Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரின் பிறந்த நாளில் கருணா மகிந்தவுக்கு சார்பாக பிரச்சாரத்தினை ஆரம்பிக்க செய்ய திட்டம்

Featured Replies

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளில் மஹிந்தவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வினாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. அதுவும் யாழ் குடா நாட்டில் தான் அவரது பிரச்சாரம் இருக்குமாம்.ஏற்கனவே தமிழ் மக்களுக்கும், தலைவருக்கும் செய்த குழி பறிப்புக்கள் போதாது என்று இப்போ தலைவர் பிறந்த நாளில் அடுத்த குழிபறிப்பினை செய்ய வருகின்றார்.

இங்கு வேதனையான விடயம் என்னவெனில் முன் நாள் அரசியல் பொறுப்பாளர் இளம்பருதி, பாப்பா ஆகியோருடன் ஒரு குழுவே 25 ம் திகதி யாழ்ப்பாணம் வரப்போகின்றதாக தென்மராட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று அவர்களது உறவினர்கள் ஊடாகவே இந்த செய்தி கிடைக்கப்பெற்றது. பிடிபட்ட போராளிகள், பொறுப்பாளர்கள் என இனிவரும் காலங்களில் இன்னும் சில வியப்புக்கள் காத்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தமிழ் மக்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் அதற்க்கான பரப்புரைகளை நாம் முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.......

கேள்வி : தலைவர் பிரபாகரன் மீண்டும் வந்தால் மேற்படி பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பதுபோல் தெரிகிறதே. அப்படி பார்த்தால் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த செய்திகளை நீங்கள் மறுக்கிறீர்களா?

பதில்: இன்றைய நிலையில் பல மில்லியன் டொலர் பெறுமதி வாய்ந்த ஒரு கேள்வியை அனாயசமாகக் கேட்கிறீர்கள். நாம் நீங்கள் எதிர்பார்க்கும் அர்த்தத்தில் அந்த பதிலைச் சொல்லவில்லை. பிரபாகரனின் இருப்பு என்ற சொல்லாடலை நாம் பிரயோகித்தது நாம் அவரை உயிரோடு கொண்டுவரும் சாகச விiளாட்டு சார்ந்ததல்ல. அவரது கொள்கை தொடர்பானது அது. எங்களைப்போல் உங்களைப்போல் சாதாரண மனிதர்களின் மரணம் மீளுருவாக்கம் செய்ய முடியாதது.

உடல் அழிவுடன் ஒரு இல்லாமை நிகழ்ந்துவிடுகிறது. அனால் பிரபாகரன் அசாதாரணமானவர் – அதிமனிதர். அவரை மீளுருவாக்கம் செய்ய முடியும். அவரது இருப்பை உறுதி செய்ய முடியும். அந்த இருப்பே முரண்பாடுகளற்ற அமைப்பாக அந்த அமைப்பை மீண்டும் மேலெழச் செய்யும். அந்த அடிப்டையிலேயே எமது பதில் அமைந்திருந்தது.

நீங்கள் கேட்டபடியால் சொல்கிறோம். தர்க்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் தலைவர் பிரபாகரனின் மரணம் எந்தத் தரப்பாலும் இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. கண்கட்டு வித்தைகளுடனும் பல மோசடிகளுடனும் அவரது மரணம் ஒரு கனவு போலவே விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்கட்டு வித்தைகளையும் மோசடிகளையும் பல தரப்பாலும் கூறப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உருவி எடுத்துவிட்டால் அவர் உயிருள்ள மனிதனாக உலாவுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

ஆகையால் நாம் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே நம்புகிறோம். குறைந்தபட்சம் மரணமடைந்ததாகக் கூறப்படும் அவரது பிள்ளைகளின் மரமபணுக்களுடனும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது பெற்றோரின் மரபணுக்களுடனும் அவரது மரபணுக்களை சர்வதேச மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து (சிறீலங்கா -இந்திய நிபுணர்களின் ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாதது) சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாம் அரவது மரணத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிப்போம். நீங்கள் கவனிக்க வேண்டும் அப்போதும் நாம் அவரது மரணத்தை பரிசீலிப்போமே தவிர முடிவாகக் கொள்ள மாட்டோம்.

ஏனெனில் அவர் தனது உயிர்ப்பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறையுள்ள நபர். அது தனி மனிதனாக சுயநலநோக்கில் தனது உயிரைப் பாதுகாக்கும் குறுகிய நோக்கம் கொண்டதல்ல. அவரது ஆளுமையே இதன் பி;ன்னணியில் மறைந்துள்ளது. எமது ஆய்விலிருந்து கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருதுகோளை முன்வைக்கிறோம். குறித்துக்கொள்ளுங்கள்.

தன்னால், தன்னால் மட்டுமே இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என்று இறுக்கமாக நம்பிய ஒருவராக அவர் இருந்தார். அவர் யாரையுமே நம்பவில்லை. அதனால் தனது உயிர் குறித்து பெரும் அக்கறை கொண்டிருந்தார். தனக்கு ஏதும் நேர்ந்தால் இனம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதை அவர் தன்னளவில் உணர்ந்தே செயற்பட்டார். இது எமது போராட்டம் சார்ந்து மிக முக்கியமான விடயம். போராட்டம் தொடர்பான சரி, தவறுகள் மேலெழுந்த புள்ளி இங்குதான் மையம் கொண்டுள்ளது. இதை நாம் கவனமாக உள்வாங்கியிருந்தால் தலைவர் பிரபாகரன் குறித்த சச்சரவுகளுக்கு இடமே இருந்திருக்காது.

ஒருவர் தன்னால்தான் இந்த இனத்திற்கு தலைமை தாங்கமுடியும், தன்னால்தான் இ;ந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும், அதற்காக எந்த பெயரையும் தாங்கத் தயாராக இருக்கிறேன் என்ற உளவியலோடு யாரையும் நம்பாமல் ஒரு படையணியைக் கட்டியமைத்து அதைக் கொண்டு அந்த விடுதலையை அடைய எத்தனித்தது என்பது எவ்வளவு பெரிய விடயம். இப்படி ஒரு தலைமை கிடைப்பது அபூர்வம். இப்படி ஒரு தலைமை இனி எமக்கு கிடைக்ப்போவது இல்லை. எனவே இதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதில்தால் எமது அடுத்த கட்ட அரசியலே இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிக்கைகளினூடு தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப புலிகளின் தலைவர் பதவியை கையிலெடுத்த திரு செ. பத்மநாதன் அவர்கள் அந்த பதவியில் ஒரு மாதம்கூட தாக்குபிடிக்க முடியாமல் தடுமாறியதும் பின்பு கைதாகியதும் எல்லோரும் அறிந்த கதைதான். அவர் மீதான ஆயிரம் குற்றசாட்டுக்கள் இன்றுவரை உலாவருகிறபோதும் அதன் உண்மைத்தன்மை எத்தகையது என்பதற்கும் அப்பால் ஒரு மாத்திற்குள் அவர் வீழ்ந்ததற்கு காரணம் அவர் தன்னை நம்பவில்லை என்பதுதான் முக்கியமானது.

பிரபாகரனைப்போல் தன்னால் மட்டும்தான் முடியும் என்ற கொள்கையில் அவர் இல்லை. தன்னிடம் நம்பி;கையில்லாமல் அவர் யார் யாரையோ எல்லாம் நம்பினார். அடிபணிவு, அவல அரசியலையே கையிலெடுத்தார். வீழ்த்தப்பட்டார். இதுதான் 37 வருடங்களுக்கும் பின்னும் தொடரும் ஒரு தலைமையினதும் 30 நாள்களுக்குள் முடிந்து போன ஒரு தலைமையினதும் கதை.

கொஞ்சம் செரிக்கக் கடினமாக இருந்தாலும் ஒரு கதையைச் சொல்கிறோம். கேட்டுகொள்ளுங்கள். தான் அந்த இடத்திலிருந்து தப்ப வேண்டுமானால் தனது குடும்பத்தையும் சக தளபதிகளையும் பலி கொடுத்துத்தான் நடைபெற வேண்டும் என்றிருந்தால் பிரபாகரன் அதையும் செய்வார். ஏனெனில் அவரது கனவு ஒட்டுமொத்த இனத்தினது விடுதலை தொடர்பானது. அது தன்னால் மட்டும் முடியும் என்ற நம்பிக்கை.

அவர் தப்ப வேண்டும் என்பதற்காக தம்மை அழிக்கத்துணியும் குடு;ம்பமும் தளபதிகளும் போராளிகளும்தான் அவரது அந்த நம்பிக்கையின் ஆதாரங்கள். அது இன்றுவரை ஏதோ வகையில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தமிழீழ விடுதலையின்பால் தம்மை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு தொகுதியினர்பற்றி உணரப்படாமல் இருக்கும் அவலமான ஒரு பகுதி இது. எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – அது உறுதிப்படுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது விடுதலையின் ஆதாரம் இதில்தான் தங்கியுள்ளது.

post-6243-12589310480438_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.