Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் நலன்புரி நிலைய மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம்

Featured Replies

இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய மாணவன் வேலும் மயிலும் சுதன் தற்போது வெளியாகியுள்ள க.பொ.த.

உயர்தரப் பரீட்சைம் பெறுபேறுகளின் படி கலைப் பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். வேலும்மயிலும் சுதன், பரீட்சையில் தான் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், ""நான் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெறுவேன் என எதிர்பார்த்திருந்தேன்.

எனினும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றது எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கின்றது.

தமிழ், கர்நாடக சங்கீதம் ஆகிய பாடங்களில் "ஏ' சித்தியினையும் வரலாறு பாடத்தில் "பி' சித்தியினையும் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்துக்கு வந்துள்ளேன்.

நான் எனது ஆரம்பக் கல்வி, இடை நிலைக் கல்வி ஆகியவற்றினை வடமராட்சி கிழக்கிலுள்ள மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை, உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகிய வற்றில் கற்றுள்ளேன். பின்னர் யுத்தச்சூழ்நிலை காரணமாக எனது குடும்பம் மாத்தளனுக்கு இடம்பெயர நேரிட்டது.

அங்கு மாத்தளன் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலும், தொடர்ந்து புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்திலும் கல்வியைத் தொடர்ந்தேன்.

அங்கும் எனது கல்வியைத் தொடர யுத்தச் சூழ்நிலை தடையாக இருந்தது.

இதனால், மீண்டும் இடம்பெயர்ந்து பெற்றோருடன் சுண்டிக்குளம், கட்டைக்காடு ஊடாக கால்நடையாகப் பய ணத்தை மேற்கொண்டு யாழ். மாவட்டத்தை வந்தடைந்து, மிருசுவில் நலன் புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டோம். இதனால், எனது கல்வியினை பல மாதங்களாகத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. யுத்தத்தின் பயங்கரம் எனது மனதில் பெரும் சஞ்சலத்தையும் பீதியினையும் ஏற்படுத்தியிருந்த போதிலும்,

மிருசுவில் நலன்புரி நிலையத் திற்கு வந்த பின்னர் எப்படியும் படித்து பஙுட்சைக்குத் தோற்றவேண்டும் என்ற எண்ணத்துடன் சுயமாகவே கற்க ஆரம்பித்தேன்.

அதற்கு எனது பெற்றோரும் ஊக்கத்தினைத் தந்துகொண்டிருந்தார்கள். என்னிடம் பாடப்புத்தகங்களோ பாடக் குறிப்புகளோ எதுவும் இருக்கவில்லை. அவைகளைக் கொண்டு வந்த ஒருசில மாணவர்களிடம் வாங்கிப் படித்தேன். நலன்புரி நிலையத்திலிருந்த மாணவர்கள் ஒன்றுசேர்ந்து படித்ததன் மூலம் ஒருவருக்கு ஒருவர் கல்வியில் உதவக் கூடியதாக இருந்தது. தனியார் கல்வி நிலையங்களுக்கு இடப்பெயர்வுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி நான் சென்றதில்லை.

பரீட்சை அண்மித்த காலங்களில் மிருசுவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் எமக்கு கல்வி போதிக்கப்பட் டது. எனினும், எல்லாப் பாடங்களுக் கும் இறுதிவரை ஆசிரியர்கள் இருக்கவில்லை. அப் பாடசாலையின் அதிபர் முடிந்தளவுக்கு எமக்கு உதவினார்.

வரலாறு பாடத்திற்கான புத்தகங்கள் மற்றும் குறிப்புக் கொப்பிகளைப் பெறு வதில் பல கஷ்டங்களை எதிர்நோக்கினோம். நலன்புரி நிலையத்திற்கு வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களுக்கான சம் பளத்தினை வழங்க வரும் வடமராட்சி வலயக் கல்விப்பணிப்பாளர் வ. செல்வராசாவிடம் எமது ஆதங்கத்தைத் தெரியப்படுத்தினோம். அவர் விரைந்து செயற்பட்டு வரலாறு பாடத்திற்கான புத்தகங்கள், குறிப்புகள் ஆகியவற் றினைப் பெற்று எமக்கு தந்து உதவி னார். அதனால், அப்பாடத்தினைத் தொ டர்ந்து கற்று பரீட்சையில் சித்திய டையக் கூடியதாக இருந்தது.

எம்மில் பலர் பரீட்சைக்குத் தோற்றுவதா அல் லது தோற்றாமல் விடுவதா என தளம் பிக்கொண்டிருந்த போது வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வீ. இராசையா, யாழ். மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி. செல்வரத்தினம் ஆகி யோர் வந்து பரீட்சைக்குத் தோற்றுங்கள் என்று எமக்கு உற்சாகத்தினையும் ஊட் டினார்கள்.

மிருசுவில் தேவாலய அருட்தந்தை எட்வின், "கியூடெக் கரீத்தாஸ்' நிறுவனத்தின் அனுசரணையுடன் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து உதவினார். அதேபோல், யாழ். வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி வேதநாயகமும் யாழ்ப்பாண ஆசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் அழைத்துவந்து பாடரீதியாக கருத்தரங்குகளை நடத்தி எம்மை பரீட்சைக்குத் தயார் செய்தார்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விப் புலத்தைச் சார்ந்த பெரியோர்களும் எமது கல்விக்கு ஊக்கத்தினையும் ஆதரவினையும் தந்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு மகா வித்தியாலய ஆசிரியர்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த போதிலும் கடிதம் மூலம், தொலைபேசி மூலம் பரீட்சை சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் தந்து உதவினார்கள்.

பல்வேறு கஷ்டங்கள் மத்தியிலும் எமது கல்விக்கு துணையாக நின்ற பெற்றோர்களையும் ஆரம்பக் கல்வியிலிருந்து, உயர்வகுப்பு வரை எமக்கு கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர்களையும் இடம்பெயர்ந்து வந்தபோது எமக்குச் பல்வேறு வழிகளிலும் உதவிய கல்வி அதிகாரிகளையும், நலன்புரி நிலைய பாடசாலையில் எமக்கு கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் ஆகியோரையும் சக நோக்குடன் எமக்கு உதவிய அருட் தந்தையர்களையும் மற்றும் சேவை உள்ளம் படைத்த அனைவரையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

தற்போது நான் எனது குடும்பத்தாருடன் நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறி, வடமராட்சியில் கற்கோவளத்தில் தங்கியுள்ளேன். எட்டு மாதங்களுக்கு மேலாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போதிலும் நம்பிக்கையுடன் சுயமாகக் கற்று பஙுட்சைக்குத் தோற்றினேன். நம்பிக்கைதான் வெற்றியின் அத்திவாரமாகும். எல்லாவற்றையும் இழந்த எமக்கு கல்வி ஒன்றுதான் மீதமாகவுள்ளது. அக்கல்வியின் மூலமே எமது எதிர்கால வாழ்க்கையினை எட்டியெழுப்ப முடியும்'' என்றார்.

மிருசுவில் நலன்புரி நிலையத்தில் இருந்து க.பொ.த.உயர்தரப் பஙுட்சைக்குத் தோற்றிய சாந்தராசா சுஜிதரன் 2 ஏ, 1பி சித்தியினைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அவர் நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தனது பெற்றோர்களுடன் வடமராட்சி கற்கோவளத்தில் புனிதநகரில் வசித்து வருகின்றார்.

சாந்தராசா சுஜிதரன் தான் பஙுட்சையில் பெற்ற பெறுபேற்றினைப் பற்றித் தெரிவிக்கையில், ""இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களை கடந்த காலங்களில் அனுபவித்த போதும் எனது விடாமுயற்சியும், தொடர்பயிற்சியும் தான் பரீட்சையில் வெற்றியடைவதற்குக் காரணமாக அமைந்தது. அத்துடன் எனது தந்தை, சகோதரர்கள், மாமா, அப்பு, உறவினர்கள், கல்விப் புலத்தைச் சார்ந்தவர்கள் இவ் வெற்றிக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளார்கள்.

எனது ஆரம்பக் கல்வியினை வடமராட்சி கிழக்கிலுள்ள மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை, உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்றேன். பின்னர் இடம்பெயர்வின் காரணமாக இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் கல்வியையும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் அங்கும் ஏற்பட்ட யுத்தச்சூழ்நிலை காரணமாக அங்கு கல்வியைத் தொடரமுடியாமல் எனது குடும்பத்தாருடன் இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்திற்கு வந்து மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்தேன்.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது எனது தாயாரை இழக்கவேண்டிய துன்பகரமான நிலை ஏற்பட்டது. தாயாரின் இழப்பும் யுத்தத்தின் பயங்கரமும் இடம்பெயர்வும் எனது உள்ளத்தில் பெரும் வடுக்களாக அமைந்தபோதிலும்,

கல்வியில் உயர் நிலையை அடையவேண்டுமென்ற இலக்குடன் விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்தேன். சுய கற்றல் மூலம் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ததன் மூலம் என்னைப் பரீட்சைக்குத் தயார்படுத்திக் கொண்டேன். எட்டு மாதங்கள் மட்டும்தான் உயர்தரப் வகுப்பில் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் கல்விகற்கக் கூடியதாக இருந்தது. அக்காலத்தில் என்னைக் கற்பித்த ஆசிரியர்களையும் சிறு வயதிலிருந்து என்னைக் கற்பித்த ஆசிரியர்களையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=86:2009-12-04-14-28-28&catid=41:2009-11-28-06-39-51&Itemid=105

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.