Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றம் -நேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றம் -நேசன்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தான் நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன் மோகன் சிங் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து சரத் பொன்சேகா படையினர் மத்தியில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்திருந்ததாகவும் இந்த நிலையானது

இலங்கையில் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று கொழும்பில் உள்ள ரோ அதிகாரிகள் மூலம் இந்திய பிரதமருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளை போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று மன் மோகன் சிங்க ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியை எச்சரித்த்துள்ளார்.

இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளை உடனடியாக இடமாற்றுமாறும் அதிகளவு பலம் பொருந்தியவராக மாறியுள்ள சரத் பொன்சோகவிற்கு அதிகாரங்கள் அற்ற பதவி ஒன்றை வழங்குமாறும் மன் மோகன் சிங் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உத்தரவுகள் பலவற்றை சரத் பொன்சேகா நிறைவேற்ற தவறியதாகவும் அந்த உத்தரவுகள் இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் தன்னிச்சையான செயல்பாடுகளால் யுத்த களத்தில் இந்தியா விரும்பிய சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறாது போய்விட்டதாகவும் அதனால் சரத் பொன்சேகா மீது இந்தியாவிற்கு கடும் விசனம் ஏற்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

http://www.pathivu.com/news/4612/54//d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமப்பா சிங்கின்ட சொல்லுக்கேட்டு அலுத்து ஸ்ரீலங்கா இந்தியாவுக்கு ஆப்பு வைக்க துடங்கீட்டுது எண்டு பதிவில கொஞ்சமுதல்தான் வாசிச்சன். :unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.