Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதோடு காதாக ‐ மாத்தறையில் சரத் பொன்சேக்காவின் தேர்தல் விளம்பரப் பலகைகள் இனந்தெரியாதோரினால் தீயிடப்பட்டுள்ளன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறை நகரில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் தேர்தல் விளம்பரப் பலகைகள் இனந்தெரியாத சிலரினால் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு, தீயிடப்பட்டுள்ளன. இந்தப் பெற்றோல் குண்டுத் தாக்குதலினால், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள சில வீடுகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியின் மாத்தறை மாவட்டத் தலைவர்கள், மாத்தறைக் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பிலிருந்து பசிலுக்கு 10 வீதமும் நாமலுக்கு 10 வீதமும் தரகுப் பணம் வழங்கப்படுகின்றது – மங்கள :

இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற அமைப்பிலிருந்து பசில் ராஜபக்ஸவிற்கு 10 வீதமும் நாமல் ராஜபக்ஸவிற்கு 10 வீதமும் தரகுப் பணம் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனால் இளைஞர்களுக்கான எதிர்காலம்; என்ற அமைப்பு மகிந்த ராஜபக்ஸவை மீண்டும் பதவியில் அமர்த்துவது ராஜபக்ஸ குடும்பங்களுக்கே அன்றி நாட்டின் எதிர்கால இளைஞர் சமுதாயத்திற்காக அல்ல எனவும் மங்கள கூறியுள்ளார்.

நேற்றை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். மக்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு தரகுப் பணத்தைப் பெற்றுவரும் ராஜபக்ஸ குடும்பத்தினர் அதன் சுவையை நன்கு உணர்ந்துள்ளதால் மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாகும் கனவைக் கண்டுகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஸ குடும்பத்தைத் தோற்கடித்து ஊழல் மோசடியில் ஈடுபடுவோருக்கு சிறந்த பாடத்தைக் கற்பிப்பர் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் பொறுப்புக்கள் பதவிகள் எதுவும் இதுவரை வழங்காததால் எஸ்பி கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளாராம் :

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து எஸ்.பீ.திஸாநாயக்க அரசாங்கத்தில் இணைந்து 10 நாட்கள் கழிந்துள்ள போதிலும், அவருக்கு இதுவரை பொறுப்புக்களோ, பதவிகளோ வழங்காததால் திஸாநாயக்க கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பதவிகள் மற்றும் பொறுப்புக்களில் இருந்து மத்திய மாகாண உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொண்ட எஸ்.பீ.திஸாநாயக்க கடந்த 7ம் திகதி விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதாக அறிவித்தார்.

அவர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தமை தொடர்பாக அந்தக் கட்சியிலுள்ள சிரேஸ்ட தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நேற்று (16) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து, அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சண்டேலீடர் பத்திரிகைக்கெதிராக கோதாபய தாக்கல் செய்த சகல வழக்குகளையும் திரும்பப்பெற ஜனாதிபதி தீர்மானம் :

சண்டேலீடர் பத்திரிகைக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த சகல வழக்குகளையும் திரும்பப்பெறுவது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தனக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறி, பாதுகாப்புச் செயலாளர் சண்டேலீடர் பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன், அதுதொடர்பான விசாரணைகள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

எவ்வாறாயினும், பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா சம்பந்தமாக சண்டேலீடர் பத்திரிகையில் வெளியாகிய பிரதான செய்தி குறித்து ஜனாதிபதி மாத்திரமல்லாது பாதுகாப்புச் செயலாளரும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக மேற்கூறிய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்ற போது ஆரவாரமான வரவேற்பு கிடைக்காதது குறித்து ஜனாதிபதி கோபமடைந்துள்ளாராம் :

வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சென்ற போது, ஆரவாரமான வரவேற்பு கிடைக்காதது குறித்து அவர் கோபமடைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் தனது அருகில் இருந்த அமைச்சர் பியசிறி விஜேநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமானதுடன் ஜனாதிபதி 10.25 அளவில் அங்கு சென்றிருந்தார். ஜனாதிபதி அங்கு செல்லும்போது அனைவரையும் எழுந்திருக்குமாறு அங்கிருந்த அதிகாரியொருவர் சைகை காட்டிய போதிலும் இலங்கை முற்போக்கு முன்னணியின் முன்னாள் செயலாளர் ரொஹான் பெரேரா மற்றும் அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நெல்சன் பெரேரா ஆகியோரைத் தவிர வேறு எவரும் எழுந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தவில்லை.

பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா இதன்போது அந்த வைபவ மண்டபத்தில் பிரசன்னமாகி இருக்கவில்லை. ஜனாதிபதி சென்ற போது எழுந்து அவருக்கு மரியாதை செலுத்திய இலங்கை முற்போக்கு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை இங்கு விசேட அம்சமாகும்.

அரச ஊடகங்கள் சரத் பொன்சேக்காவிற்கு அநீதி இழைக்கவில்லை ‐ ஊடகத்துறை அமைச்சர் :

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வைபவத்தின்போது அரச ஊடகங்களினால் சரத் பொன்சேக்காவிற்கு அநீதி இழைக்கப்படவில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஸன யாப்பா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் வைபவத்தை தானும், தொலைக்காட்சியில் பார்வையிட்டதாகவும் வேட்பு மனுத் தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களையும் தன்னால் பார்க்க முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஏதேனும் விதத்தில் அநீதி ஏற்பட்டிருக்குமானால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தான் தயார் எனவும் அமைச்சர் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின் கால் பாம்பறியும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.