Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது செய்யும் எண்ணங்களைக் கைவிட்டு உருத்திராவுடன் கலந்துரையாடுங்கள்: கொழும்புவி்ற்கு ரொபேட் பிளேக் ஆலோசனை

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் இணைப்பாளரும், அமெரிக்கச் சட்டவாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை அமெரிக்காவின் உதவியுடன் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணித்துத் திரும்பிய தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்கு உதவுவார் எனக் கொழும்பு எதிர்பார்த்திருந்தது.

ஆனால், உருத்திரகுமாரனைக் கைது செய்வதற்குப் பதிலாக மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குவது குறித்து அவருடன் கலந்துரையாடுமாறு சிறிலங்கா அதிகாரிகளுக்கு பிளேக் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ஏற்கெனவே - மாவீரர் நாளான கடந்த நவம்பர் 27ஆம் நாள் உருத்திரகுமாரனைக் கடத்துவதற்கு சிறிலங்கா அரச பாதுகாப்பு மற்றும் புலனாய்வு உயர் வட்டாரங்கள் சில திட்டங்களைத் தீட்டியிருந்தன.

மலேசியாவில் இருந்து ஏற்கெனவே கடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் செயலாளர் நாயகம் செல்வராசா பத்மநாதனை இந்தத் திட்டத்தில் பயன்படுத்துவது அவர்களது திட்டமாக இருந்தது.

ஆனால், அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டதால் - உருத்திரகுமாரனைக் கைது செய்யும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு முழுமையாகக் கைவிட்டிருந்தது.

அதே வேளை, தமது பிடியிலுள்ள விடுதலைப் புலிகளின் தளபதி ராம் மூலமாக - அவர் தமது பிடியில் இல்லாதது போலக் காட்டிக் கொண்டு - ஒரு 'மாவீரர் நாள் அறிக்கை'யை வெளியிட்டு வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் குழுப்பத்தையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம் என சிறிலங்கா அரசு திட்டங்களைத் தீட்டியது.

ஆனால் - ராம் சிறிலங்கா அரசின் பிடியில் இருந்த விடயத்தையும், அவர் ஆற்றவிருந்த மாவீரர் நாள் உரை பற்றிய தகவலையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறை ஒர் அறிக்கை மூலமாக வெளியிட்டு விட்டது.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினரின் இந்த அறிக்கையை புதினப்பலகை வெளியிட்டிருந்தது. அதனால், ராம் அறிக்கை தொடர்பாக வெளிநாட்டுத் தமிழர்கள் ஏற்கெனவே எச்சரிக்கை அடைந்து விட்டிருந்தனர் என கொழும்பு ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் பின்னரே - உருத்திரகுமாரனைக் கைது செய்யும் புதிய யோசனையுடன் சிறிலங்கா அரசு ரொபேட் பிளேக்கை அணுகியது.

அப்போது - உருத்திரகுமாரன் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டிருந்தார் என்பதற்கான ஆதாரங்களை வழங்கினால் அதனைப் பரிசீலிக்கலாம் என பிளேக் பதில் அளித்துள்ளார்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வன்முறை அரசியலுக்குப் பதிலாக ஜனநாயக அரசியலைப் பரப்புவதில் உருத்திரகுமாரன் முன்னிற்பதாகவும், அவரைக் கைது செய்வதென்பது கடும்போக்குவாதப் புலிகளுக்கு ஆதரவாக - தமிழர்கள் மத்தியில் ஜனநாயகத்தைத் தோற்கடிப்பதாக அமைந்துவிடும் என்றும் பிளேக் நம்புவதாவும் கூட ஒரு கருத்து நிலவுகின்றது.

இதற்கிடையில் -

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் மக்கள் முன் வைக்கப்படும் என விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான உருவாக்கக் குழுவின் மதியுரைக் குழு டிசம்பர் 3 - 6 வரையிலான நாட்களில் லண்டனில் சந்தித்தது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையின் முழு விபரம் கீழே:

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபினை இலண்டன் சந்திப்பில் மதியுரைக்குழு நிறைவு செய்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலிருந்து முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு கேள்விகள், கருத்துக்கள், ஆலோசனைகள் இவ்வரைபில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

இச் சந்திப்பின் போது மதியுரைக் குழு கவனத்திற் கொண்ட விடயங்களாக -

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு அடித்தளமாக அமைய வேண்டிய வழிகாட்டிக் கோட்பாடுகள், அறிக்கை வெளியிடப்படும் நாளிலிருந்து தேர்தல்கள் நடைபெற்று நாடு கடந்த தமிழீழ அரசு அமையும் நாள் வரையிவான காலப்பகுதியில் மதியுரைக்குழுவின் செயற்பாடுகள், ஈழத் தமிழ் மக்களின் நலன்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அறிஞர் குழாம் ஒன்றினை ஒழுங்கமைத்தல் ஆகியன உள்ளடங்கியிருந்தன.

மதியுரைக் குழு, நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான பிரித்தானியச் செயற்பாட்டுக் குழுவினருடனும் சந்திப்பினை மேற்கொண்டு, செயற் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களையும் நிகழ்த்தியிருந்தது.

மேலும், லண்டன் மாநகரில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பும் மதியுரைக் குழுவுக்குக் கிடைத்திருந்தது.

மேலும், சிறிலங்காவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான மனிதாபிமான நெருக்கடிகளைக் கவனத்திற் கொண்ட மதியுரைக் குழு -

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது பெற்றோரைப் பிரிந்து தடுப்பு முகாம்களில் வாடும் பிள்ளைகளை பெற்றோரோடு ஒன்று சேர்ப்பது மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்துலக பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றிற்கான வழிவகைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்தது.

இவ்வாறு தடுப்பு முகாம்களில் வாடும் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகளின் தகவல்களை மதியுரைக் குழு தொடர்ச்சியாகச் சேகரித்து ஆவணப்படுத்தி வருகிறது.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கபட்டு இடம் பெயர்ந்த மக்களுடன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தங்கு தடையில்லாத தொடர்பைப் பேணிப் பணியாற்றக் கூடிய சூழலை உருவாக்குமாறு அனைத்துலக சமூகத்தினை மதியுரைக் குழு கோரியுள்ளது.

அவ்வகையில் இம் மக்கள் மீளக் குடியமரும் போது அவர்களது பாதுகாப்பு மற்றும் ஏனைய நலன்கள் குறித்தும், அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படாது பாதுகாக்கப்படுவது உட்பட ஏனைய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செற்றப்படுகின்றனவா என்பது குறித்தும், மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கண்காணிப்பு செய்ய அனுமதிக்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள் தடுப்பு முகாம்களிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதனையும், இவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்கள் புதிய இடங்களில் விசாரணை, மீள் கைது போன்ற துன்புறுத்தல்களுக்கு உள்ளாகாமல் இருக்கக்கூடிய உத்திரவாதங்கள் வழங்கப்படுவதனையும் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மதியுரைக்குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான முயற்சியில் தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதில் மதியுரைக் குழு தனது முழுமையான பற்றுதியை வெளிப்படுத்தியது.

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை தொடர்பான வேலைகள் வகுக்கப்பட்டிந்த திட்டத்திற்கு அமைவாக முன்னேறி வருவதனையும், 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இவ் அறிக்கை மக்கள் முன் வைக்கப்படும் என்பதனையும் மதியுரைக்குழு அறியத் தருகின்றது.

நன்றி: http://www.puthinappalakai.com/view.php?20091211100182

Edited by இளைஞன்

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வன்முறை அரசியலுக்குப் பதிலாக ஜனநாயக அரசியலைப் பரப்புவதில் உருத்திரகுமாரன் முன்னிற்பதாகவும், அவரைக் கைது செய்வதென்பது கடும்போக்குவாதப் புலிகளுக்கு ஆதரவாக - தமிழர்கள் மத்தியில் ஜனநாயகத்தைத் தோற்கடிப்பதாக அமைந்துவிடும் என்றும் பிளேக் நம்புவதாவும் கூட ஒரு கருத்து நிலவுகின்றது. இதற்கிடையில் - நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் மக்கள் முன் வைக்கப்படும் என விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Edited by இளைஞன்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்சில் 12இ13 நாட்களில் தமிழீழ தாகத்தை உலகிற்கு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி எடுத்துரைக்கும் நாள் அதற்கான எமது உறுதிப்பாட்டை நடைபெறும் வாக்களிப்பில் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்து உலகிற்கு நிரூபிக்கும் நாள்.

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்காக நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தனது அறிக்கையின் முதலாவது வரைபை நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் மதியுரைக்குழு நிறைவு செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி செயற்பாட்டாளர் வீ. ருத்திரகுமாரனை கைது செய்வதற்கான புலனாய்வு தகவல்களையும்இ ஆதாரங்களையும் அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்ள தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற் குழுவின் இணைப்பாளரும்இ அமெரிக்கச் சட்டவாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை அமெரிக்காவின் உதவியுடன் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது குறித்த...

Edited by kalaivani

அமெரிக்காவிற்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் விடப் போவதில்லை என்று மீண்டும் கைது செய்வதற்கான முயற்சி நடக்கும் . அதற்கு சீனாவும் இந்தியாவும் போட்டிபோட்டுக் கொண்டு துணைக்கு வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.