Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் சிறார் புலிகளுக்கு இன்னொரு வாய்ப்பு?

Featured Replies

கொழும்புக்கு அருகே உள்ள ரத்மலானை இந்துக் கல்லூரியில் தற்போது 273 முன்னாள் சிறுவர் போராளிகள் கல்வி கற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“ஏனையவர்களுக்குத் தொழிற் பயிற்சி அல்லது தொழில் நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; ஏனெனில் அவர்களின் கல்வி தடைப்பட்டு நீண்ட நாட்களாகி விட்டன” எனத் தெரிவித்தார், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க.

கொழும்பில் கல்வி கற்று வரும் முன்னாள் போராளிகள் அங்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களிலும் அம்பேபுசவில் உள்ள முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்

இந்த முகாம்களில் அவர்களுக்குத் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டன; ஆனால், அவர்களுக்குப் புரியாத சிங்கள மொழியிலேயே எல்லாமும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

ஆனால், இரத்மலானவில் அவர்களுக்குத் தமிழிலேயே கற்பிக்கப்படுகிறது. பல மாத இடைவெளியின் பின்னர் பாடத் திட்டங்களை இப்போது கற்று வருகின்றார்கள்.

அத்துடன் நாளாந்தம் தமிழ்ச் சமூகத்துடன் உறவாடும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

“படிப்பதில் இந்தப் பிள்ளைகள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த காலம் பற்றிப் பேச அவர்கள் விரும்பவில்லை. அதை மறக்க நினைக்கிறார்கள். எங்களால் அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களை ஊக்குவித்து முன்னேற்றக்கூடிய ஒரு வகுப்புச் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்” என்கிறார் பாடசாலை ஆசிரியை.

இந்த மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சிறுவர்கள், அங்கு ஏற்கெனவே கல்வி கற்கும் ஏனைய சிறுவர்களுடன் உறவாடுவதற்கு அனுமதி இல்லை.

தனியான வகுப்பு ஒன்றில் வைத்தே அவர்களுக்குக் கல்வி போதிக்கப்படுகிறது.

படை ஆட்கள் தொடர்ந்தும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கிறார்கள்; அவர்களுடைய நடமாட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

“நாளடைவில் அவர்களை எமது வழமையான வகுப்பு மாணவர்களுடன் நாம் சேர்த்துக்கொள்வோம். எந்த வகுப்புகளில் சேர்த்துக் கொள்வது என்பது தொடர்பில் ஒவ்வொருவராக மதிப்பிட்டு வருகின்றோம்” எனக் கூறினார் இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரி நடராஜா மன்மதாராஜா.

யோகா மற்றும் கதை, கவிதை எழுதுதல் போன்ற பாடத்திட்டத்திற்கு மேலதிகமான செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

இந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் 14 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

அவர்களது குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சிதறி வாழ்கின்றன.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தமது உறவினர்கள் வாழ்கிறார்கள் என்று மாணவர்களில் சிலர் கூறுகின்றனர்.

“தந்தையை நான் இழந்துவிட்டேன். ஆறு மாதங்களுக்குப் பின்னரே அம்மாவைப் பார்த்தேன். கொழும்புக்கு வந்த பின்னரே அவரைச் சந்தித்தேன்.

ஆனால், எனக்கு எப்போது அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதோ அப்போதெல்லாம் பார்க்க முடியவில்லை” என கண் கலங்குகிறார் கவிதா.

“நான் எப்போதும் வீட்டு நினைவுகளுடனேயே இருக்கிறேன். என் குடும்பத்துடன் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டால் நான் சந்தோசமாக இருப்பேன்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

அந்த மாணவர்களது பெற்றோரை வவுனியாவில் இருந்து சீரான இடைவெளிகளில் அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளைத் தாம் செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இந்தப் புனர்வாழ்வு நடவடிக்கைகள் பல தரப்பினரதும் கவனத்தைக் கவர்ந்துள்ளன.

“இந்த மாணவர்களின் பெற்றோரில் சிலர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து உள்ளூர அச்சமடைந்துள்ளனர். ஊடகங்களின் அளவு்கு அதிகமான பார்வை இந்தப் பாடசாலை மீது விழுவதால் - இனக் கலவரங்கள் ஏற்படும் போது பாடசாலை இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது” என்கின்றன பாடசாலை நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள்.

ஆனால், அத்தகைய முறைப்பாடுகள் எவற்றையும் பெற்றோரிடம் இருந்து தான் இதுவரை பெறவில்லை என்று அதிபர் கூறினார். “பொதுவாக பெற்றோர் ஆதரவாகவே நடந்துகொள்கிறார்கள்” என்றார் அவர்.

அரசின் இந்த நடவடிக்கையால் – சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கவரப்படவில்லை.

சிறிலங்கா அரசின் இந்தச் செயலை ஒரு பரப்புரை நடவடிக்கையாகவே கூட்டமைப்புப் பார்க்கின்றது.

“அனைத்துலக சமூகத்திற்கும் ஊடகங்களிற்கும் இந்த மாணவர்களைக் காட்சிப் பொருளாக்கக் காட்ட சிறிலங்கா அரசு முயல்கின்றது.

ஏனைய தடுப்பு முகாம்களும் இது போன்றே நல்லவிதமாக நடத்தப்படுகின்றன என்கிற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த இதன் மூலம் கொழும்பு முயற்சிக்கிறது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 10,000க்கும் அதிகமானோரை பல்வேறு முகாம்களில் அரசு அடைத்து வைத்திருக்கிறது. இந்த முகாம்களுக்குச் செல்வதற்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை” என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

ஆனால், அரசு எந்த விடயத்தையும் மறைக்கவில்லை என்று கூறுகிறார் மேஜர் ஜெனரல் ரட்ணாயக்கா.

“அவர்கள் சுதந்திரமான, பொறுப்புணர்வுள்ள குடிமகனாக வருவதற்கு வேண்டிய வகையில் நிதி, கல்வி, தொழில் பயிற்சி உதவிகளை நாங்கள் வழங்குவோம்” என்கிறார் அவர்.

இந்தச் சிறுவர்கள் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டால் அவர்கள் வழமையான வாழ்க்கைக்குத் திரும்பி விடுவார்கள். படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தும் விலகி விடுவார்கள்.

ஆனால் அது எப்போது நடைபெறும் என்பது தெரியவில்லை.

படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள முன்னாள் சிறுவர் போராளிகள் அனைவரையும் அவர்களின் பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று ஐ.நா. உயர் தூதுவர் ஒருவர் அண்மையில் சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

“வன்னியில் நிகழ்ந்த கொடூரமான போரின் சாட்சிகளான இந்தச் சிறுவர்களைத் தொடர்ந்து படையினரின் நிர்வாகத்தில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் வைத்திருப்பது - இதுவரைக்கும் அங்கு நியாயமான நடவடிக்கைகளே இடம்பெற்றிருந்தாலும் கூட – விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தாது” என தெரிவித்தார், இந்தச் சிறுவர்களின் மறு வாழ்வுப் பணிகளுடன் தொடர்பு உடைய, ஆனால் தன்னை அடையாளப்படுத்த வேண்டாம் என்று கூறிக்கொண்ட ஒருவர்.

“கட்டுப்பாடுகள் மிக்க ஒரு எல்லைக்குள் தாம் முடக்கப்பட்டுள்ளோம் என்பதையும், தாம் விரும்பியதைச் செய்யும் சுதந்திரமும் தமக்கு இல்லை என்பதையும் அந்தச் சிறுவர்கள் உணரும் போது - பதற்றம் உருவாகத் தொடங்கலாம்” என்கிறார் அவர்.

நன்றி: BBC

http://www.puthinappalakai.com/view.php?20091224100232

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.