Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அகதிகள் ஆஸ்ட்ரேலியாவை நாடுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிவதனன் உங்களுடைய கருத்துப்பதிவுகளை(?) பார்க்கும்போது முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. உங்கள் வாதங்களின் அடிப்படையே உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஏன் இவ்வளவு படாதபாடுபட்டு இந்த இடத்தில் இவ்வளவு பிரயத்தனப்பட்டுக் கருத்தெழுதுகிறீர்கள்? இரவு பகல் பாராது முழுநேர தொழில் வாய்ப்பைப் பெற்றவன்கூட உங்களைப் போல செயலாற்ற முடியாது. உங்கள் அடிப்படை எண்ணங்களின் மூலமே தமிழ் சமூகத்திற்கு எதிரானதாக இருக்கிறது என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி வருகிறது. உங்களை நிறையவே வருத்தி நீங்கள் இடும் பதிவுகள் எல்லாம் வாசிக்கும் போது உங்களைப் பார்த்துப் பரிதாபப்பட வைக்கின்றன. இவ்வகையான எழுத்துகளைத் தொடர்ந்து எழுதும் நீங்கள் ஒன்று மனநோயாளியாக இருக்கவேண்டும் அல்லது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு எதிரான சக்திகளால் பாவிக்கப்பட்டு கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். நீங்கள் தமிழினத்திற்கு எதிரானவர் இல்லை என்றால் நல்ல மனநல வைத்தியரை பார்ப்பது நன்று. இதை நான் சொல்லவில்லை உங்கள் பதிவுகள் சொல்கின்றன.

அறிவுரைக்கு நன்றி, இருந்ததையும் இழந்ததால் வந்த விரக்திதான். எங்கட பக்கத்தில சென்ன ஏதாவது செய்யப்பட்டிருக்கா?

சமூகவிரோத அமைச்சர்.... இங்கதான் எழுதிறினமே.... பாக்கிறீங்கள்தானே!

அதுவும் பிறீயா எடுத்துவிட்டவராம்...... :o

காலைப்பிடிச்சு கும்பிட்டு மண்டாடி வெளியில எடுத்துவிடு எண்டு கேக்கேக்க...... :(

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த மட்டும் இல்லை இரணில் வந்து இருந்தாலும் இதுதான் நிலமை...

முடிவு தெரிஞ்சிருக்கு. நீங்கள் ஏங்கின முடிவும் கிடைச்சிருக்கு...... இதுக்குமேல என்ட டைம வீணாக்க விரும்பேல்ல. நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவாமிநாதன் வந்த மக்களிடம் புலிகள் உங்களை சுட்டார்களா எண்டு கேட்டத்துக்கு அதே மக்கள் இந்திய தமிழில் ஆமா சார் புலிகள் எங்கள சுடுறாங்க.. எண்று இந்திய பாணியில் சொன்னதை நானும் கேட்டேன்...

சுட்டார்களா இல்லையா என நிறுவுற நோக்கமல்ல..

ஆனால் வன்னியில் இந்திய வம்சாசளியினர் பலர் இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொருளாதார நலன் குறைந்த அவர்கள் பெருமளவில் இறுதி போரில் அகப்பட்டுக் கொண்டார்கள். பொருளாதார வர்க்க பிரிப்பு என்பது இந்த நாட்களில் என் முகத்தில் நிறைய அறைந்தது. வன்னி முகாம்களில் 60 சதவீதமானோர் இந்திய வம்சாவளியினர் என்றொரு புள்ளிவிபரம் கிடைத்தது. உண்மை தெரியவில்லை. ஆனால் கணிசமான அளவு இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

அவர்கள் இந்தியத் தமிழ்தான் பேசுவார்கள்.

நான் சொல்லவந்தது இதுதான். பொருளாதார மேம்பாடு நம்மை யுத்தத்தில் இருந்து தப்ப வைத்தது. பொருளாதார வறுமை அவர்களை யுத்தத்தில் சிக்க வைத்தது. thats all

சுதந்திரம் என்பது கடையில் வேண்டுகிற பொருளல்ல ....உடனே கிடைத்துவிடும் என்று நினைக்கவேண்டாம் .Mathivathanang நினைக்கிறார் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றும் ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது என்றும் நினைக்கிறார். இவருக்கு காலம் பதில் சொல்லும் போராட்ட வடிவம் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது.

சுட்டார்களா இல்லையா என நிறுவுற நோக்கமல்ல..

ஆனால் வன்னியில் இந்திய வம்சாசளியினர் பலர் இருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. பொருளாதார நலன் குறைந்த அவர்கள் பெருமளவில் இறுதி போரில் அகப்பட்டுக் கொண்டார்கள். பொருளாதார வர்க்க பிரிப்பு என்பது இந்த நாட்களில் என் முகத்தில் நிறைய அறைந்தது. வன்னி முகாம்களில் 60 சதவீதமானோர் இந்திய வம்சாவளியினர் என்றொரு புள்ளிவிபரம் கிடைத்தது. உண்மை தெரியவில்லை. ஆனால் கணிசமான அளவு இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

அவர்கள் இந்தியத் தமிழ்தான் பேசுவார்கள்.

நான் சொல்லவந்தது இதுதான். பொருளாதார மேம்பாடு நம்மை யுத்தத்தில் இருந்து தப்ப வைத்தது. பொருளாதார வறுமை அவர்களை யுத்தத்தில் சிக்க வைத்தது. thats all

யார் சொன்னது உங்களுக்கு வன்னியில் இருந்த இந்திய வம்சாவளி மக்கள் இந்திய பாணியில் பேசுகிறார்கள் எண்று...??? வயதானவர்கள் இந்திய சாயலில் கொஞ்சம் இழுவையாக பேசுவார்களே அண்றி இந்திய தமிழ் உச்சரிப்புக்கள் இருக்காது... அதிலையும் நடுத்தர வயதுக்காறரின், இளையவரின் உச்சரிப்பில் நீங்கள் இந்திய சாயலை கண்டு கொள்ளவும் முடியாது...

கிளிநொச்சியில் பாரதிபுரம், திருவையாறு, 55 ம் கட்டை பகுதியில் இருந்த மக்களின் பேச்சில் சில மாறு பாடான உச்சரிப்பு இருக்குமே அண்றி ஆமா சார் சுடுகிறாங்க சார் எண்று ஆங்கிலம் கலந்த தமிழை பேச மாட்டார்கள்...

வன்னியில் இருந்த மக்களில் பெம்பான்மையான இந்திய வம்சாவளி குடும்பங்கள் போராளி, மாவீரர் குடும்பங்கள் வேறு.. ( எனக்கு 55ம் கட்டையில் இருக்கும் அரை ஏக்கர் திட்டம் பாரதி புரத்தில் இருக்கும் நான்கு மாவிரர் குடும்பங்களை நன்குதெரியும்...)

முடிவு தெரிஞ்சிருக்கு. நீங்கள் ஏங்கின முடிவும் கிடைச்சிருக்கு...... இதுக்குமேல என்ட டைம வீணாக்க விரும்பேல்ல. நன்றி வணக்கம்.

நாங்கள் இல்லை நீங்கள் விரும்பின முடிவு...! சிங்களவனுக்கு முண்டு குடுக்கும் உங்களுக்கு இயலாமை இருக்கும் தான் உங்கள் நேரம் மட்டும் இல்லாமல் மற்றவர்களின் நேரத்தையும் விரயம் செய்ய மட்டும் தான் இனியும் முடியும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் இருந்த மக்களில் பெம்பான்மையான இந்திய வம்சாவளி குடும்பங்கள் போராளி, மாவீரர் குடும்பங்கள் வேறு..

அண்மையில்தான் இந்தக் கதையைப் படித்தேன்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64696

அண்மையில்தான் இந்தக் கதையைப் படித்தேன்..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=64696

கதை படிப்பதை இப்ப எல்லாம் விட்டு இருந்தேன்... நீங்கள் தந்த இணைப்பை இப்ப தான் பாக்கிறேன்... மனசு கனத்து போவதை தவிர்க்க முடியவில்லை...

1991 ம் ஆண்டு ஒரே அணியில் ஒண்றாக இருந்த "கப்ரன். சாந்தன்" ஆனையிறவில் தொடர் காவலரன் தகர்க்கும் போது வீரச்சாவடைந்தான்... எனக்கு அப்போ அவன் கிளிநொச்சியை சேர்ந்தவன் என்பதுதான் தெரிந்து இருந்தது... அவனது உடமைகள் சிலதை வீட்டுகாறரிடம் கொடுக்க அவனின் விலாசத்தை விசாரித்து அனுமதி எடுத்து கிளிநொச்சி பாரதி புரத்துக்கு போய் இருந்தேன்... ஒரு ரெயில்வே தண்டவாளம் இருந்த இடத்தை கடந்து போக அரைவாசி கற்களாலும், ஓலையாலும் அமைக்க பட்ட வீடு... வீடு எண்டு சொல்வதை விட கொட்டில் எண்று சொல்லலாம்... ரங்கசாமி என்பது அவனது அப்பாவின் பெயர்... வீட்டுக்கு மூத்த பெடியன்.. அவனுக்கு ஒரு அக்கா அக்காவின் கணவர் வவுனியாவில் இருந்து சைக்கிளில் சாமான் கட்டி வந்து விற்பாராம்... ஒரு நாள் காணாமல் போய் இருந்தார்... எங்கை எண்டது தெரியாது... அவவுக்கு ஒரு மகன்...

சாந்தனுக்கு இரண்டு தங்கைகள் அதில் ஒரு தங்கை சாந்தன் இயக்கத்துக்கு போன சில மாதங்களில் தானும் இனைந்து கொண்டார்... சாந்தன் வீரச்சாவடைந்து சில நாட்களில் இன்னும் ஒரு தங்கையும் தன்னை போராளியாக்கி இருந்தார்... அப்பாவும் அம்மாவும் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாத்தி கொண்டு இருந்தனர்... சூரிய கதிர் நடவடிக்கையில் 1997ல் சாந்தனின் கடைசி தங்கை வீரச்சாவடைந்தார்... அடுத்த வருடம் மற்ற தங்கையும் வீரச்சாவடைந்தார்...

1998ம் ஆண்டு முதல் சாந்தனின் கடைசி தம்பி 16 வயது... ஸ்கந்தபுரம் சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தான்...

இதை விட கரும்புலி மேஜர். ஜெயம், கப்ரன். ரகு, உறவினர்கள் யாருமே இல்லாத மேஜர்.விஸ்ணு... இன்னும் பலர்... எல்லாம் கிளிநொச்சி தந்த வீரர்கள்... அவர்கள் யாரும் எங்களுக்காக போராடி இருக்க வேண்டும் எண்டு தலைவிதி இல்லை... அவர்களின் குடும்பங்கள் நினைத்து இருந்தால் தாராளமாக தெற்கை போய் இதை போண்ற கடின வாழ்வை நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும்..

ஆனால் அவர்கள் எங்கட மண்ணை தங்களின் மண்ணாக போற்றினார்கள் , அவர்களின் குடும்பங்களை யாராவது பிரித்து பார்ப்பார்களாக இருந்தால் பிரித்து பார்ப்பவர்களை தமிழர்களில் இருந்து ஒதுக்க வேண்டும்...

புலிகள் பலமாக இருந்தவரைக்கு இதை பற்றிய எந்த கவலையும் எனக்கு இருக்கவில்லை... ஆனால் இப்ப சஞ்சலமாக இருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.