Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி, பிப்ரவரி 12, 2010 12:28 |

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் கோட்டபாய ராஜபக்சவிடம் குவிந்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட அதிகாரம் மிக்கவராக அவர் மாறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிழல் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச செயல்படுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சினை ஜனாதிபதி பொறுப்பபேற்றதன் பின்னணியிலும் கோட்டபாய ராஜபக்ச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியை விடவும் கூடுதலான அதிகாரங்களை கோட்பாய ராஜபக்ச கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கொள்கைகள் , வெளிநாடுகளுடான உறவுகள் ,ஐக்கிய நாடுகளின் அழுத்தங்கள் , மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்கள் பற்றிய அக்கறைகள் எதுவும் கோட்டபாயவிடம் கிடையாது என்றும் கூறப்படுகின்றது.

சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைகளுக்கு அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகியன நிதி உதவி வழங்கியதாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவரின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளன.

இலங்கை மீதான வெளிநாட்ட அழுத்தங்கள், அதனால் ஏற்படும் பொருளதார நெருக்கடிகள் பொதுமக்கள் எதிர் கொள்ள நேரும் அவலங்கள் மற்றும் இலங்கையின் எதிர் காலம் பற்றிய கவலைகள் அற்ற மனிதராக கோட்பாய ராஜபக்ச வலம் வருகின்றார்.

அவர் நினைப்பது நடக்கும் நடக்க வேண்டும் என்பது தான் அவரின் நிலைப்பாடு அதனால் ஏற்படும் பாதிப்புகள் பின்விளைவுகள் பற்றி அக்கறைப்படுவதற்கு அவர் தயாரில்லை.

இவ்வாறு தன்னிச்சையாக செயல்படும் ஒரு இராணுவ ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச என்ற ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை தனக்கு முன்னால் கவசமகா நிறுத்தியுள்ளதன் மூலம் பாதுகாப்பு தேடிக் கொள்கின்றார்.

சர்வதேசத்தின் விமர்சனங்கள் அழுத்தங்களை எல்லாம் “ஜனாதிபதி” மகிந்த ராஜபக்ச தாங்கிக் கொள்ள அவரின் பின்னால் இந்த நிழல் ஜனாதிபதியின் அதிகார இராஜாங்கம் நடக்கின்றது.

இலங்கையில் ஜனநாயகம் என்பது சாத்தியமற்றதொன்றாகவே மாறிவிட்டது என்பது கல்வியாளர்களின் கருத்து.

ஜனாதிபதி சகோதரார்களின் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தரப்புடன் முரண்பட்ட ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையினை கோட்பாய ராஜபக்ச மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அனுர பிரியதர்ச யாப்பா தனது வெற்றிக்கா ஊடகங்களை பயன்படுத்துவதை தடுப்பதும் அவரை அவரத தொகுதியில் தோற்கடித்து அரசியலில் இருந்து வெளியேற்றவதுமே கோட்டபாயின் நோக்கம் என்று தெரியவந்துள்ளது.

ஜனாதிபதியின் கீழ் உள்ள அனைத்து அமைச்சுகளினதும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கோட்டபாயவிடமே உள்ளதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனவே எதிர் வரும் காலங்களில் ஊடகத்துறை தொடர்பான முடிவுகளை கோட்டபாய ராஜபக்சவே நேரடியாக மேற்கொள்ளவார் என்றும் என்றும் இல்லாதவாறு ஊடக சுதந்திரம் இலங்கையில் மோசமடையும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை பசில் ராஜபக்ச இலஞ்சம் , ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் பணம் சேர்பதையும் சொத்துக்களை கொள்வனவு செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது ஊழல் நடவடிக்கைகளுக்காக அரச இயந்திரத்தையும் அமைச்சரவையினையும் பசில் ராஜபக்ச தவறான முறையில் பயன்படுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் கோட்டபாய ராஜபக்ச பாதுகாப்பு தரப்பினை தனியாக கையாண்டு வருவதாகவும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.

சரத் பொன்சேகாவின் கைது,இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம், எதிர் கட்சி ஆதரவாளர்களின் கைது நடவடிக்கை போன்றவை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் கோட்பாயவால் தன்னிச்சையாவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரு சகோதரர்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவராகவே மகிந்த ராஜபக்ச தற்போது மாறிவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதன் மூலம் தனக்குரிய நேரடி ஆதரவுத் தளத்தை நிறுவுவதற்கும் சகோதரர்களின் அதிகாரங்களை குறைப்பதற்கும் மகிந்த ராஜபக்ச விரும்புவது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலையில் கோட்பாய ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவரை எக்காலத்திலும் அதிகாரமற்றவராக மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி குடும்பத்தின் பாதுகாப்பு , அமைச்சர்களின் பாதுகாப்பு , பாதுகாப்பு படைப்பிரிவுகளின் செயல்பாடுகள் என்பன கோட்பாயவின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதால் அவரை தாண்டி எந்த ஒரு நடவடிக்கையும் மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளபட முடியாத நிலை தோன்றியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் பசில் ராஜபக்சவிற்கே நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

குறிப்பாக அரச இயந்திரங்களை பயன்படுத்தி அவர் பெற்றுவரும் கோடிக்கணக்கான வருமானம் நாமல் ராஜபக்சவினால் பங்காடப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் காலத்தில் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்வதற்கும் பசில் ராஜபக்ச தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரவேச நிகழ்வில் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட போதிலும் அதிகாரம் மிக்க அவரின் இரு சகோதரர்களும் கலந்து கொள்ளாதமை பெரும் பூகம்பத்தின் அறிகுறியை உணர்தியுள்ளது.

pathivu

இவ்வாறான ` அரசியல் ஆய்வுகள்` கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் `வன்னிப் போர்க் களம்` குறித்து பலர் எழுதிய `இராணுவ ஆய்வுகள்` போல் எமது சுயவிருப்பங்களை நாமே எழுதி, அவற்றை நாமே வாசித்து சுய இன்பம் அனுபவிக்கும் ஒரு ஆபத்தான சமூக கூட்டு மன நிலை.

`கொதிக்கும் தவளையின் நடத்தையை` கைவிட்டு துணிந்து புதிய சூழலை முகம் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.தயவு செய்து மற்றவர்களுக்கும் அதையே கற்றுக்கொடுங்கள்...

இவ்வாறான ` அரசியல் ஆய்வுகள்` கடந்த வருடம் மே மாதத்திற்கு முன் `வன்னிப் போர்க் களம்` குறித்து பலர் எழுதிய `இராணுவ ஆய்வுகள்` போல் எமது சுயவிருப்பங்களை நாமே எழுதி, அவற்றை நாமே வாசித்து சுய இன்பம் அனுபவிக்கும் ஒரு ஆபத்தான சமூக கூட்டு மன நிலை.

`கொதிக்கும் தவளையின் நடத்தையை` கைவிட்டு துணிந்து புதிய சூழலை முகம் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.தயவு செய்து மற்றவர்களுக்கும் அதையே கற்றுக்கொடுங்கள்...

அந்தக் கட்டுரையில் அப்படி என்ன சுய இன்பம் காணும் விடயங்கள் இருக்கின்றன... இலங்கை அரசியல் ஒரு கூட்டு குடும்ப அரசியலுக்குள் போய் விட்டு இருக்கின்றது எனும் உண்மையை சொல்வது கூட பிழையானதா...??

SRILNKAN government is a famile bussines... Is it ture or not..??

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?

கோத்தா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.