்போகின்றனர்। தேர்தல் காலங்களில் பொய்முகங்களோடு நடமாடிய அரசியல்வாதிகளுக்கும் உண்மையானஇநேர்மையான சேவை உள்ளம்கொண்ட அரசியல்வாதிகளுக்கும் தாம் யார் என்பதை சொல்லப்போகும் தேர்தல் அண்மித்திருக்கிறது.

பெரும்பாலான மலையகத் தலைவர்களைப் பொருத்தவரையில் தேர்தல் என்றவுடன் இந்தமுறை மக்களுக்கு என்ன சொல்லலாம்? என்ன வாக்குறுதியளிக்கலாம் என பல மாதங்களுக்கு முன்பிருந்தே சிந்திக்கத் தொடங்கியிருப்பார்கள்.

எது எவ்வாறாயினும் மக்களின் பலவீனத்தை தலைவர்கள் தமது பலமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்।

எந்தப் பிழைக்கும் துணைபோகாமல் எந்தப் பிணியையும் தாங்கிக்கொள்ளும் தொழிலாளர் சமுதாயத்தை அரசியல் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதை தலைவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்। குறிப்பாக தேர்தல் காலத்தில் மதுவுக்கு குறைவிருக்காது. எந்தத் தலைவர் “மதுவை முற்றாக ஒழிப்போம். எமது மதுவே எமது முதல் எதிரி” எனக் கோஷமிட்டாரோ அதே தலைவர் மதுவைக்காட்டி மக்களை ஏமாற்ற முனைவது போன்ற செயற்பாடுகளை இங்கு கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.

வீதியை செப்பனிடுவதும்இ கோயிலுக்கு ஒலிபெருக்கி வழங்குவதும் இளைஞர் கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்குவதும் அதிகமான அரசில்வாதிகளின் பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கும். மக்களுக்குத் தேவையான எந்தவொரு காத்திரமான சேவையையும் இதுவரை அவர்கள் வழங்கியிருக்க மாட்டார்கள்.

• தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு யார் செவிசாய்த்து நியாயமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தார்கள்?

• மலையகத்தில் அதிகரித்துவரும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க யார் முழுமையான செயற்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்?

• மலையகத்தில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான ஏற்பாடுகளை யார் செய்தார்கள்?

• சுகவீனமுற்றவர்களை அவசரமாக நகர வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல எத்தனை தோட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்காவு வண்டிகள் உண்டு?

• மலையகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை உண்டு என்பதை யார் உறுதிப்படுத்திச் சொல்வார்கள்?

• தமது சொந்த இடங்களில் தொழில்புரிய முடியாமல் தலைநகரத்தில் கூலித்தொழிலில் ஈடுபட்டிருக்கும் படித்த இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா?

• பயங்கரவாதிகள் என்ற பெயரில் பூசா சிறைச்சாலை உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலையில் வாடும் நு}ற்றுக்கணக்கான இளைஞர்கள் இதுவரை விடுவிக்கப்படாமைக்கு யார் பதில்சொல்லப்போகிறார்கள்?

• அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்கள் துன்பப்படுவதை எப்படி நியாயப்படுத்தப்போகிறார்கள்?

போன்ற சில பிரதானமான கேள்விகளுக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களும் அவர்களுக்கு தலைமை வகிப்பவர்களும் நிச்சயமாக பதில்சொல்லியாக வேண்டும்.

தோட்டமொன்றுக்கு சென்று மக்களுடன் சிரித்துப்பேசிஇ சின்னக்குழந்தையை து}க்கிக் கொஞ்சி மக்களுடைய கோரிக்கைகளை எழுத்துவடிவில் வாங்கிஇ இதைச்செய்வோம் அதைச்செய்வோம் என போலிவாக்குறுதிகள் வழங்கி மக்கள் அபிலாஷைகளை அடக்கும் வழமையை இந்த முறையாவது தவிர்த்துக்கொள்வீர்களா?

சமுதாயத்தின் மீது தார்மிகப்பொறுப்புடன் செயற்பட்டு நியாயமான அரசியலில் ஈடுபட்டிருந்தால் உண்மையில் மலையக சமுதாயம் அத்தனை துறைகளிலும் முன்னேறி மிளிர்ந்திருக்கும்। ஆனால் எதற்கெடுத்தாலும் அப்பாவி தொழிலாளர்களையே குறைசொல்லி அவர்களின் அறியாமையையும் கல்வியின்மையையும் சுட்டிக்காட்டியே பலர் வளர்ந்துவிட்டார்கள்.

மக்களின் தேவை அறிந்து மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை இனியும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தத் தலைமைத்துவத்தை வழங்கி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக சமுதாயத்தை முன்னேற்றகரமாக வழியில் இட்டுச்செல்லும் தலைவர்களை மலையகம் இருகரம் குவித்து வரவேற்கத் தயாராக இருக்கிறது. அவர்கள் பின்னால் அணிதிரள மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அந்தத் தலைமை இந்த மாகாண சபைத் தேர்தலில் உருவாகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

மக்களின் இயலாமையை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் வரலாற்றுக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்.

-இராமானுஜம் நிர்ஷன்

http://puthiyamalayagam.blogspot.com/2009/11/blog-post_9321.html

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என்ற பட்டம் உங்களுக்கு வேண்டாம்

மலையக தமிழரயை விட ......

எம்மில் எவ்வளவு முடிச்சறுக்கியவள் , தேவாங்குகள் , விளக்குமாறுகள் இன்னும் எத்தனையோ ......

அவதாரம் எடுத்திருக்கே ..... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.