Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொ‌த்து‌க்களை ப‌றி‌க்க த‌ந்தை முய‌ற்‌சி: நடிகை கனகா புகா‌‌‌ர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று முத்திரை குத்தி தன்னுடைய சொத்துக்களை பறிக்க சதி செய்வதாக தந்தை மீது நடிகை கனகா புகார் கூறியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், 2002ஆம் ஆண்டு தனது தாய் தேவிகா இறந்துவிட்டார். அப்போது நான் மிகவும் தனிமையாக இருப்பதை உணர்ந்தேன். தனிமையால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு 2004ஆம் ஆண்டு முத்துக்குமார் அறிமுகமானார். 3 வருடங்களாக நாங்கள் பழகி வந்தோம். அதன் பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். 15 நாட்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தோம். பின்னர் முத்துக்குமார் காணாமல் போய்விட்டார்.

அதன் பிறகு நான் என் கணவரை தேடி வருகிறேன். என் கணவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. அப்போது முத்துக்குமாரின் நண்பர் என்று அறிமுகமான அன்சூர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எங்கள் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். எனவேதான் காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்யவில்லை. காணாமல் போன என் கணவரை தேடி கண்டுபிடிக்க ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ன் உதவியை நாடி இருக்கிறேன்.

இதனிடையே, முத்துக்குமார் தனது பெற்றோர்கள் என்று அறிமுகம் செய்த சிதம்பரம்-சரோஜா தம்பதியை தியாகராய‌ர்நகரில் உள்ள பாண்டிபஜாரில் இருக்கும் அப்பாசாமி அடு‌க்குமாடி குடி‌‌யிரு‌ப்‌பி‌ல் சந்தித்து பேசினேன். அவர்கள், தங்கள் மகன் முத்துக்குமார் அமெரிக்காவில் இருப்பதாக கூறி அவரோடு என்னை பேச வைத்தனர். அவரும் என்னோடு பேசினார். இருவரும் பழகியது உண்மைதான் என்றும், ஆனால் இப்போது சேர்ந்து வாழவில்லை என்று அவர் கூறிவிட்டார்.

எனினும், முத்துக்குமார் என்று அவர்கள் காண்பித்த புகைப்படத்தில் இருப்பது என்னுடைய கணவர் முத்துக்குமார் அல்ல. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. அவர்களுடைய மகன், புகைப்படத்தில் காட்டப்பட்ட முத்துக்குமார் என்றால் அவரை நேரில் அழைத்து என்னோடு பேச வைக்கட்டும். என்னுடைய தந்தை என் மீது பலவிதமான புகார்களை கூறி வருகிறார். எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியதாக அறிகிறேன். இதற்கு காரணம் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு என்னை பிடிக்காது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சொத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு சமரசத்தில் முடிந்தது. அதன்படி மகள் என்ற முறையில் எனக்கு சில சொத்துக்களும், கணவர் என்ற முறையில் அவருக்கு சில சொத்துக்களும் கிடைத்தன. இப்போது முழு சொத்தையும் அபகரிக்க திட்டமிட்டு என் மீது மனநலம் பாதிக்கப்பட்டவள் என்ற புகாரை கூறியிருப்பதாக சந்தேகப்படுகிறேன்.

நான் மனநலம் பாதிக்கப்பட்டது உண்மை என்றால் தந்தையாகிய அவ‌ர் என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறாரா? அதற்கான சான்றிதழை காட்ட முடியுமா? காணாமல் போன எனது கணவரை தொடர்ந்து தேடுவேன். தேவைப்பட்டால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கு சென்றும் அவரை தொடர்ந்து தேடுவேன் எ‌ன்று நடிகை கனகா கூ‌றினா‌ர்.

http://tamil.webdunia.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.