Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த வெற்றியின் முனைப்பில் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் – ஆசிரியர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்த வெற்றியின் முனைப்பில் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் – மீனகம் ஆசிரியர்

சிறிலங்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக ஜனவரி மாதம் நடைபெறப்போகும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. சிறிலங்காவின் ஆறாவது அதிபர் தேர்தலுக்கான இந்த வேட்புமனுத்தாக்கலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 18பேரும், சுயேச்சையாக 5பேருமாக மொத்தம் 23பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தபோதிலும் ஒருவரது வேட்பு மனுவை தேர்தல் திணைக்களம் நிராகரித்துள்ள நிலையில் 22பேர் போட்டியிடுகின்றார்கள்.

இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் தவிர ஏனைய அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த கையோடு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள அதேவேளையில் தேர்தல் வன்முறைச்சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் பெரும்பான்மை இனமக்கள் வாழும் மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளன.

இந்த தேர்தல் களத்தில் 22வேட்பாளர்கள் போட்டியாளர்களாக இருக்கின்ற போதிலும் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் திரு மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதான கூட்டணிக்கட்சியாக கொண்ட புதிய ஜனநாய முன்னணியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா அவர்களுக்கும் இடையேதான் பலத்த போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

கடந்த காலத்தேர்தல்களின் போதெல்லாம் சமாதானம் என்கின்ற கோஷத்தை முதன்மைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை நடாத்திய அரசியல்வாதிகள் அனைவரும் பின்னர் தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கைவிட்டு யுத்தத்தை முதன்மைப்படுத்தி தமது அரசியலினை நகர்த்தினார்கள். ஆனால், கடந்த காலங்களில் இருந்ததுபோல் அல்லாது இந்த தேர்தல் காலம் சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது, விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்துவிட்ட நிலையில் நடைபெறப்போகும் இந்த அதிபர் தேர்தலில் பிரதான போட்டி நிலவும் என எதிர்பார்க்கும் இரண்டு வேட்பாளர்களும் விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்டவர்கள். சர்வதேசத்தின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது பிராந்திய நாடுகளின் முழு ஆதரைவைப்பெற்றுக்கொண்டு விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடாத்திய அதிபர் மகிந்தவும், அவரின் கட்டளைகளை சிரமேற்கொண்டு தமிழ் மக்களின் நலன்களை சிறிதளவேனும் சிந்திக்காது விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்காக ஆயிரக்கணக்கிலான அப்பாவி தமிழ மக்களின் உயிர்களை பறித்து வெற்றியை ஈட்டிக்கொடுத்த சிறிலங்கா இராணுவத்தின் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் தேர்தல் களத்தில் இருந்து கொண்டு புலிகளுடன் ஈட்டிய வெற்றிக்கு காரணகர்த்தா தாமே என்ற வீரப்பேச்சுடன் பிரச்சாரங்களை முதன்படுத்துகின்றார்கள். யுத்த வெற்றிக்கு காரணம் யார் என்ற விவாதம் ஒருபுறுமிருக்க பெற்றுக்கொண்ட வெற்றியை வைத்து வாக்கு வேட்டையை கவர்ந்து இழுத்து வருகின்றார்கள்.

இதேவேளையில், யுத்த வெற்றிக்கு உரிமைகோரி இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் களத்தில் நிற்பதால் இத்தேர்தல் பாரிய சவால் நிறைந்ததாகவும் வன்முறை நிறைந்ததாகவும் அமையலாம் என்ற அச்சத்தினை தேர்தலுக்கான ஜனநாயக செயற்பாடுகள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. எனவே தேவையற்ற தலையீடுகள் அன்றி பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வேண்டுகோள விடுத்துள்ளது.

நடைபெறப்போகும் அதிபர் தேர்தலை முன்னிட்டு சிறிலங்கா முழுவதிலுமாக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இராணுவத்தரப்பிலிருந்து சுமார் 50 ஆயிரம் பேரையும், பொலிஸ் தரப்பிலிருந்து சுமார் 12 ஆயிரம் பேரையும் இந்த பாகதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பாகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட ஈழப்போர் காலப்பகுதியின் பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதியின் பல பகுதிகள் விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்தது. அதன் காரணமாக அந்தப்பகுதிகளில் அம்மக்கள் தேர்தல்களின் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச் சாவடிகள் அமைக்கப்படாத நிலையில் இராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு வந்து வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி படைத்தரப்பினால் அம்மக்கள் வாக்களிக்க வருகைதருவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், தடுக்கப்பட்டதும் நாமறிந்தவை. இது தவிர வேறு சில காரங்களினாலும் அம்மக்கள் சில தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால், இன்று அவ்வாறான ஓர் நிலை சிறிலங்காவில் இல்லை. நாடு முழுவதும் தம் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு கூறுககின்றது. இவைகள் ஒருபுறமிருக்க, யுத்தம் காரணமாக தமிழர் தாயக்கதில் இடம்பெயர்ந்த நிலையில் லட்சக்கணக்கிலான மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களும் தேர்தலில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தேர்தல் சம்பந்தமான ஆர்வமும் அக்கறையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள சலசலப்புக்களை தமிழ் மக்கள் மத்தியில் காணமுடியவில்லை.

மூன்று தாசாப்த கால யுத்தமானது தமிழ் மக்களின் சொத்திழப்புக்களையும், உயிரிழப்புக்களையுமே ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கு எதிராக யுத்தம் கட்டவீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் யுத்த வெற்றியை முதன்படுத்தி இரு பிரதான வேட்பாளர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதனால் அது சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமே எடுபடும். ஆனால், தமிழ் மக்களின் மத்தியில் இது எடுபடப்போவதில்லை. அதனால், இந்த தேர்தலில் தமிழ் மக்கள் நிலைப்பாட்டினை எடுப்பார்கள், என்ன முடிவுகளை மேற்கொள்ளப்போகின்றார்கள் என்பது இதுவரையில் தெளிவாகவில்லை.

ஆனால், சிறிலங்கா அதிபரை தெரிவுசெய்வதில் சிறுபான்மை இனமக்களின் வாக்கு வங்கிகள் தான் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தும். தமிழ் மக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருக்க யுத்த வெற்றியை முதன்மைப்படுத்தி இரு பிரதான வேட்பாளர்களும் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் யாருக்கு தேர்தல் வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஆசிரியர்

மீனகம் தளம்

http://meenakam.com/?p=748

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க வெணடதுக்கு தேர்தல் இங்க தோத்ததுககுத் தேர்தல். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க வெணடதுக்கு தேர்தல் இங்க தோத்ததுககுத் தேர்தல். :lol:

10-15 வாக்கில வந்ததுகளும் தேர்தலில் வாக்கு கேட்கினமாம். டக்ளஸ் .....................அவர் வந்த கூலி பட்டாளமும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10-15 வாக்கில வந்ததுகளும் தேர்தலில் வாக்கு கேட்கினமாம். டக்ளஸ் .....................அவர் வந்த கூலி பட்டாளமும் தான்

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10-15 வாக்கில வந்ததுகளும் தேர்தலில் வாக்கு கேட்கினமாம். டக்ளஸ் .....................அவர் வந்த கூலி பட்டாளமும் தான்

உது நியூஸ்.... :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.