Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

விடுதலை வேட்கையுள்ள மக்களால் மரியாதையாக நேதாஜி என்று அழைக்கப்பட்ட சுதந்திரபோராட்ட வீரரும் எமது தமிழ் தேசியத் தலைவரின் குருவுமாகிய இந்திய காங்கிரஸ் கட்சியால் காட்டிக்கொடுக்கப்பட்டு தாய்நாட்டிலும் சிறைவாசம் அனுபவித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். தாயார் பிரபாவதி. இவரை வங்கம் தந்த சிங்கம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியவர் நேதாஜி.

இவரது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம். இவரை இவரது ஆயா தான் அன்பாக கவனித்து வளர்த்திருக்கிறார். இதைப் பற்றி நேதாஜி கூறும்போது ” “பெற்றோர் என் மீது அதிக அன்பு காட்ட முடியாமல் போனது அதிருஷ்டமாயிற்று. என் எதிர்காலத்துக்கு அதுவே நல்ல ஆரம்பமாயிற்று. இதனால்தான், நான் தூயவனானேன். சமுதாயத்துக்குச் சோம்பலின்றி உழைக்கும் ஊழியன் ஆனேன் என்றாலும், மனம் விட்டுப் பலரோடு கலகலப்பாகப் பழகும் பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தும் கூச்ச சுபாவம் என்னை விட்டு அகலவில்லை”

1982 ஆம் ஆண்டு மதுரையில் நேதாஜி அவர்கள் இந்திய அரசாங்கத்தின் பிரகடனத்தை அறிவித்ததை நினைவு கோரும் முகமாக ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நெடுமாறன் ஐயா அவர்களிற்கு அழைப்பு வந்திருந்த சமயம் தேசிய தலைவரும் அவர் வீட்டில் இருந்திருக்கிறார். நேதாஜி மீது மிகுந்த பற்று கொண்ட தேசியத்தலைவர் அந்நிகழ்வுக்கு தானும் வருவதாக கூறி நெடுமாறன் ஐயாவுடன் போயிருக்கிறார். அங்கு இந்திய தேசிய இராணுவத்தின் மகளீர் பிரிவைச்சேர்ந்த கப்டன் இலட்சுமி அவர்கள் விழா மேடைக்கு வருவதையும் அதன்போது அங்கிருந்தவர்கள் எழுந்து நின்று தேசிய இராணுவத்தின் கீதத்தை பாடியதையும் அதனால் கப்டன் இலட்சுமியின் விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியதையும் உற்று கவனித்த தேசிய தலைவர் திரும்பி வரும்போது கூறியிருக்கிறார்.

“அண்ணா! இந்த வயதான காலத்திலும் கூட அந்த வீரர்கள் நேதாஜியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எப்படி நெகிழ்ந்து போகின்றார்கள் என்பதைப் பார்த்தபோது நான் உருகிப் போனேன். அவர்களை எப்படி நேதாஜி உருவாக்கியிருக்கின்றார் என்பது போற்றத் தக்கதாகும்” என்று.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் பிரிட்டின் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக பல அபாண்டமான அவதூறுகள் எழுந்தன. அவற்றில் அரைப்பங்கை பிரிட்டின் அரசு செய்தது என்றால் மிகுதிப் பங்கை அன்றைய இந்தியத் தலைவர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும். மகாத்மா காந்தி அவர்கள் ‘சுபாஸ் சந்திரபோஸ் அவசரக்காரர்-ஆத்திரக்காரர்’ என்று கூறினார். நேரு அவர்கள் ‘சுபாஸ் சந்திரபோஸ் படபடப்பானவர்-பண்படாதவர்’ என்று கூறினார். ஆனால் நேதாஜி அவர்கள் “இந்தியா வாழ்ந்தால் யாரே வீழ்வார்? இந்தியா வீழ்ந்தால் யாரே வாழ்வார்?” என்று முழங்கிய போராளி.

நேதாஜி அவர்கள் தனது 16 வது வயதில் துறவியாக வாழ விரும்பி வீட்டை விட்டு வெளிவந்தவர். அதன் பிறகும் பல்வேறு பதவிகளையும் சுகங்களையும் தூக்கி எறிந்தவர். தனது 44 வது வயதில் தன் உயிரினும் மேலான பாரத தேசத்தை விடுவிக்க வேண்டி தன் உயிரை பணயம் வைத்து யேர்மன்,யப்பான், கிழக்காசிய நாடுகள் என்று அலைந்து திருந்து தற்காலிக அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தை திரட்டி போரிட்டு உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்.

‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.

1928ம் ஆண்டு வைகாசி மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார். ஆனால் நேருவும் மகாத்மா காந்தியும் இந்தியாவிற்கு ஒரு பூரண குடியேற்ற நாட்டு உரிமை தந்தாலே போதுமானது என்ற ரீதியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பூரண சுதந்திர இந்தியா என்ற பிரகடனத்தை புறம் தள்ளினார்கள். ஆனால் இந்த பூரண சுதந்திர இந்தியா என்ற தீர்மானம் ஏற்கனவே 1927ம் ஆண்டு மார்கழி மாதம் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டாத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆகவே ஏற்கனவே நிறைவேற்றப் பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக மகாத்மா காந்தியும்,நேருவும் முடிவு எடுத்ததை நேதாஜி எதிர்த்தார். மகாத்மா காந்தியின் இந்த முடிவு பிழை என்றும் பூரணசுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனமே சரியானது எனறும் நேதாஜி வாதிட்டார்.

1929ம் ஆண்டு மார்கழி மாதம் 29ம் திகதி லாகூரில் இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனத்தை மகாத்மா காந்தியே முன்மொழிந்தார் அதனை ஆதரித்துப் பேசிய நேதாஜி கீழ்வருமாறு கூறினார்.

‘அன்று இத்தீர்மானத்தை எதிர்த்த அதே மகாத்மாவால் அன்று முன்மொழியப்பட்டு எங்களது தீர்மானம் நேரு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு இன்று நிறைவேறுவதை காண நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்” என்று கூறினார்.

இந்த வேளையில் நேதாஜி குறித்து தேசியத்தலைவர் அவர்கள் கூறியதை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்.

‘சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.

‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன” என்று தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் சதியினால் சிறைவாசம் அனுபவித்து பின்னர் தேசிய இராணுவத்தை பிற நாடுகளிலிருந்து உருவாக்கி பயிற்சி கொடுத்து போரிட்டார் நேதாஜி அவர்கள். இருப்பினும் இந்த சிறந்த போர் வீரனின் இறப்பு பற்றிய தெளிவான் முடிவுகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. ஒரு சிறந்த மனிதன் இறப்பதில்லை என்பதற்கு நேதாஜி அவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

http://meenakam.com/?p=3958

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இவர் மட்டும் மாவீரர்? எங்கட சனத்திக்காக செத்தவரை அவையள் பயங்கரவாதிகள் எண்டு உலகிற்கு பரப்புவினம் ஆனால் அவையல நாங்கள் மாவீரர் எண்டுரம். நாங்கள் பயன்கரவாதியல் எண்டால் இவரும் ஒரு பயங்கரவாதி தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.