Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைத் தேர்தலில் யார் வென்றால் தான் தமிழருக்கு என்னவாகப் போகின்றது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தேர்தலில் யார் வென்றால் தான் தமிழருக்கு என்னவாகப் போகின்றது?

பிரதான போட்டியாளர்கள் இருவருமே கூட்டாகத்தழிழரைக் கொடூரக்கொலை செய்தவர்கள். யார் வந்தாலும் தமிழர் நிலையில் மாற்றம் வரப்போதில்லை.

இப்போது போட்டி என்னவென்றால் தமிழர்கள் வாக்கு கிடைக்குமபோது தான் எண்ணிக்கையில் வித்தியாசம் வரும் அந்த வித்தியாசத்தை வைத்தே வெற்றிபெறமுடியும் என்பது முடிவானது.

தமிழர்களை குழறக் குழற குஞ்சு குருமன் முதல் முதியோர் வரை கொடூரமாகக்கொன்றவர்கள் கேவலம் வோட்டுக்காக தமிழரிடம் கையேந்தும் கையறுநிலையிலுள்ளவர்களுக்கு தமிழர் நல்ல பாடம் படிக்க வேண்டாமா?

தமிழர்கள் தீர்க்கமாக சிந்திக்கவேண்டும். யார் வந்தாலும் தமிழர்களுக்கு வேதனை என்னும் சுவைதான்; மிஞ்சும். எதுவும் நடைபெறப்போவதில்லை.

ஒரு வேளை ராஜபக்ஷ வென்றால் என்னவாகும்?

மக்கள் தன்னுடைய திட்டங்களை வரவேற்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் மக்களின் விருப்பை நிறைவேற்றுவதே எனது திட்டம் என்று திரும்பவும் கொக்கரித்துக் கொண்டு இந்தியாவையும், மேற்குலகங்களையும் எதிர்ப்பார்.

சீனாவுடனான உறவு மேலும் பலம் பெறும்போது ஈராக்கில் சதாமைக்கிள்ளியது போல இவர்கள் இவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இறுக்கிப்பிடிப்பார்கள். முறுகல் நிலை கூடி இவரைக் கிள்ளும்படலம் ஆரம்பமாகும். இதில் சரத்தும் தண்டிக்கப்படுவார். இவர்களின் பயங்கரவாதம் இது தான். தங்களுக்கு எதிராக எழும்புவர்களைக் கிள்ளுவது.

இதனால் வெளியுலகில் தமிழருக்குச் சாதகமான நிலை உருவாகலாம். அல்லது அவரால் தமிழர் மீதான வரும் கொடூரத்தாக்கங்கள் குறைய வாய்ப்புள்ளது.

இவர் ஆட்சிக்கு வருவதே இனப்படுகொலைக் குற்றங்களை மேலும் கிளறுவதற்கு வழிகோலும்

சரத் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்?

இவர் புலிகளுடனான இராயுவ வெற்றியை வைத்து ஆட்சியைக் கைப்பற்றித் தானும் ஜனாதிபதி பட்டியலில் இடம்பெறலாம் என்ற ஆதங்கம் தான். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பின்னர் ஒரு சந்தர்ப்பம்

தேடினாலும் வராது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும் என்ற தேங்கமே தவிர. இவரால் தமிழர் நிலை மாநப்போவது இல்லை.

அத்துடன் இவருடைய திட்டங்கள் எந்த வல்லரசுகளின் பின்னால் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அனேகமாக மேற்குலகக்கூட்டின் சதியே இவரை ஜனதிபதித் தேர்தலுக்குத் தூண்டி இருக்கலாம்.

ஏனெனில் ராஜபக்ஷ வந்தால் இவர்களுடைய பருப்பு அந்ந தண்ணியில் அவிய வைப்பதற்கு கூடிய சிரமம் எடுக்கவேண்டிவரும்.

எனவே ராஜபக்ஷவிற்கு புலிகளுடனான வெற்றி சிங்களவரிடையே வாக்கை அள்ளிக்குவிக்கும். சரத்தும் போரில் பங்குபற்றியுள்ளமைiயால் அவரே தகுதியான ஒரு எதிராளி என இந்தியாவும் மேற்குலகமும்

இவரைத் தேர்தலில் நிறுத்தி இருக்கலாம்.

இது சிங்கள மக்களின் வோட்டுச் சிந்தனையை கிளறிவிட்டு வோட்டைப்பிரித்து ராஜபக்ஷவை ஓரம்கட்ட ஒரு சதிதான் இது.

வேறு யார் ராஜபக்ஷவிற்கு எதிராக போட்டியிட்டாலும் ராஜபக்ஷவே உறுதி என்பது இந்தியாவும், மேற்குலகமும் திடமாக நம்புகின்றது.

இங்கு சர்வதேச சிந்தனையில் தமிழருக்கான எந்தப் பருப்பும் இல்லை

இந்தியாவும் மேற்குலகமும் சரத்தையே விரும்புகின்றனர். தங்கள் விருப்பை இலங்கையில் சுலபமாக நிறைவேற்றலாம் என்று எண்ணுகின்றனர். இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் சரத் அமெரிக்கா வந்து விசாரணைக்குரிய ஒருவர்) விசாரண செய்யாமல் திரும்பிச் சென்றது இதுவே முதல் தடவையாக இருக்கலாம்.

சீனா தமிழரைக் கவனத்தில் எடுப்பதில்லை. இந்தியாவும் மேற்குலகமும் தான் தங்கள் பருப்பு அவிப்பதற்காக தமிழரைப் பாவிக்கும் கூட்டம்.

சரத் வந்தால் அவர்கள் வேலை இலங்கையில் இலகுவாகும். அதனால் தமிமர் தரப்பு கவனத்தில் கொள்ளப்படும் வேகம் இல்லாது போய்விடும்.

சரத் வந்தால் குற்றப்பத்தரிகை கிடப்பில் போய்விடும்

உலகை எதிர்த்து இலங்கையைக் கட்டி எழுப்புபவனே இலங்கையின் ஆட்சியில் தமிழருக்கு சில உரிமம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

தமிழர்களும் நேர்வழியில் செல்லாது தருணத்திற்கேற்ப அவர்கள் செய்த சூழ்ச்சி போல் செய்வது தான் உயிராவது வாழமுடியும்.

சிந்தியுங்கள் பலமுறை செயற்படுங்கள் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில்

ஆட்டுவிப்பவர்கள் யாரோ ஆடுபவர்கள் இவர்கள்.

பார்வையாளரான நீங்கள் பார்த்துப்போடுங்க.

வாழ்க தமிழ் வளர்க தமிழினம்!

Edited by நிழலி
தலைப்பை தமிழில் இட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.