Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் மக்களின் அரசியலை ஒன்றிணைந்து முன்னெடுக்க முயற்சி.

Featured Replies

இலங்கையில், தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச்நகரில் நடத்தப்படும் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக இலங்கையின் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பலர் அங்கு சென்றிருக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர்.

இதேசமயம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, "புளொட்" தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் ஸ்ரீதரன் (சுகு) ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்ற சூரிச் சென்றுள்ளனர்.

இதேசமயம், இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்கான அழைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையானுக்கும்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான முரளிதரனுக்கும் (கருணாவுக்கும்) அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிகிறது. கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச்சென்றுள்ளார். ஆனால் அவர் மேற்படி கலந்துரையாடலில் பங்குபற்றுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

எனினும், அமைச்சர் முரளிதரன் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்ற மாட்டார் என்று சில வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு தலைவர்களும் பங்குபற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி., அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா போன்றோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக சூரிச் சென்றுள்ளனர். லண்டனில் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் "தமிழர் தகவல் மையம்" என்ற அரச சார்பற்ற அமைப்பே இந்தக் கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது. இக்கலந்துரையாடலில் சர்வதேச தரப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், முக்கியஸ்தர்கள் ஆலோசகர்களாகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்குவர் என்றும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டவர்களைத் தவிர வேறு வெளியாட்கள் அதில் பங்குபற்றவோ, பார்வையாளர்களாகக் கலந்துகொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் ஊடகவியலாளருக்கும் கூட இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

நன்றி http://www.uthayan.com/Welcome/full.php?id=1805&Uthayan1258624067

  • தொடங்கியவர்

இது போன்ற ஒரு சந்திப்பு முதலும் இடம்பெற்றது.. அப்போது தமிழ் தேசிய கூடமைப்பு பங்குபற்றவில்லை..இது முழுக்க முழுக்க இந்திய உளவு அமைப்பின் வேலை..வரும் தேர்தலில் தனக்கு சார்பான மகிந்தவை முன்னிறுத்தவே இந்திய உளவு அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம்..

இது போன்ற ஒரு சந்திப்பு முதலும் இடம்பெற்றது.. அப்போது தமிழ் தேசிய கூடமைப்பு பங்குபற்றவில்லை..இது முழுக்க முழுக்க இந்திய உளவு அமைப்பின் வேலை..வரும் தேர்தலில் தனக்கு சார்பான மகிந்தவை முன்னிறுத்தவே இந்திய உளவு அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம்..

கடந்த தேர்தலில் நாங்கள் விரும்பினம் மகிந்தா வரவேண்டும் என்று இப்ப இந்தியா விரும்புகிறது,ஏன் அமெரிக்கா கூட விரும்பும் மகிந்தாவரவேண்டும் என்று

இது போன்ற ஒரு சந்திப்பு முதலும் இடம்பெற்றது.. அப்போது தமிழ் தேசிய கூடமைப்பு பங்குபற்றவில்லை..இது முழுக்க முழுக்க இந்திய உளவு அமைப்பின் வேலை..வரும் தேர்தலில் தனக்கு சார்பான மகிந்தவை முன்னிறுத்தவே இந்திய உளவு அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம்..

மே 19 இன் பின் எல்லோருடனும் சேர்ந்து தானே இனி அரசியல் செய்யப்போறம் என்ற குரல் வந்தது.

அந்தக் குரலை மறந்து விட்டியல்.

எல்லாம், பக்கத்து வீட்டுக் காரரின்விருப்புக்கு, ஆடும் பொம்மைத் தலைகள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

மே 19 இன் பின் எல்லோருடனும் சேர்ந்து தானே இனி அரசியல் செய்யப்போறம் என்ற குரல் வந்தது.

அந்தக் குரலை மறந்து விட்டியல்.

எல்லாம், பக்கத்து வீட்டுக் காரரின்விருப்புக்கு, ஆடும் பொம்மைத் தலைகள்.

நல்ல முயற்சியாகத்தான் எனக்கு தெரிகிறது

மற்றவர்களில் குற்றம் பிடிப்பதை விடுத்து..

ஏதாவது நகருமா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாமே....

அவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கின்றனர்

உலகமும் அதைத்தானே கேட்கிறது

ஒன்றாக ஒரு திர்வைக்கேளுங்கள் என....

நல்ல முயற்சியாகத்தான் எனக்கு தெரிகிறது

மற்றவர்களில் குற்றம் பிடிப்பதை விடுத்து..

ஏதாவது நகருமா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாமே....

அவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முயற்சிக்கின்றனர்

உலகமும் அதைத்தானே கேட்கிறது

ஒன்றாக ஒரு திர்வைக்கேளுங்கள் என....

குற்றம், கூறுவில்லை, இது இந்தியாவின், தொடர்ச்சியான நகர்வு, இப்போது என்ன வேறுபாடு என்றால் தலைவர் பிரபாகரன், இவர்களின் முயற்சிக்கு தடையாக இருந்தார், என்ற குற்றச் சாட்டை இனி இவர்கள் யாரும் முன்வைக்க முடியாது. பக்கத்து பெரிய வீட்டு ஏசமானகளின் தயவில் ஈழத்தமிழருக்கு என்ன தீர்வை பெற்றுத்தரப்பேகினம் என்று பார்பதற்கு இது ஒரு சந்தர்பம்.

மே 19 இன் பின் எல்லோருடனும் சேர்ந்து தானே இனி அரசியல் செய்யப்போறம் என்ற குரல் வந்தது.

அந்தக் குரலை மறந்து விட்டியல்.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.