Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த தசாப்தத்தில் அரங்கேறிய மிக மோசமான ஊடக அடக்குமுறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தசாப்தத்தில் அரங்கேறிய மிக மோசமான ஊடக அடக்குமுறை

இன்று புது வருடப்பிறப்பு மட்டுமல்ல. புதிய தசாப் தத்தின் பிறப்பும் கூட. 2000 ஆம் ஆண்டு ஜனவரி முத லாம் திகதி மிலேனியம் ஆண்டுப் பிறப்போடு ஆரம் பித்த இந்த மிலேனியத்தின் முதலாவது தசாப்தம் நேற்று 2009 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. புதிய தசாப்தம் இன்று ஆரம்பிக்கிறது.

இலங்கையில் ஈழத் தமிழினம் மிக மோசமான மிகக் கொடூரமான மிகக் கோரமான மிகக் குரூரமான அழிவுகளைச் சந்தித்த இந்தத் தசாப்தத்தில்தான், இலங் கையின் ஊடகத்துறையும் அதுபோன்ற மிகக் கோரமான அழிவுகளையும், அடக்குமுறைகளையும் சந் தித்தது.

அதுவும் தமிழ் ஊடகத்துறை குறிப்பாக உங்களின் "உதயன்', "சுடர் ஒளி' நாளிதழ்கள் மிகமிக மோசமாக அழிவுகளையும் நாசங்களையும் சந்தித்தன. தென்னா சியாவிலேயே கடந்த தசாப்த காலத்தில் அதிகபட்ச பாதிப்புகளையும் அடக்குமுறையின் அடாவடித்தனங் களையும் அதிகம் சந்தித்த ஊடகங்களாக "உதயன்', "சுடர் ஒளி' நிறுவனங்கள்தான் அமையும்.

இந்நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு பல தட வைகள் குண்டுகள் வீசப்பட்டன; முகமூடி அணிந்த ஆயுததாரிகள் இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் அலு வலகத்துக்குள் புகுந்து கண்மண் தெரியாமல் சுட்டுத் தள்ளித் தாக்குதல் நடத்தினார்கள். இந்நிறுவனங்களின் பணியாளர்கள், செய்தியாளர்கள் இலக்குவைத்துத் தாக்கிக் கொன்றொழிக்கப்பட்டனர். ஊழியர்கள் இனந் தெரியாதோரால் கடத்தப்பட்டனர். பத்திரிகை நிறு வனத்துக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் நட வடிக்கை கட்டமைப்பு ரீதியில் கனகச்சிதமாக மேற் கொள்ளப்பட்டன. நிறுவனத்தின் வாகனங்கள் கடத்தப்பட்டன. பத்திரிகையோடு சேர்த்து எரிக்கப்பட்டன. உத யனின் களஞ்சியசாலை பெரும்தொகையான அச்சுத் தாள் சேகரிப்போடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இப்படி "உதயன்', "சுடர் ஒளி' நிறுவனங்கள் எதிர் கொண்ட பேரிழப்புகளுக்கு நஷ்ட ஈடோ, காப்புறுதிக் கொடுப்பனவுகளோ வழங்கப்படவில்லை.

இந்தத் தசாப்த காலத்திலே "உதயன்', "சுடர் ஒளி'நிறுவ னங்களின் ஏழு பணியாளர்கள் இலக்குவைத்துப் படு கொலை செய்யப்பட்டனர். இனந்தெரியாதோரால் கடத் தப்பட்ட ஆசிரிய பீடத்தின் இரு ஊழியர்களில் ஒருவர் காணாமல் போனார். மற்றொருவரான பத்திரிகையின் ஆசிரியரின் கடத்தல் பின்னர் கைதாக மாற்றப்பட்டது. இரண்டு மாதத் தடுப்புக் காவலின் பின்னர் மீண்டுவரும் வாய்ப்பு தெய்வாதீனமாக அவருக்குக் கிட்டியது.

இத்தகைய பின்புலத்திலே கடந்த தசாப்தம் கடந்து செல்லும் இன்றைய நிலையில் கூட, இலங்கையில் ஊடகத்துறையின் மீதான அச்சுறுத்தல் அடக்குமுறை நீங்குவதற்கான அறிகுறி தென்படுவதாக இல்லை.

தென்னாசிய நாடுகளில் இலங்கைப் பத்திரிகை யாளர்களே நேற்று முடிவுற்ற கடந்த ஆண்டில் அதி களவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தென்னாசிய ஊடக ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

""சகல விதங்களில் நோக்கும் போதும் இலங்கைப் பத்திரிகையாளர்களே 2009 ஆம் ஆண்டில் மிக மோச மான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ் தானில் உள்ள அவர்களது சகாக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை விட அதிகமாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். உயிர் அச்சம் கார ணமாகப் பல சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.'' என்று அந்த ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

"த ஸண்டே லீடர்' ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க படுகொலை, "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரி யர் கடத்தல் பாணியில் கைது செய்யப்பட்டமை, ஊடக வியலாளர் திஸநாயகத்துக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை போன்ற மோசமான சம்பவங்களை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்ற மையும் கவனிக்கத்தக்கது.

இதேசமயம், பாரிஸைத் தளமாகக்கொண்டு இயங் கும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பும் இலங்கையில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் பேரவல நிலையைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு விடுத்திருக்கின் றமை கவனிக்கத்தக்கது.

அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையிலிருந்து 29 ஊடகவியலாளர்கள் கடந்த ஆண்டில் நாட்டை விட்டுத் தப்பி ஓடியிருக்கின்றார்கள் என்ற புள்ளிவிவரத்தை வெளியிடும் அந்த அமைப்பு, இதேபோன்ற மோசமான நிலையே ஈரானிலும் நிலவுவதாகக் கூறுகின்றது.

"இவ்வாறு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றச் செய்வதன் மூலம், தமக்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்கள் வெளி யாவதையும், பன்மைத்துவக் கருத்து யோசனைகள் வெளிப்படுவதையும் தடுக்கமுடியும் என இந்நாடுகளின் அதிகார வர்க்கம் நம்புகின்றது. இது மிகப் பயங்கரமான போக்கு. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண் டியது.'' என்று அவ்வமைப்பு தெரிவித்திருக்கின்றமை அவதானிக்கத்தக்கது.

என்று திருந்துமோ இந்த ஊடக அடக்குமுறை.......? இந்தத் தசாப்தத்திலாவது அடக்குமுறையற்ற ஊடக சுதந்திரம் கிட்டாதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

http://www.uthayan.com/Welcome/afull.php?id=252&L=T&1262348885

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.