Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ச குடும்பத்தினரின் பெரும் பணமோசடிகள் குறித்து மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் வெளிக்கிளம்பியுள்ளன

Featured Replies

ராஜபக்ச குடும்பத்தினரின் பெரும் பணமோசடிகள் குறித்து மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் வெளிக்கிளம்பியுள்ளன‐ தொகுப்பும் தமிழாக்கமும் GTN ற்காக சிவபிரான்‐

28 December 09 08:19 pm (BST)

சிங்கள வார இதழ் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான அநுர குமார திசநாயக்க ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அந்தச் சொத்துக்களை யார் வாங்கியது? யாரின் பெயரில் வாங்கியது என்று வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அந் நேர்காணலில் கேட்டிருக்கிறார்.

அவர் கேட்டிருந்தவற்றுள் சில முக்கியமான கேள்விகள் இவை.

தெனியாய தோட்டத்தின் சொந்தக்காரர் யார்?

அப்பலோ வைத்தியசாலையின் பணிப்பாளர் தற்போது யார்?

ஒஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயக் கட்டிடப் பகுதியை வாங்கியது யார்?

அது தற்போது யார் பெயரில் இருக்கிறது?

தம்பதெனியவில் நூறு ஏக்கர்களை வாங்கியது யார்?

புத்தளத்தில் 150 ஏக்கர் தென்னந்தோட்டத்தை வாங்கியது யார்?

அது தற்போது யார் பெயரில் இருக்கிறது?

திஸ்ஸமகாரகமவில் இருக்கும் பெருமளவான நிலத்தை கையகப்படுத்தியது யார்?

ஹோட்டல் இன்ரர்கொன்ரினன்ற்றின் பங்குகள் யார் பெயரில் இருக்கின்றன?

இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை சில முக்கிய புள்ளிகளின் பெயரில் வாங்கப்பட்டிருக்கின்றன. சில அவர்களது நம்பிக்கைக்குரிய பினாமிகளின் பெயரில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதற்குத் தேவையான ஆதாரங்களும் சுமத்தப்பட்டிருக்கின்றன. இவை பற்றிய முழு விபரங்களும் ஜனவரி 26இன் பின்னர் வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதைத் தவிர நியூயோர்க் மன்ஹெட்டன் பகுதியில் 70 கோடி ரூபாவுக்கு சொகுசு வீட்டுடன் கூடிய மாளிகை ஒன்று வாங்கப்பட்டுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு நெருக்கமான முகவர் ஒருவரின் மூலம் இந்த மாளிகை வாங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மாளிகை ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரினதும் பாவனைக்காகவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான முகவர் மூலம் அமெரிக்காவில் நியூ ஜேர்ஸி பகுதியில் பல வீடுகள் லட்சக்கணக்கான டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தி மேலும் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை ஜனாதிபதியின் உறவினரான மேர்சன்ட் வங்கியின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவினால் செலிங்கோ இன்வஸ்மன்ட் நிறுவனத்திடமிருந்து பலவந்தமாக கொள்வனவு செய்த பங்குகளை செலிங்கோ நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவிற்கு மீண்டும் வழங்குமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஜனக்க ரத்னாயக்க ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி லலித் கொத்தலாவலவிற்குச் சொந்தமான 39 வீத பங்குகளை செலிங்கோ இன்வஸ்மட்ன் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்திருந்தார்.

இதனடிப்படையில், செலின்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான த பினான்ஸ் நிறுவனமும் அலரி மாளிகைக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டுவரும் பின்காரா என்ற உணவு விடுதியும் மறைமுகமாக ரத்னாயக்கவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன.

சிலிங்கோவின் தலைவர் கொத்தலாவல சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கோல்டன் கீ நிறுவனத்தின் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பங்குப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பங்குகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் வைப்பாளர்களினால் நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்தே இந்த 39 வீத பங்குகளை செலிங்கோ இன்வஸ்மன்ட் நிறுவனத்திற்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் பல தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கப்பம் அறவிடப்படுகிறது என்றும் பலரது சொத்துக்கள் அச்சுறுத்தி பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த போது இதே ஜே.வி.பியினரும் மகிந்தராஜபக்சவை ஆதரிக்கும் தமிழ்க்குழுக்களும் புலம் பெயர் நாடுகளில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த குழுக்கள் மற்றும் ஊடகங்களும்; அக்குற்றச்சாட்டுக்கள் வெறுமனே புலிகளின் பிரச்சாரம் என்று அறிக்கையிட்டும் எழுதியும் வந்தன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இப்போதும் இவை குறித்து ஜேவிபியினர் மௌனம் சாதித்திருப்பர் அவர்களுக்கு இவற்றை அம்பலப்படுத்த வேண்டும் என்ற அரசியல் தேவை வந்திருக்காவிட்டால்.

புலம் பெயர் ஜனநாயகவாதிகளுக்கோ, மாற்று ஊடகக்காரர்களுக்கோ அந்தத் தேவை இல்லாததால் அவர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் இவை குறித்து மௌனம் காப்பார்கள் என்பது வரலாற்று உண்மையல்லவா?

மூலம்: http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=19013&cat=1

Edited by இளைஞன்
செய்திகளின் கீழே மூலத்தை குறிப்பிடவும்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச குடும்பத்தினரின் பெரும் பணமோசடிகள் குறித்து மிக முக்கியமான குற்றச்சாட்டுக்கள் வெளிக்கிளம்பியுள்ளன‐ தொகுப்பும் தமிழாக்கமும் GTN ற்காக சிவபிரான்‐

28 December 09 08:19 pm (BST)

சிங்கள வார இதழ் ஒன்றிற்கு நேர்காணல் வழங்கியுள்ள ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினரான அநுர குமார திசநாயக்க ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் சொத்துக்கள் குறித்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

புலம் பெயர் ஜனநாயகவாதிகளுக்கோ, மாற்று ஊடகக்காரர்களுக்கோ அந்தத் தேவை இல்லாததால் அவர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் இவை குறித்து மௌனம் காப்பார்கள் என்பது வரலாற்று உண்மையல்லவா?

தமிழ்மகனவர்களே!

அவர்கள் இப்போது ஜே.வீ.பீ காரரரையும் சிங்களப்புலிகள் என்று எழுதினாலும் எழுதுவார்களேயன்றி, இதுபோன்ற விடயங்களை ஆராயமாட்டார்கள். இவற்றையாராந்தால் எப்படி சிங்களத்துதிபாடித் தம்மை வளர்ப்பதாம். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மாற்றுக்கருத்து என்ற கோதாவில் தமிழினத்தினது வாழ்வை முடக்குதலும் அழித்தலும். அழிப்பிற்குத் துணைபோதலுமே.அந்த அழிவினூடாகத் தம்மை வளர்த்தலும் தமக்கான சொத்துக்களைச் சேர்த்தலும் சுகபோக வாழ்வுமே. இவர்களிடம் போய் நீங்கள் எதிர்பார்ப்பது ................ .

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.