Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!

‘இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?’ – தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா!

இலங்கை தேசத்தில் இருந்து விட்டால்போதும் என்று ஒரு பழைய கப்பலைப் பிடித்துத் தப்பித்த ஈழத் தமிழர்கள், மலேசியா வழியாகப் பயணித்து ஆஸ்திரேலியாவை நோக்கி கலத்தைச் செலுத்தினார்கள். இடையில் குறுக்கிட்டது இந்தோனேசியா. உயி ரைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த அப்பாவி மக்கள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு 70 நாட் களாக நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். கடலின் தத்தளிப்பில் தமிழனின் வாழ்க்கை அல்லாடுகிறது!

”எப்படியாவது இந்த நாட்டுல இருந்து தப்பிச்சாப் போதும்’ என்று பலரும் கிளம்ப ஆரம்பிக்கிறார்கள். லட்சங்களில் பணம் வைத்திருப்பவர்கள், சில அதி காரிகளிடம் கொடுத்து விமானங்களில் வெளியேறு கிறார்கள். ஆண்களாக இருந்தால், 15 லட்சம் தந்தால் கொழும்பைவிட்டு எந்தத் தடையும்இல்லாமல் வெளியேறலாம். இன்னொரு பகுதியினர் கொழும்பில் இருந்து விமானத்தின் மூலம் மலேசியா அல்லது சிங்கப்பூர் செல்கிறார்கள். அங்கே இருந்து பெரிய படகுகள் மூலமாக வேறு நாடுகளுக்குஇடம் பெயர் கிறார்கள். அந்த நாட்டில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்று வாழலாம் என்பது அவர்களது முடிவு. இது மாதிரி கடந்த ஐந்து மாதங்களில் நான்கு குழுக்கள் போயிருக்கின்றன. 56 பேர்கொண்ட குழு, கனடாவுக்குச் சென்றது. அவர்கள் அகதிகளாக ஏற்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு முதல் கப்பலில் போனவர்களை அந்நாடு ஏற்றுக்கொண்டது. அடுத்த கப்பலில் போனவர்கள் 27 பேர் வேறு இடம் மாறி காக்கஸ் தீவுக்குப் போய் கவிழ்ந்து இறந்துபோன கொடுமையும் நடந்தது. அடுத்த 78 பேர், இடம்மாறி பின்டன் தீவில் இறங்கிவிட்டார்கள். அங்கு இன்னமும் காத்திருக்கிறார்கள். ‘இவர்களை விரைவில் ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாளைக்குத் தங்கவிட மாட்டோம்’ என்று அங்கும் நெருக்கடி ஆரம்பித்து உள்ளது. ‘எங்களுக்குத் தேவை இல்லாமல் நெருக்கடி கொடுத்தால், தற்கொலை செய்துகொள்வோம்’ என்று அவர்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது சென்றவர்கள் 225 பேர். ஆஸ்திரேலியா வுக்குப் போவதற்கு முன்பே இந்தோனேசியக் கடல் எல்லையில் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 30 பேர் பெண்கள். 10 குழந்தைகள் இருக்கிறார்கள்.

அக்டோபர் மாதம் 18-ம் தேதி சுந்தா ஜலசந்தியை இவர்களது படகு கடந்தது. இது இந்தோனேசியாவுக்கும் ஜாவா சுமத்திராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி. இவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வளைத்தனர். ஆனால், மீட்புப் படகு அவர்களிடம் கிடையாது. எனவே, ஆஸ்திரேலியாவின் உதவியைக் கேட்டனர். கடற்படைக் கப்பலான ஹமிஸ் ஆர்மி டேல் அங்கு சென்றது. ‘நாங்கள் அனைவரும் இலங் கைத் தமிழர்கள். ஆஸ்திரேலியாவுக்குத்தான் போகி றோம்’ என்று சொன்னார்கள். உடனே இந்தோனேசிய அதிகாரிகள், ‘உங்களது நாட்டுக்கு அழைத் துச் செல்லுங்கள்’ என்றார்கள். அதை ஆஸ்திரேலியா மறுத்ததுதான் வேதனையின் தொடக்கம்.

ஒரு வார கால அவகாசம் தருவதாக இந்தோ னேசியா சொன்னது. ஆனால், அவர்களிடம்இருந்து சம்மதம் வரவில்லை. ”நாங்கள் உங்களைத் துரத்த வில்லை. அதே சமயம் நெடுநாளைக்கு இங்குநீங்கள் இருக்கவும் முடியாது” என்று இந்தோனேசியா சொல்லிவிட்டது.

இதுவரை வந்த அனைத்து அகதிகளையும்ஏற்றுக் கொண்ட நாடுதான் ஆஸ்திரேலியா. அங்கு ஆட்சியில் இருக்கும் பிரதமர் கெவின் ரூட் இவர் களைப் பரிவுடன்தான் பார்த்தார். ஆனால், தொடர்ச்சியாக அகதிகள் வந்து குவிவதை அங்கு உள்ள எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்க்கஆரம்பித்துள்ளன. ‘மனிதாபிமான நடவடிக்கையா… உள்நாட்டுப் பாதுகாப்பா?’ என்ற கேள்வி இன்றுபிரதான மாக எழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில்.

எனவே நடுக்கடலில் தத்தளிக்கிறான் தமிழன். அவர்களிடம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ரத்தம் உறையவைக்கிறது. ஆறு மாதக் கர்ப்பிணியான அந்த தமிழீழப் பெண் அருகில் ஒன்றரை வயதுக் குழந்தை படுத்திருக்கிறது. ”இந்த வயித்தைவெச்சுக்கிட்டு என்னால வாழவே முடியல. வலியால துடிச்சேன். ஒருநாள் மட்டும் டாக்டர் வந்து பார்த்தாரு. அதுக்குப் பிறகு வரல. சரியான சாப்பாடு இல்ல. குடிக்கத்தண்ணி இல்ல. சரியான பாத்ரூம் வசதி இல்ல. யாருக்குமே எங்களோட கஷ்டம் புரியல. எந்த நாடாவது திரும்பிப் பார்க்குமான்னு கவலையா இருக்கு. மலேசியா காட்டுல 21 நாள் கஷ்டப்பட்டுத்தான் படகைப் பிடிச்சு வந்தோம். ஆனா, நிம்மதியான இடத்துக்குப் போய்ச் சேர முடியல” என்றுகண்ணீர்வடிக் கிறார். ”இந்த மாதிரி சூழ்நிலையில இந்தக் குழந்தை பிறந்தா எப்படி நிம்மதியா வாழும்? இது பிறக்காமலே இருந்தாக்கூட நல்லது” என்று அந்தப் பெண் கதறுகிறார். வயிற்றில் இருக்கும் பிஞ்சு, பிறக்காமலே இருக்கட்டும் என்று ஒரு தாய் நினைத்தால், அவர் அனுபவிக்கும் கொடுமை எப்படி இருக்கும்?

இன்னொரு பெண்ணுக்கு அதைவிட சோகம். தன்னை கடற்படை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கதறி பேட்டி தந்துள்ளார்.

ஒரு சிறுமி… ”ஸ்ரீலங்காவுல நாங்க ஸ்கூலுக்குப் போகும்போது ஆர்மி அடிச்சது.ஏரோபிளேன்ல வந்து ஸ்கூல் மேல குண்டுபோட்டாங்க. அதனால அங்க இருக்க முடியாம, வேற நாட்டுக்குக் கிளம்பிட்டோம். ரெண்டு மூணு மாசமா ஸ்கூலுக்குப் போக முடியல. படிக்காம எப்படி இருக்க முடியும்?” என்று அப்பாவியாகக் கேட்டாள். ”இப்ப உங்க ளுக்கு என்ன வேணும்?” என்றுகேட்கிறார் கள். ”எங்க ஊர்ல குண்டு போடுறாங்க. பாதுகாப்பான நாடா இருந்தா, எங்கனாலும் போயி நாங்க தங்கிப்போம்” என்று பதில் அளித்தாள்.

அலை கடலுக்கு அப்பால் இன்னும் அவலம் தொடர்கிறது!

நன்றி: விகடன்

http://meenakam.com/?p=1012

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.