Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அரசு எனது உறவினர்; ஏனைய நாடுகள் நண்பர்கள்! - மகிந்தராஜபக்க்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எனது உறவினர், ஏனைய உதவி வழங்கும் நாடுகள் எனது நண்பர் கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்திய த ஹிந்து நாளிதழுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கிலுள்ள மக்கள் எனக்கு வாக்களிக்க வில்லை என்பது குறித்து நான் கவலை கொள்ளவில்லை.அங்கும் சிலர் எனக்கு வாக்களித்துள்ளனர். சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத் துறையில் அனுபவமின்மை என்பனவே எனக்கு அதிகப்படியான வெற்றிக்குக் காரண மாக அமைந்திருந்தது.

சரத்பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக் காலத்தின்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதுவும் பேசாமல் என்னை கைது செய்து அதிபாதுகாப்புக்கூடிய போகம் வரை சிறையில் அடைக்க வேண்டும் போன்ற எனது குடும்பத்திற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்துவந்ததார் .

என்னைப் பொறுத்தவரை நான் மேற் கொண்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், சரத் பொன்சேகாவின் முகாமிலிருந் தோர் அதனை அறிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.எனது கிராமங்களில் உள்ள மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். ஜனநாயகத்தை, சமாதானத்தை விரும்பிய நகர்ப்புற, குறிப்பாகக் கொழும்பு, கண்டி மக்களும் எனக்கு வாக்களித்தனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றிக்குக் காரணமானவர் யார் என்ற விடயத்தில் மக்கள் தமது வாக்குகள் மூலம் என்னையே தெரிவு செய்துள்ளனர். தாஜ்மஹாலைக் கட்டிய மேசனையும் அல்லது சிரேஷ்ட பொறியியலாரையும் மக்கள் நினைவு கூருவதில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என்ற நம் பிக்கையுண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தினரும் எம்முடன் இணைவார்கள். ரணில் விக்கிரம சிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சென்று மகிந்த போடா , கோத்தபாயா போடா ,பசில் போடா எனத் தமிழிலில் பேசியுள்ளார்.

இதன்மூலம் என்னை நிராகரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கையின் சமாதானமான இனப்பிரச்சினைக்குத் தீர்வுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

13-வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பிரச்சினையை முறையாகத் தெரிந்து கொள் ளாது அவசரமாகக் கொண்டுவரப்பட்ட ஒன்று. தற்போதைய சூழ்நிலையில் பொலிஸ் அதிகா ரத்தைத் தவிர ஏனைய அதிகாரங்களை நடை முறைப்படுத்த முடியும். ஜனாதிபதித் தேர்தல் முடிபடைந்து விட் டது. பொதுத் தேர்தல் நடைபெறப் போகின் றது. அடுத்ததாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்திய பின்னரும் இடம்பெயர்ந் தோரைக் குடியமர்த்திய பின்னரே இந்த நட வடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியும்.

ஏற்கனவே வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இருந்து தமிழ்-முஸ்லிம் இளைஞர்கள் படை களில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப் படையில் அவர்களை மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்தாது அவர்களுக்கு பொலிஸ் பயிற் சிகள் மாத்திரம் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் அவர்கள் தென்னிலங்கையிலும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். கொழும்பைப் பொறுத்தவரையில் 20 வருடங் களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமான இருந்த நிலைமை மாறி இன்று அவர்களின் வீதம் 30 ஆகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்- முஸ்லிம் மக்களின் சனத்தொகை கொழும்பில் அதிகரித்துள் ளமையானது எவ்வித பிரச்சினையும் ஏற்படுத்தாது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் அதில் பங்கேற்க வேண்டும். அதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தம்முடன் இணைந்துவர விருப்பம் இல்லாதவர்களாக இருப்பின் புதிய பிரதி நிதி கள் தெரிவு செய்யப்படும்போது அவர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்துவேன்.

இந்தியா எனது உறவினர், இலங்கைக்கு உதவி செய்யும் ஏனைய நாடுகள் எமதுநண் பர்கள் என்றார். சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாகக் கருத்துரைத்துள்ள அவர்,தித்துறையின் முன்னால் அவரின் விட யம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையால் தம்மால் அதில் தலையிட முடியாது எனக் குறிப் பிட்டுள்ளார். இந்த நிலையில் சரத் பொன் சேகா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றி ருந்தால் நாடு வன்முறைகளுக்கு உள்ளாகி யிருக்கும் என மகிந்த ராஜபக்ஷ தமது செவ் வியில் குறிப்பிட்டுள்ளார் .

http://www.sankamam.com

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுப்பிரச்சினையையும் ஆராயாமல் அவசரமாகக் கொண்டு வரப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் பேசும் தலைவர்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் அமுல்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்து பத்திகைக்குஅளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறுகூறியுள்ளார்.

சீனாவுடனான எனது தொடர்புகள் குறித்து இந்தியர்கள் சற்று கவலையடைந்துள்ளனர். சீனா ஜப்பான் உட்பட பல நாடுகள் இங்கு முதலீடு செய்கின்றன. ஆனால் இந்தியா எனது உறவு நாடு. ஏனைய நாடுகள் நண்பர்கள் என்றே நான் எப்போதும் கூறுகிறேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: ஜனாதிபதித் தேர்தலில் 18 சதவீத அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், மாகாண சபைகளில் பெரும்பான்மையைக் கணக்கிட்டால் அது 2.5 மில்லியனாகும்.

அதில் ஒரு மில்லியனை நீக்கினால் 1.5 மில்லியன் பெரும்பான்மையில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் கிராமங்களில் உள்ள மக்களின் நாடியை அறிந்தவன் நான். கொழும்பு மாவட்டத்தில் கூட, மாநகர சபைக்கு வெளியே எனக்கு மக்கள் நல்ல பெரும்பான்மையைத் தந்தார்கள். ஆரம்பம் முதலே எனக்கு பெரும்பான்மை அங்கு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்.

வடக்கு கிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்க வில்லை என்பது குறித்து நான் கவலைப்பட வில்லை. அதனால் நான் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதற்காகவும் தமது சொந்த ஜனாதிபதியை அவர்களாகவே தேர்ந்தெடுக்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் தேர்தலை நடத்தினேன். அதில் 26 சதவீதம் எனக்கு திருப்தியேற்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எனக்கு சில வாக்குகள் கிடைத்துள்ளன.

மக்கள் அனுபவத்தை எதிர்பார்த்தார்கள். தமது நாட்டை வழிநடத்த ஒரு அரசியல்வாதியை விரும்பினார்கள். 40 வருட காலமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். திடீரென ஒரு இராணுவ மனிதர் உள்ளே வருகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் பேசிய விதத்தாலும் போட்ட சத்தத்தாலும் மக்களை இழிவுபடுத்தியதாலும் அவர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பொருளாதார விவகாரங களில் அவர் (சரத் பொன்சேகா) தனது அனுபவமின்மையைக் காட்டினார்.

உண்மையில் என்னைப் பற்றி எதுவும் அவர் கூறவில்லை. இறுதி நாட்களில் மாத்திரம் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார்.

அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பேன். அவரை உதைத்து வெளியில் தள்ளுவேன் என்று சோமவன்ச (ஜே. வி. பி. தலைவர் அமரசிங்க) கூறியதை அவர் அங்கீகரித்தார். 7 மணிக்கு நான் அங்கு சென்று அவரைக் கைது செய்து 2து2 சுற்றளவுள்ளதும் ஆகக் கூடிய பாதுகாப்பு சிறையுமான கண்டி போகம் பரை சிறையில் அடைப்பேன் என்றும் கூறினார். இதுதான் இராணுவம் என்று அவர் நினைத்தார். அவருக்கு சரியான முறையில் அறிவுரை கூறப்படவில்லை.

அவர்களது முழு பிரசாரமே ஒரு குடும்பத்திற்கு எதிராக சேறு வீசுவதாக இருந்தது.

இலங்கையின் கிராமப் புறங்களில் பாரிய அளவில் ஆதரவு எனக்குக் கிடைத்தது. கிராம அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.

எனக்கு வாக்குகளை அளித்ததன் மூலம் மக்கள் புலிகளை அழித்த கௌரவத்தை எனக்கே வழங்கியுள்ளனர். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? மக்கள் நினைவு கூர்வது தாஜ் மஹாலை நிர்மாணித் தவரையா? மேசனையா? அல்லது பிரதம பொறியியலாளரையா?

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன். மக்கள் எங்களுடன் இருப்பார்கள். ஏழு வருட காலத்திற்கு அரசாங்கம் உறுதி நிலையில் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற அல்லது அதற்குக் கிட்டிய வகையில் வெற்றி பெற எமக்கு சாத்தியமாகும் எனக் கருதுகிறேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தார் பின்னர் வந்து என்னுடன் இணைவார்கள்.

13 ஆவது திருத்தம் அவசரத்தில் கொண்டு வரப்பட்டதாகும். முழுப் பிரச்சினையும் நன்றாக ஆராயப்படவில்லை. நாட்டின் பூகோளவியல் பற்றியும் பிரச்சினையின் வரலாறு பின்னணி குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அதனைப் புரிந்து கொள்ளாமல் நாட்டிற்குப் பொருத்தமான தீர்வொன்றினைக் கொண்டு வர முடியாது. அது ஒரு நடைறைத் தீர்வாக இருக்க வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தம் அல்படுத்தப்படலாம். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பில் உள்ளது. அது ஏனைய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறது. காணி மற்றும் எல்லாமே அமுல்படுத்தக் கூடியவை.

கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலை மாறி இன்று அவர்கள் 30 வீதமாகியுள்ளனர். கொழும்பின் மேயரும் ஒரு முஸ்லிம் இனத்தவரேயாகும்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றை பலறை அழைத்தேன். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் இருந்தவரை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்து ஸ்ரீவதே வழி என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி நானே நாட்டின் தலைவரும் நானே. அவர்கள் என்னிடம் வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். என்னுடன் உரையாட வேண்டும். என்னுடன் இணைந்து செயல்பட முடியாதென அவர்கள் கருதினால் புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாட வேண்டி நேரும்.

globaltamilnews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பார்சி கொங்கிரசு குடும்பம் தனது எஜமானன் என்று சொல்ல வருகிறான் சர்வதிகாரி இரசாயன பாம்சா.

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் = பொய்யன், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ....... பறித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதி, .....

வட இந்தியன், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள் ...

கையாலாகாத இந்திய அரசு உறவென்றால், தாங்கள் எப்படியென்று நாம் எடுத்துக்கொள்வது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.