Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு - விளக்குகிறார் சம்மந்தன்

Featured Replies

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டம் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு - விளக்குகிறார் சம்மந்தன்

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத்திட்டம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சியின் நிலைப்பாடு என கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிளவுபடாத இலங்கை என்ற கொள்கை யின் அடிப்படையிலேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை வருமாறு,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன் சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.அதன் பின்பு ஊடகங்களில் இவ் ஆதரவு எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றது என்பதையிட்டுப் பலவிதமான ஊகங்கள் எழுந்துள்ளன.இவ் விடயம் தொடர்பாக பல உண்மையற்ற பிரசாரங்களும் நடைபெற்று வருகின்றன. எந்த அடிப்படையில் இவ் ஆதரவு வழங் கப்படுகின்றது என்பதைப் பற்றி நான் எந்தவொரு ஊடகத்திற்கும் எவ்விதமான பேட்டியும் கொடுக்கவில்லை.

2010 ஆம் ஆண்டு தை மாதம் ஆறாம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டிலும் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வால் மீண்டும் தனது ஆட்சிக் காலத்தை நீடிப்பதற்கு அவர் மக்களிடம் கேட்டிருக்கும் ஆணையை ஏன் ஆதரிக்க முடியாது என்பதையிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையிலிருந்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் பிரதம எதிர்வேட்பாளருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாகின்றது.இருந்தபோதிலும் கீழ்க் காணும் தெளிவுபடுத்தலை நான் முன்வைக்க விரும்புகின்றேன். தை மாதம் 6 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் கூறிய பிரகாரம் நாங்கள் 2 முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.

அவர்களுடன் தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகள் சம்பந்தமாகவும் வட கிழக்கில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களினுடைய-தமிழ் மக்களுடையதும், முஸ்லிம் மக்கள் உடையதுமான அரசியல்தீர்வு தொடர்பாகவும் நாம் பேசியிருக்கின்றோம்.

நீண்டகாலமாக இவ் விடயம் சம்பந்தமாக நாட்டிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகள் விசேடமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸ், இடதுசாரி கட்சிகள் போன்றவைகளின் விரிவான பேச்சு வார்த்தைகள் சகலதும் எந்த ஓர் அரசியல் தீர்வும் ஒருமித்த பிரிக்கப்படாத இலங்கைக்குள் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நிலைப்பாட்டிற்கும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஏனைய தமிழ்க் கட்சிகளின் கூட்டணியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இவ் விடயம் சம்பந்தமான 2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 11 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அவர்களால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினதும் இக் குழுவுக்கு உதவ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினதும் ஆரம்பக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் கூறப்பட்டிருக்கும் சில விடயங்களைக் குறிப்பிடவேண்டியது எனது கடமை எனக் கருதுகின்றேன்.

2006 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் ஜனாதிபதி உரை முழுமையாக இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்டிருந்த தலைப்புக்களின் கீழ் ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைப்பிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அவர்களால் தெளிவாகக் கூறிய கருத்துக்களை நான் சரிவர சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஐக்கியம் ஆட்புல ஒற்றுமைப்பாடு எமது நாட்டினுடைய ஐக்கியம் ஆட்புல ஒருமைப்பாடு, இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

இதில் பேரம்பேசுவதற்கு இடமில்லை. எமது இந்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது. விசேடமாக இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் நாட்டினுடைய பிரிவினையை முற்றாக நிராகரித்துள்ளன. பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வைக் கட்டியயழுப்புவதே எமது குறிக்கோளாக அமைய வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு இங்கே கூடியிருக்கும் ஒவ்வொரு கட்சியும் தமது சொந்தத் தீர்வை வைத்திருக்கும். நாங்கள் கூடிப்பேசி வேறுபட்ட கருத்துக்களிலிருந்து எமது நாட்டிற்கு பொருத்தமான வடிவத்தைத் தேர்ந்தெடுப்போம். பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் தொடக்கம் முன்னர் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளும் எம்மால் ஆராயப்பட வேண்டும். ஏனைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் தக்க பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நான் நாட்டின் மீது ஒரு தீர்வை திணிக்கமாட்டேன். ஆனால் உங்களுடைய ஆலோ சனைகளின் மூலம் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காணுவீர்கள்.

மேலும் முடிபுக்கு வரும் சில சிந்தனைகள் என்ற தலைப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ கூறியது பின்வருமாறு; மோதலின் பின்னணி காரணிகளை மனதில் கொண்டு நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல் எந்தவோர் அரசியல் தீர்வும் அதியுயர்ந்த அதிகாரப்பகிர்வை அடையக் கூடியதாக அமைய வேண்டும் என்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த ஆலோசனைகளில் பங்குபற்றிக் கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ அவர்களால் கூறப்பட்ட மேல்குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்களின் அடிப்படையில்தான் அரசியல் தீர்வு சம்பந்தமாக இரு பிரதான ஜனாதிபதி வேட்பா ளர்களுடனும் எனது பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன. ஒரே விடயங்கள் சம்பந்தமாகத்தான் எனது பேச்சுவார்த்தைகள் இரு பிரதான வேட்பாளர்களுடனும் நடைபெற்றது. இந்த விடயங்களில் எதுவும் நாட்டினுடைய பிரிவினைக்கு வழிவகுக்கக் கூடிவை எனக்கூற முடியாது.

குறுகிய அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரித்துக் கூறி இனவாதக் கருத்துக்களைப் பரப்பியதனால் நாட்டு மக்கள் போதிய துன்பங்களை அனுபவித்து விட்டார்கள். அவர்கள் கெளரவமான, நிரந்தரமான சமாதானத்திற்கு உரித்துடையவர்கள். யுத்தத்தின் முடிபு அவ்விதமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தன்னலம் கொண்ட உண்மைக்குப் புறம்பான பிரசாரத்தினால் நாட்டு மக்கள் ஏமாற்றப்படக் கூடாது என நான் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=2056

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.