Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் வன்முறைச்சம்பவங்களில் 8பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் வன்முறைச்சம்பவங்களில் 8பேர் காயம்

கொழும்பு கிரிபத்கொடையில் எதிர்கட்சி அரசியல் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ஐ.தே.கட்சி மற்றும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் இன்று முற்பகல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன்போது வாகனங்கள் சிலவற்றுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் நாலப்பிட்டி பகுதியில் இரண்டு பிரதான அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மேலும் 5பேர் காயமடைந்துள்னர். இதில் 3 பெண்களும் அடங்குவதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 6போரை தாம் கைது செய்துள்ளதாகவும் நாவலப்பட்டி சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

-- மீனகம் செய்தியாளர்

http://meenakam.com/?p=1905

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பிரச்சாரத்தில் மேர்வின்சில்வாவின் ஆதரவாளர்கள் காடைத்தனம் ‐ ஜே.வீபியின் எதிர்த் தாக்குதலில் ஓட்டம் ‐ காவற்துறை கண்ணீர்புகைப் பிரயோகம்‐ 03 January 10 10:27 am (BST)

கிரிபத்கொட பிரதேசத்தில் ஜே.வீ.பீயினரால் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட போது, அங்கு சென்ற ஆளும் கட்சியின் அமைச்சர் மேர்வின்சில்வாவின் ஆதரவாளர்கள் சிலர், ஜே.வீ.பீயினர மீது; தாக்குதல் நடத்தியதால் கிரிபத்கொட சந்தி பகுதி போர்களமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் அரசியல்வாதியின் ஆதரவாளர்களை ஜே.வீ.பீயின் ஆதரவாளர் திருப்பித் தாக்கியதில் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காயமடைந்ததுடன் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஜே.வீ.பீயினரின் தாக்குதலை சமாளிக்க முடியாது, ஆளும் கட்சி அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். நிலைமையை சமாளிக்க காவற்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் காரணமாக கிரிபத்கொட சந்திப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எவ்வாறாயினும் ஆளும் கட்சியின் களனி அமைப்பாளராக செயற்பட்டு வரும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி எதிரணியினருக்கு களணி தொகுதியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள இடமளிக்க போதில்லை என தெரிவித்திருந்தார். இந்த அரசியல்வாதியின் செயற்பாடுகள் குறித்து களனிப் பிரதேச மத தலைவர்களும் அதிருப்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவாக கொழும்பை அன்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் ஊர்வலமொன்று அரசதரப்பினரால் கலைக்கப்பட்டுள்ளது.

சரத்பொன்சேக்காவிற்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் இன்று நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடவத்தை பகுதியிலிருந்து களனி நோக்கி ஊர்வலமாக வந்த மக்கள் மீது கிரிபத்கொட பகுதியில் வைத்து இன்று முற்பகல் 11 மணியளவிவல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊர்வலமாக வந்தவர்கள் மீது கல்வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களில் பொலிஸார் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தினால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதாகவும், போக்குவரத்து தடைப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=19225&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.