Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உரிமைக்குரலை வெளிப்படுத்தியுள்ளனர் தமிழ், முஸ்லிம் மக்கள் --தமிழ்க்கூட்டமைப்பு

Featured Replies

அரச முகவர்களின் பெருமளவிலான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திய தமிழ் பேசும் மக்களுக்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தல் பிரசார காலத்தில் அரச நிறுவனங்களும் அரச ஊடகங்களும் தன்னைப் புறக்கணித்த விதம் குறித்துத் தேர்தல் ஆணையாளர் மிகுந்த ஏமாற்றமடைந்திருப்பதாக அறிவித்திருப்பதனை ஜனநாயக விழுமியங்களை மதிப்பவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்

.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு இலங்கை மக்கள் ஆணை தந்துள்ளதாகப் பெருமிதப்படுவதாக அறிய முடிகின்றது.ஆனால், அரச வளங்கள் முற்றுமுழுதாக அரசு சார்பானவர்களால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகள் ஜனாதிபதி ஆணை பெற்றிருக்கின்றார் என்பதன் மீது கேள்வி எழுப்பி நிற்கின்றன.

அடுத்து, மகிந்த ராஜபக்ஷ பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதானது, தென்னிலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்கள்தான் பெருமளவில் அவரை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழ், முஸ்லிம் தேசிய இனமக்கள் பெருமளவில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லையென்பதும் அவர் ஆணை பெற்றிருக்கிறார் என்பதில் சிறுபான்மையினங்கள் பங்காளிகளாகவில்லை என்பதும் வெளிப்படையானதாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகப் பெருமளவில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கவில்லையென்பதால் நாடு முழுவதையும் நாட்டு மக்கள் அனைவரையும் ஆளுவதற்கு ஆணை பெற்றிருக்கிறார் என்பதும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் என்னவெனில், தமிழ், முஸ்லிம் தேசிய இனமக்கள் ஜனாதிபதியின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியை அங்கீகரிக்கவில்லையென்பதும் மேலும் அதேபோன்று ஆட்சியைத் தொடர்வதை ஏற்கவில்லை என்பதும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதேயாகும்.

18.01.2010 அன்று கல்முனையில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தின் முன்பும் பின்னரும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் அரச முகவர்களால் ஆயுதமுனையில் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர்.

25.01.2010 நள்ளிரவிலும் 26.01.2010 அதிகாலையிலும் யாழ்ப்பாணத்தில் 13 வேறுபட்ட இடங்களில் "கிரனேட் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று வவுனியாவிலும் குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன. இது அரச தரப்பின் செயலென்றே கதை பரவியதால் வாக்காளர் அச்சமுற்றிருந்தனர்.

இவ்வச்சுறுத்தல்கள், போக்குவரத்து வசதியின்மைகள் மத்தியிலும் அரச வளங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும் இவ்வளவு தூரம் மக்கள் துணிச்சலுடன் வெளிவந்து திடகாத்திரமாக ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்துத் தம் கொதிப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்.

இத்தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் உறவும் பலமடைந்திருக்கிறது. தங்களுக்கு அரசினால் இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒன்றுபட்டுத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அத்துடன், எதிர்காலத்தில் தங்கள் ஐக்கியத்தையும் உறவையும் பேணிப் பாதுகாப்பதன் மூலமே தங்களின் அரசியல் அபிலாசைகளையும் ஜனநாயக உரிமைகள் மற்றும் கலை, கலாசாரங்களையும் தங்கள் வாழ்விடங்களையும் பாரம்பரியப் பிரதேசத்தையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதையும் தீர்க்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கு ஏற்பட்டுள்ள சவாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ள வேண்டும். வெறுமனே அபிவிருத்தி பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் இருப்பையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் ஏற்று ஓர் உன்னதமான அரசியல் தீர்வை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் துணிச்சலையும் வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழ், முஸ்லிம்களின் தாயகத்தில் அரசின் அரசியல் முகவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தமிழ், முஸ்லிம் மக்களின் தலைமைத்துவத்திற்கு உரியவர்களாகத் திகழ்வதும் நிரூபிக்கப்பட்டுள்ளமை பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த யதார்த்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் பொருத்தமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இன்றைய தேவையாகும்.

கொலை அச்சுறுத்தல், குண்டு வெடிப்புகள் என்பவற்றுக்கு மத்தியிலும் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையிலும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒற்றுமையுடன் தம் உரிமைக் குரலை வெளிப்படுத்தி வாக்களித்த தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தன் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

அதேபோன்று, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் விழிப்பையும் ஏற்படுத்தி வந்த ஊடகங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ், முஸ்லிம் எண்டு இந்த பிரிச்சு பேசுறத கை விடனும். முஸ்லிம்களும் தமிழர் தான். அவர்கள் மத நம்பிக்கையை வைத்து இனத்தில் இருந்து பிரிக்க முடியாது. முஸ்லிம் மக்களை வைத்து சிங்களவனிடம் கூசா தூக்கும் கூட்டம் தான் எங்களை பிரிச்சதுகள். இவையளுக்கு நாங்கள் இடம் குடுக்ககூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொன்னாலும் அவங்க (முஸ்லீம் மக்கள்) அதை ஏற்றுக்கொள்ளவோ போகினம். டிபி ஜாயா காலத்திலேயே முஸ்லீம்கள் தனிச் சிறுபான்மையினமெண்டு அடையாளப் படுத்தப்பட்டு சுதந்திரத்துக்கு முந்தியே நம்மையும் முஸ்லீம்களையும் இன ரீதியாகப் பிரிச்சாச்சுது. அகில் இந்திய காங்கிரஸ{க்குத் தலைவராயிருந்த ஜின்னாவே பாகிஸ்தானைக் கேட்டதால இலங்கையிலும் அது எதிரொலிச்சது. இனி உந்தக் கதையள விட்டுப்போட்டு அவரவர் தப்பிக்கிற வழியைப் பார்க்கவேணும். சுட்டமண்ணும் களிமண்ணும் ஒட்டாது பாருங்கோ!

இலங்கையின் அரசியல் வரலாற்றில இந்தமுறைதான் ஒரு எதிர்மறையான நிலைப்பாட்டை முஸ்லீம்கள் தமிழரோடு சேர்ந்து எடுத்திருக்கினம். ஆனால் தமிழரோ தொடர்ச்சியாகத் தமக்குத்தாமே படுகுழிவெட்டிறதே வேலையாயிருக்கினம்.

பொறுத்திருந்து பாருங்க சம்பந்தர் ஐயாவையும் அவரது கூட்டத்தையும் அம்போ எண்டு விட்டுப்போட்டு மாறிருவாங்க. கடைசியா ஆ வெண்டுகொண்டு வாய்பிளந்து நிக்கப்போறது நாங்கள்தான்.

அஸ்ரப் மீண்டும் மகிந்த கூட்டணிக்கு தாவுறாராமே உண்மையா...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.