Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், முஸ்லிம்களை புண்படுத்திய பொன்சேகாவை ஹக்கீம் ஆதரிப்பது வேடிக்கை

Featured Replies

தமிழ், முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பத்திரிகை யொன்றுக்குச் செவ்வி வழங்கிய சரத் பொன் சேகாவை கண்டித்துப் பாராளுமன்றத்திற்கு உள் ளேயும், வெளியேயும் எதிர்ப்புத் தெரிவித்த ரவூப் ஹக்கீம் இப்போது முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை அவருக்குப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி இருப் பது எவ்வளவு வேடிக் கையானது?

இவ்வாறு ஜனாதி பதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதி காரியுமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனி, ஞாயிறு தினங்களில் ஹேவாஹெட்ட, கலகெதர, கண்டி, செங்கடகல ஆகிய தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நடைபெற்ற மக்களை விழிப்பூட்டும் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய அல்ஹாஜ் அஸ்வர் மேலும் கூறியதாவது :-

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருக்கும் பொழுது தமிழ், முஸ்லிம் மக்களைப் புண்படுத்தும் வகையில் வெளிநாட்டுப் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்தார். அவரது கூற்றினைக் கண்டித்து பாராளுமன்றத்தில் பேசிய ஜனாப் ரவூப் ஹக்கீம், பின்னர் வேறு சில கட்சி களையும் சேர்த்துக்கொண்டு சரத் பொன் சேகாவைத் தாறுமாறாகக் கண்டித்துப் பெரும் எதிர்ப்பலையைத் தோற்றுவித்தவர்.

இவர் கையொப்பமிட்ட கண்டன அறிக்கைகள் இன்னும் பல அமைப்புகளிடம் உள்ளன. நிலைமை இப்படியிருக்கையில் சரத் பொன்சேகாவுக்கு முஸ்லிம்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுத் தருவதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கூறியிருப்பது எவ்வளவு வேடிக்கையானது என்று முஸ்லிம்கள் வியப்போடு வினா எழுப்புகின்றனர்.

பலஸ்தீன மக்களுக்காக வேண்டி இன்றுவரையும் ஒரு வார்த்தைகூடப் பேசாத - யூத சியோனிஸவாதிகளின் நண்பனான - ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோடு அவருடைய மேடையிலேறி அவரது ஊதுகுழலாக எப் படித்தான் மு. கா. தலைவர் பேசமுடியுமோ என்பதை முஸ்லிம்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத செயலாகும்.

ஐ. தே. க. என்ற வாகனத்தின் சாரதி யாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை அந்த வாகனத்தில் ஏறமாட்டேன் என்று சூளுரைத்த தலைவர் அஷ்ரப் எங்கே? பொழுது மறைந்து பொழுது விடியும் நேரத்தில் தாம் நடந்து வந்த பாதையை மறந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவரும் ரவூப் ஹக்கீம் எங்கே?

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் சித்தாந்தங்களை நன்கு அறிந்து வைத்துள்ள வர்கள் அக்காங்கிரஸில் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் தற்போதைய தம் தலைவரின் கபட நாடகத்தைப் பார்த்து வெறுப்படைந்து நிற்கின்றனர், என்பதையும் நாம் நன்கறிவோம்.

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்குத் தம் கட்சி உறுப்பினர்களின் பூரண சம் மதத்தைப் பெறாது தாமே தன்னிச்சையாகத் தீர்மானித்ததாக சகோதரர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். ஐ. தே. க. தலைவர் பின்னுகின்ற வெளிநாட்டு சதி வலையில் தற்போதை மு. கா. தலைமை சிக்குண்டு கிடக்கிறது என நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்களுடைய தன்மானத்தை டொலர்களுக்கும் – பவுண்களுக்கும் - குரோனர்களுக்கும் - எவரும் விலைபேசி விற்றுவிட அனுமதிக்க முடியுமா?

சரத் பொன்சேகா ஓர் அநாமதேய மனிதர். அவருக்குக் கட்சியும் இல்லை – சின்னமும் இல்லை – நிறமும் இல்லை. ஓசிவாசியாக ஓர் அன்னத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். ரவூப் ஹக்கீம் அன்னப் பாத்திரத்தை ஏந்தி ரணிலிடமும், பொன்சேகாவிடமும் யாசகம் கேட்குமளவுக் குத் தன் இயக்கத்தைக் கீழிறக்கியுள்ளார்.

மிகவும் கட்டுப்பாட்டுடன் மர்ஹ¥ம் அஷ்ரப் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை ஒரு கேலிக்கிடமான கட்சியாக மாற்றுவதற்கு அக்கட்சியிலுள்ள எவரும் தற்போதைய தலைவருக்கு சம்மதம் வழங்க முடியுமா?

இன்று நாடு போகின்ற போக்கில், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாக 45 இலட்சத்துக்கு மேற்பட்ட அதிகப்படியான வாக்குகளால் மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்ததத்தின் காரணமாக அடிமை விலங்கிடப்பட்டு அல்லலுற்ற வாழ்க்கை நடத்திய வடக்கு – கிழக்கு முஸ்லிம்கள் இன்று பூரண சுதந்திரக் காற்றைச் சுவாசி க்கின்றனர். அவர்களின் வயல் பூமிகள் பொன் பூமிகளாக மாறி வருகி ன்றன.

அவர்களின் கிராமங்கள் இன்று பேரின்பப் பூங்காக்களாகப் பரிணமிக்கின்றன. நடுநிசி வேளையில் உயிரச்சமின்றி கிழக்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் சுதந்திரமாகப் பயணம் செய்து தம் வர்த்தக வாணிபத்தை வளர்த் துக்கொள்ளக் கூடிய அருமையான சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தி யுள்ளார்.

எனவே முஸ்லிம்களின் நாடித் துடிப்பை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் 80% முஸ்லிம்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பர் என நிச்சயமாகிவிட்டது.

http://www.parantan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.