Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி

சென்னை, வெள்ளி, 19 பிப்ரவரி 2010( 16:41 IST )

img1100219061_1_1.jpg

தங்களுடைய துப்பாக்கிகள் மெளனித்துவிட்டதாக அறிவித்துவிட்டு, நாடு கடந்ததமிழீழ அரசை அமைக்க ஜனநாயக ரீதியில் அவர்கள் வாக்கெடுப்புநடத்திவரும் நிலையில், இதற்கு மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானதடையை நீடிப்பதற்கு என்ன நியாயம் இருக்க முடியும் என்று புதிய தமிழகம்கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

WD

சென்னையில் இன்றுசெய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் க. கிருஷ்ணசாமி, விடுதலைப் புலிகள்மீதான தடை தொடர்ந்துநீடிக்கப்பட்டு வருகிறகாரணத்தினால்தான், செங்கற்பட்டுஉள்ளிட்ட அகதிகள் முகாம்களில்இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள்புலிகள் என்று சந்தேகத்தின் பேரில்அடைத்து வைப்பதற்கும், காவல்துறையின் தாக்குதல் போன்றஇன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதும்தொடர்கிறது என்று கூறினார்.

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை அழித்துவிட்டதாகஇலங்கை அரசு நாடாளுமன்றத்திலேயே அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகளும், அவர்களின் தலைமையும் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்தியாவின்உள்துறை அமைச்சரும் கூறியுள்ளார். இதற்குப் பிறகும் அந்த இயக்கத்தின்மீது தடையைத் தொடர்வதற்கு என்ன அடிப்படை இருக்கிறது” என்று கேட்டகிருஷ்ணசாமி, இந்தியாவும், இலங்கையும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம்உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

“ஈழத்தில் தமிழர்கள் தங்களது சுய நிர்ணய உரிமைக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் அரை நூற்றாண்டிற்கும் அதிகமாக போராடி வருகிறார்கள். 30 ஆண்டுக்காலம் ஜனநாயக வழியிலும், அதன் பின் மேலும் 30ஆண்டுக்காலம் ஆயுதம் தாங்கியும் போராடியுள்ளனர். இரண்டாவது உலகப்போருக்குப் பிறகு உலகில் பல நாடுகளில் இவ்வாறு ஆயுதம் தாங்கிப்போராடிய இனங்கள் விடுதலை பெற்றுள்ளன. ஆனால் ஈழத் தமிழரின்போராட்டம் மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக, பயங்கரவாதமாகமுத்திரை குத்தப்பட்டது.

போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதுவிடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும்,அமெரிக்காவும் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தன. அவைகள்தடை செய்யப்பட்டபோது, நார்வே அரசின் அனுசரணையுடன் அவர்கள்இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். எப்போதுஒரு இயக்கத்தோடு அந்த நாடு பேச்சுவார்த்தை நடத்துகிறதோ, அப்போதேஅதன் மீதான தடையை நீக்கியிருக்க வேண்டுமே தவிர, தடை விதித்திருக்கக்கூடாது. இந்த இடத்தில் மேற்கத்திய நாடுகள் தவறிழைத்துவிட்டன” என்றுகூறிய கிருஷ்ணசாமி, இன்றைக்குப் போர் முடிந்து அமைதி திரும்பிவிட்டதுஎன்று இலங்கை அரசும், இந்திய அரசும் கூறிக்கொண்டிருக்கிற நிலையில்,இதற்கு மேலும் அந்தத் தடையை நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லைஎன்று கூறினார்.

இன்றைக்கு ஈழத் தமிழ் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் ஜனநாயக வழியில்தமிழீழ நாடு கடந்த அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அந்தவழிமுறையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

இதற்கு மேலும் புலிகளின் மீதான தடையை நீக்காவிட்டால், அந்தத்தடையை நீக்குவது தொடர்பான சட்ட ரீதியான வழிமுறை குறித்து ஆலோசிக்கவரும் ஏப்ரல் 1ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகளையும், தமிழினஅமைப்புகளையும் புதிய தமிழகம் கூட்டும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.

தமிழர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை

உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் தாக்கப்படுவதை கோவையில் நடந்தஉலகத் தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் எடுத்துரைத்ததைச் சுட்டிக்காட்டியகிருஷ்ணசாமி, ஹைதராபாத்திற்கு வேலை வாய்ப்புத் தேர்விற்குச் சென்றுதமிழர்கள் தாக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இங்கேயும் பாதுகாப்பற்ற நிலைதான்உள்ளது என்று கூறினார

ஈழம் நியூஸ்

Edited by sam.s

இந்த உலகம் தான் விரும்பியதைப் பயங்கரவாதமென்று சொல்லும். தான் விரும்புவதையே ஜனநாயகமென்றும் சொல்லும். நமக்குத் தேவையான எதையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவும் அப்படித்தான்.

தன்னை ஜனநாயக நாடென்று சொல்ல வைத்திருக்கிறது. நமது ஜனநாயக வழியை அது பயங்கரவாதம் என்று சொன்னாலும் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.