Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடிதம் திரைப்பட பாடல்கள்~!

Featured Replies

கடந்த பத்து வருடங்களுக்கு முன் என் மனதில் விழுந்த நதிக்காக நான் எழுதிய இரு பாடல்கள் இங்கே. இந்தப் பாடல்களின் தோற்றத்தால் இரு இறுவட்டுக்களும் ஒரு திரைப்படமும் உருவானதில் பெரு மகிழ்ச்சி. காதலைப் போற்றாதவன் மனிதனாக வாழ முடியாது. காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்படையுள் பேரடிப்படை, எல்லோருக்கும் உரியது, நட்பினுள் இரு பாலரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் அறிந்திருக்க வேண்டும். காதல் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வெறும் அழகியல் வார்த்தையல்ல அது கண் முன் விரிந்து கிடக்கும் இனிய வாழ்க்கை. இதைப் புரிந்து கொண்டதால் தான் என் படைப்புகளும் காதல் என்றே தொடர்கின்றது. காதல் கடிதம், காதல் மொழி, காதல் வானம் ...என்று தொடரும் கலைப் படைப்புகள்.உங்கள் காதலை நீங்கள் துணிந்து சொல்ல இந்த இரு பாடல்களும் உறுதுணையாக இருந்தால் உங்கள் காதல் வாழ்க!

எழுது எழுது என் அன்பே-ஒரு

கடிதம் எழுது என் அன்பே

உன்னை நான் நேசிக்கிறேன்

அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் என் விழிகள்-ஒரு

நொடியில் உருகிடும் உனைப்பார்த்து

பாசம் நேசம் தருவாயே-என்பாதை

எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்

பார்வை நீயேன் வரவில்லை ?

அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி

மழையாக என்னை வந்து நனைப்பாயா?

சரணம் 2

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்

மாலை ஆகும் வேளை வரும்

பூவின் வாசம் தருவாயே - என்

மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு

எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு

இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்

உயிரோடும் உடலோடும் நீதானே- உன்

உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க

பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை

காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்

குரல் : ஸ்ரீநிவாஸ்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 01

ஏட்டில் : 20.03.2000

  • தொடங்கியவர்

பல்லவி

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்

இணைய வேண்டும்

இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்

இருக்க வேண்டும்

பெண்:

யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை

என் வாழ்வு மலரும் போதே

அதைக் கேட்கத்தானே ஆசை

சரணம் 1

ஆண்:

கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று

என் கவிதைகளும் உளவு பார்த்ததோ

நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று

என் கனவுகளும் கேட்டு நின்றதோ

பெண்:

கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய்

என் இதயத்தின் புதுத் திருடா

கவலைகள் ஏனடா

காதல் யுத்தம் செய்யப்போகிறேன்

காத்திருந்து வாழப் போகிறேன்

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

சரணம் 2

பெண்:

என் ஐன்னல் ஓரம் ஒரு பார்வை பார்க்கிறாய்

என் மூச்சைக்கூட இரவல் கேட்கிறாய்

என் பேச்சைக்கூட பதிவு செய்கிறாய்

என் கால்த் தடத்தை களவு செய்கிறாய்

ஆண்:

புதியதோர் உலகம் வேண்டும்

அங்கு எனை வெல்ல நீ வேண்டும்

காதலே வந்ததே

புதிய வாழ்வின் அர்;த்தம் சொன்னதே

மீண்டும் மீண்டும் பிறக்கச் சொன்னதே

பெண்:

யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை

என் வாழ்வு மலரும் போதே

அதைக் கேட்கத்தானே ஆசை

எனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்

இணைய வேண்டும்

இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்

இருக்க வேண்டும்

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

பாடல் : வசீகரன்

குரல் : உன்னிமேனன், ஐPவரேகா

இசை : வி.எஸ்.உதயா

எண் : 02

காதல் கடிதம்

பல்லவி

ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே

பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே

உன் உயிராலே என்னைத் திறந்தவளே

என் உயிரோடு வந்து கலந்தவளே.

என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்

ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்

காதலா...காதலா... காதலா...

காதலா...காதலா...காதலா...

சரணம் - 1

கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை

புதுமெட்டு போடுகிறாய்

மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை

தீயினை மூட்டுகிறாய்

தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ

பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்

தினம் தோறும் கவி பூக்கும்

இசைவந்து தேன் வார்க்கும்!

நீயின்றி என் வாழ்வு இல்லையே!

சரணம்- 2

தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்

தினம் தினம் குதிக்கின்றாய்

ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்

செவிகளில் நிறைகின்றாய்

உன் பார்வை வரம் கேட்கும்

ஏழை யாசகன்

உன் பேரை தினம் பாடும்

நானோர் வாசகன்

நறுமுகையே குறுநிலவே

தரு நிழலே குளிர் மழையே

நீயின்றி என் வாழ்வு இல்லையே.

பாடல் : வசீகரன்

குரல் : விதுபிரதாபன்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 07

ஏட்டில் : 07.11.2001

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

பல்லவி

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே

சின்னக் கவிபாடடி

உன் கண்ணுக்குள்ளே ஏன் ஓவியத்தை

வரைந்தவர் யார் சொல்லடி

உன் நினைவுகள் என்னை உருக்கும்

பல பட்டாம் பூச்சிகள் பறக்கும்

ஆயிரம் வண்ணங்கள் சிரிக்கும்

என் வாசலில் வானவில் உதிக்கும்

தினம் தினம் மின்மினி

பறக்கின்றதே

சரணம் 1

நிலவின் மடியில் உலகம் மயங்கும்

அவசரமாய் காலை விடியும்

மஞ்சள் பூக்கள் ரோஐh கூட்டம்

அழகழகாய் நம்மை வாழ்த்தும்

மின்னல் மேகம் வந்து சால்வை போர்த்தும் போது

மழைத்துளி எட்டிப் பார்க்கும்

மஞ்சள் வெயில் வந்து மண்ணைப் போர்த்தும் போது

மனசெங்கும் பரவசமே...

கொள்ளை கொள்ளை இன்பம்

எல்லை இல்லா வானம்

விண்ணுக்கொரு பாலம் செய்வோம்

பூப்பறிப்போம்

சரணம் 2

மூன்றே மாதம் மூன்றே மாதம்

கோடைகாலம் பூத்து விரியும்

மஞ்சள் பூக்கள் மஞ்சள் பூக்கள்

இளம் கூந்தல் தேடித் திரியும்

பருவப் பூக்கள் சேலை கட்டும் போது

பனித்துளி எட்டிப் பார்க்கும்

ஆக்கப் பிறிக் கடற்க்கரையில்

அலைகள் மோதும் மோதும்

சிலைகள் கால் நனைக்கும்

சிறைகள் தாண்டிப் போவோம்

சிறகுகள் இரண்டு கேட்போம்

நீயும் நானும் காதல் செய்து

வேர்த்திருப்போம்.

பாடல் : வசீகரன்

குரல் : மதுபாலகிருஷ்ணன்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 03

ஏட்டில் :

காதல் கடிதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.