Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிட்டார் சரத் பொன்சேகா: தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்கவேயில்லை

Featured Replies

சிறிலங்கா அரசஅதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் சரத் பொன்சேகாவின் கொள்கை அறிக்கையில் இனப்பிரச்சனை தொடர்பாகவோ, தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை.

சரத் பொன்சேகா தனது பத்து அம்ச கொள்கைப் பிரகடனத்தை கண்டி சிறி புஷ்பாதான கேட்போர் கூடத்தில் வெளியிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் அவருக்கு ஆதரவு வழங்கும் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சரத் பொன்சேகாவின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வைக் கொடுக்கப் போகிறேன் என்பது பற்றியும் அவர் வாய் திறக்கவேயில்லை.

தமிழ்மக்களின் முப்பதாண்டு ஆயுதப்போராட்டத்தை போர் மூலம் முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னின்றவர் சரத் பொன்சேகா. தமிழர் பிரச்சனை இராணுவ வழியில் தீர்க்கப்பட்டு விட்டதென்று இதன் மூலம் அவர் உணர்த்தியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்தபோது அவர் நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை போரினால் இடம்பெயர்ந்த மக்கள், மற்றும் இடம்பெயர வைக்கப்பட்ட மக்களை அவர்கள் விரும்பும் இடத்தில் மீளக்குடியமர்த்துவேன் என்றும் சரத் பொன்சேகா உறுதிமொழி வழங்கியுள்ளார். ஆனால் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவேன் என்று வாக்குறுதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்தவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதானால் உயர் பாதுகாப்பு வலயங்களில் மீளக்குடியமர்த்த வேண்டிய நிலை உருவாகும். எனவே தான் அவர்கள் விரும்பும் இடம் என்ற பதத்தை சரத் பொன்சேகா தனது கொள்கை அறிக்கையில் சேர்த்திருப்பதாகவும் தெரியவருகிறது.

சரத் பொன்சேகாவிடம் இருந்து ஏதாவது முன்மாதிரியான கொள்கைப் பிரகடனம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இதுபெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொள்கைப் பிரகடனத்தின் முழுமையான விபரம் வருமாறு:

01.

இப்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசஅதிபர் முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலை காணப்படுகின்றது. எனவே, முதற்கட்டமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,

- சுதந்திர தேர்தல் ஆணைக்குழு

- சுதந்திர காவல்துறைச் சேவை ஆணைக்குழு

- சுதந்திர நீதிச்சேவை ஆணைக்குழு

- சுதந்திர அரசசேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

02.

தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியாகவும், நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன்.

03.

அரச அதிபராகப் பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தின் ஊடாக அதனை நீக்கி மக்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவேன்.

04.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசஅதிபர் முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய அதிபராக நாடாளுமன்றத்துடன் இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

05.

போர் காரணமாக இடம்பெயர்ந்த சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன்.

அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

06.

முப்பது வருடப் போர் முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களின் விருப்பத்துக்கு இணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

07.

ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

08.

அரசஅதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

09.

நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

10.

கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

http://www.puthinappalakai.com/view.php?220BTnBZacca4eoOA3d4de5PZc4e3022lJOImd4decOYldnc0a0Am4BZa2e24KKMCQc3a0dn5BZd4e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் என்ன எழுதினாலும் பொதுவா தமிழர் ஐதேக சார்பான வேட்பாளருக்குத்தான் போடுவினம். சரத்துக்கு இங்க இருக்கிற ஆதரவ பாத்து மயங்கி விழாத குறை. :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன எழுதினாலும் பொதுவா தமிழர் ஐதேக சார்பான வேட்பாளருக்குத்தான் போடுவினம். சரத்துக்கு இங்க இருக்கிற ஆதரவ பாத்து மயங்கி விழாத குறை. :rolleyes::rolleyes:

நீங்கள் மயங்கி விழுந்தால் ....., இந்த வெள்ளை வான் வரும் , ஏனென்றால் நீங்கள் தமிழர்.

.

ambulance-016.gif

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.