Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனக்கு வந்தால்தான் தெரியும்...! -தினக்குரல்

Featured Replies

தனக்கு வந்தால்தான் தெரியும்...!

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதும் அவற்றைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி அக்கறைப்படுவதும் ஆட்சியதிகாரத்தில் இல்லாத வேளைகளில்தான். அதிகார மமதையில் இருக்கும் போது அரசியல்வாதிகளிடம் ஜனநாயகம் பற்றிப் பேசினால் கிலோ என்ன விலை என்று கூட அவர்களில் சிலர் கேட்கவும் கூடும். இலங்கையின் வரலாற்றில் படுமோசமான ஜனநாயக விரோதச் செயற்பாடுகளும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுவந்த கடந்த 4 வருட காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சீருடையைக் களைந்துவிட்டு இருமாதங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்தபிறகு ஜனநாயகத்தைப் பற்றி தாராளமாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

எதிரணிக் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கென்றே இராணுவ பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனரல் பொன்சேகாவைப் பொறுத்தவரை அவரது அரசியல் பிரவேசம் வேறு எந்தவொரு அரசியல்வாதிக்குமே கிடைத்திராத வரப்பிரசாதமாகும். இரு மாதங்கள் மாத்திரமே அரசியல் "அனுபவத்தைக்%27 கொண்ட அவர் நாட்டுக்குத் தலைமைதாங்குவதற்கும் ஜனநாயக ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் தனக்கொரு வாய்ப்பைத் தருமாறு மக்களிடம் கேட்டு நிற்கிறார். இவ்வார ஆரம்பத்தில் தென்பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய வேளையில் ஜெனரல் பொன்சேகா இலங்கையில் இன்று ஜனநாயகத்துக்கு நேர்ந்திருக்கின்ற கதிபற்றித் தெரிவித்த கருத்துகள் எமது கவனத்தை வெகுவாகத் தூண்டியிருக்கின்றன.

அமெரிக்காவில் வாழும் தனது மருமகன் தனுனா திலகரத்னவை விசாரிப்பதற்கு இரகசிய பொலிஸார் திட்டமிடுவதாக அறியவந்ததையடுத்தே ஜெனரல் அக்கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி தன்னை அச்சுறுத்த முயற்சிப்பதாகவும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் சம்பந்தப்படுத்தி தனது தேர்தல் பிரசாரங்களைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டிய முன்னாள் இராணுவத் தளபதி, "எனக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்வதன் மூலமாகத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கிறார். இன்று இந்த நாட்டிலே ஜனநாயகமே இல்லை. சில ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகின்ற சூழ்நிலையைப் போன்று சட்டங்கள் நடைமுறையில் இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பத்தின் படி ஆட்கள் கைது செய்யப்படுகிறார்கள். சர்வதேச சமுதாயம் தலையிட்டு இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவ வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் துவம்சம் செய்யப்படுகின்ற முறையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து செயலில் இறங்க வேண்டும்%27 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் ஜெனரல் பொன்சேகா விடுத்திருக்கும் கோரிக்கையே இது விடயத்தில் முக்கிய கவனத்திற்குரியதாகும். உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய அவர் அந்தக் காலகட்டத்தில் மனிதப் பேரழிவைத் தடுக்க இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு அரசியல் சக்திகளும் மனிதநேய அமைப்புகளும் சர்வதேச சமூகத்தின் உதவிக்கு மன்றாடியதை மறந்திருக்கமாட்டார். போர் முடிந்து வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்து முழுமையாக 7 மாதங்கள் கடந்துபோவதற்கு இடையில் சர்வதேச சமூகத்திடம் இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவுமாறு மன்றாட வேண்டிய நிலை தனக்கு ஏற்படுமென்று ஜெனரல் பொன்சேகா கனவிலும் நினைத்திருக்கமாட்டார். கடந்த நான்கு வருட காலத்திலும் இலங்கையில் இடம்பெற்ற படுமோசமான மனித உரிமை மீறல்களினாலும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் மனவுணர்வுகள் இப்போதாவது அவருக்கு விளங்கியிருக்கக்கூடும். அந்தக் காலகட்டத்தில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தவர்களை ஜெனரல் பொன்சேகா பரிகாசம் செய்தார் என்பதை நாம் மறக்கவில்லை. வன்னியில் குடிமக்கள் பலியாவதைத் தடுக்க இலங்கையில் போரை நிறுத்துவதற்கு உதவுமாறு இந்திய மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை ஜெனரல் பொன்சேகா "கோமாளிகள் கூட்டம்%27 என்று வர்ணித்திருந்தார். அப்போது போருக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர வேறு எந்தவிதமான சர்வதேச தலையீட்டையும் ஜெனரல் பொன்சேகா விரும்பியதில்லை.

ஜனாதிபதி ராஜபக்ஷவைப் பொறுத்தவரையிலும் கூட இன்று அவர் தன்னை மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத ஒரு தலைவன் என்று சிங்கள மக்கள் மத்தியில் காட்டிக்கொள்வதில் பெருமையடைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இராணுவ நடவடிக்கைகளின் போது மனித அவலங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மேற்கு நாடுகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கண்டனங்களையும் இலங்கையின் இறைமைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எதிரான சதிமுயற்சியென்றே சிங்கள மக்களுக்கு தவறாகக் காண்பித்தார். அதன் விளைவாக இலங்கை அதன் வரலாற்றில் கண்டிருக்கக் கூடிய மனிதப் பேரழிவுக்கு மத்தியிலும் தென்னிலங்கையில் மக்கள் போர் வெற்றியை மாதக்கணக்கில் கொண்டாடிய துரதிர்ஷ்டவசமான நிலையைக் கண்டோம். ஆனால், ஜனாதிபதி ராஜபக்ஷ கூட ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகத்தின் உதவிக்கு மன்றாடிய காலமொன்று இருந்தது. ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 1980 களின் பிற்பகுதியில் ஜனதாவிமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது அரசாங்கப்படைகளினால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு "போராளியாக%27 விளங்கியவர் ஜனாதிபதி ராஜபக்ஷ.

இன்று இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்தினால் தெரிவிக்கப்படக்கூடிய எந்தவொரு விசனக்கருத்தையும் உள்நாட்டு விவகாரத்திலான அந்நியத் தலையீடு என்றும் உள்நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் சர்வதேச சமூகத்திடம் விடுக்கக் கூடிய எந்தவொரு வேண்டுகோளையும் அந்நியத் தலையீட்டுக்கான சதிமுயற்சி என்றும் வர்ணிக்கும் ஜனாதிபதி அன்று எதிரணியில் இருந்த போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமுதாயத்திடம் முறையிடுவதற்கு ஜெனீவாவுக்குச் சென்றிருந்தார். அத்தகைய ஒருவரின் தலைமையின் கீழான அரசாங்கத்திலேயே இலங்கையின் வரலாற்றில் இதுவரை இடம்பெற்றிராத மனித உரிமை மீறல்களைக் காணக்கூடியதாக இருந்தது. பிரேமதாச ஆட்சியின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முறையிடுவதற்கு ஜெனீவா சென்ற ராஜபக்ஷவின் ஆட்சியில் காணப்படுகின்ற ஜனநாயகச் சிதைப்புக்கு எதிராக ஜெனரல் பொன்சேகா இன்று சர்வதேச சமுதாயத்திடம் முறையிடுகின்றார். எதுவுமே தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்களே...!

http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5325

அதுதான் வந்துவிட்டதே. இப்போ என்ன ? சுளகு படக் படக் என்று அடிக்குதோ? சிங்களவருக்கு ஜனநாயகம். தமிழர் மீது அராஜகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.