Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றது - அரசியல் ஆய்வாளர்

Featured Replies

இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருகின்றது - அரசியல் ஆய்வாளர்

இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக ஆசியாவின் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாதுகாப்பு தரப்பினர் அரசியலில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதிக்கு சார்பான படைவீரர்கள் ஒரு அணியிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதிதக்கு ஆதரவான படையினர் மறுபுறமுமமாக அணிவகுத்துள்ளனர்.

இவர்களின் விகிதாசாரங்களில் கடை நிலை சிப்பாய்கள் மற்றும் சாதாரண படை வீரர்களின் பெரும்பான்மையினர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கின்றனர் ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் இராணுவத் தளபதி மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள சில கட்டளை தளபதிகள் மகிந்த ராஜுபக்ச தரப்பிற்கு ஆதரவு வழங்குகின்றனர்.

அதேநேரம் படைப்பிரிவுகளும் வேறு பட்ட ஆதரவு நிலைகளில் உள்ள சிங்க படைப்பிரிவு உள்ளிட்ட முக்கிய சில படையணிகள் சரத் பொன்சேகாவிற்கு பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன

மறுபுறம் கஜபா படைப்பிரிவு கோட்டபாய ராஜபக்சவிற்கு விசுவாசமாக உள்ளது.

இவ்வாறான நிலையில் இரு தரப்பினரும் ஆட்சியினை கைப்பற்றுவதற்கு ஜனநாயக வழிமுறைகளை விடவும் ஆயுத பலத்தை அதிகம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜே.வி.பியின் இராணுவப் பிரிவும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

குறிப்பாக படையணிகளில் இணைந்துள்ள ஜே.வி.பி ஆதரவாளர்கள் ஜே.வி.பியின் இராணுவப் பிரிவினை மீண்டும் செயல்படுத்தும் முனைப்புடன் இயங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது தோல்வி அடையும் தரப்பினால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பலப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/5200/54//d,view.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இராணுவ ஆட்சி நிச்சயமாக ஏற்படும் அதன் பின்னரான காலத்தில் சீனா மட்டுமே இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும்.

சரத் வருவதை இந்தியா விரும்பவில்லை. மகிந்தா தோற்றால் மகிந்த சார்பு இராணுவத்தை கொண்டு ஆட்சியை கைப்பற்றும் திட்டத்திற்கு இந்தியாவின் மறைமுக ஆதரவும் உண்டு என பேச்சு அடிபடுகிறது. இராணுவ தளபதிகள் பலரிற்கு சரத் வந்தால் அவர்கள் சர்வதேச நீதி மன்றிற்கு செல்ல நேரிடலாம், வெளிநாடுகளிற்கு பயணம் செய்ய முடியாது போன்ற பயமுறுத்தல் பிரசாரங்களும் நடக்கிறதாம். பின்பு ஒரு சாதகமான நேரத்தில் தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றும் திட்டமும் உள்ளதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.