Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் கலவரம் ஆந்திராவில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் தனித்தெலுங்கானா கோரி தொடர்கிறது தற்கொலை: உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தடியடி

ஐதராபாத் : தனித்தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் மீண்டும் பற்றி எரிய தொடங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தெலுங்கானாவில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலையில் உஸ்மானியா பல்கலை., மாணவர் வேணுகோபால் தீக்குளித்தார், பின்னர் மாவட்ட நிர்வாக துறையில் பணியாற்றும் 40 வயதான சுரா நேரு நாயக் என்பவரும், இரவில் சுவர்னா என்ற கல்லூரி மாணவியும் தனித் தெலு‌ங்கானா அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானாவில் "ஸ்டூடண்ட் ஆக்ஷன் கமிட்டி " சார்பில் 48 மணி நேரம் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த்துக்கு தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் படி காலையில் பந்த் தொடங்கியது கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் , வங்கி ஏ.டி.எம்., கள் , பெட்ரோல் பங்க்குகள் கூட மூடிக் கிடக்கின்றன . இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

மாணவர்கள் ரகளை : நேற்று தீக்குளித்து இறந்த உஸ்மானியா பல்கலை., மாணவர் வேணுகோபாலின் உடலை தர மறுக்கும் சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இறந்த மாணவர் குடும்பத்தாருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. பலர் கல் வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். போலீசார் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் மீண்டும் கலவரமாக பூமியாக மாறியுள்ளது ஆந்திரா. இதற்கிடையில் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுமாறு சபாநாயகர் வீட்டின் முன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ., க்கள் குவிந்ததால் அங்கும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

nandri dinamalr.

தனி தெலுங்கு நாடு கேட்டால் தான் உய்வுண்டு.

1980 களில் 2009 களில் மொத்தமாக 50000 க்கு மேற்பட்ட ஈழத்து அப்பாவித் தமிழரை படுகொலை செய்த இந்தியாவின் அழிவில் தான் தமிழரின் எதிர்காலம் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.