Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா அரசு அடிப்படை மனித உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பேர்னாட் சவேஜ்

bernad-savage-eu-100x65.jpg

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சவேஜ் கொழும்பு வாரஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் (21.02.2010) தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

கேள்வி: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் இருந்து இருதரப்பும் மேற்கொண்டு செல்ல வேண்டிய திசை என்ன?

பதில்: இதற்கான திட்டம் 18 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. அது பல விடயங்களை கொண்டது. அதனை நாம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி அறிக்கையில் தெரிவித்திருந்தோம்.

நாம் தற்போதைய நிலையில் இருந்து கொண்டு சிறீலங்கா அரசுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் எமது பரிந்துரைகளை அனுகூலமான நிலைக்கு மாற்ற முடியும். எமது இறுதி அறிக்கையில் நாம் தெரிவித்திருந்த கருத்துக்கள் தொடர்பான நடவடிக்கைகள் தேவை.

கேள்வி: மனித உரிமைகள் குறித்த மூன்று சரத்துக்களை நடைமுறைப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த தண்டனை நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?

பதில்: நாம் அதனை எவ்வாறு நோக்குகின்றோம் என்பது தொடர்பானது அல்ல இது. பல சம்பவங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன, இனம்காணப்பட்டன. ஜி.எஸ்.பி வரிச்சலுகையின் நம்பகத்தன்மையை பாதுகாப்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அதனை நாம் அரசுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

bernad-savageஎமது முடிவு அரசுக்கு கசப்பானது என்பது தெளிவானது, அதனை நாம் அறிவோம், ஆனால் நாம் எமது விதிகளை மீறமுடியாது, அது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். நடவடிக்கையானது குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாம் அரடன் தொடர்புகளை பேணியதுடன், அவர்களுக்கு தகவல்களையும் வழங்கியிருந்தோம். எனவே எமக்கு முன்னுள்ள வழி தெளிவானது, அதாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை தொடர்பில் நடவடிக்கைகள் தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோள் எப்போதும் தெளிவானது.

கேள்வி: சட்டவிதிகளில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வரிச்சலுகை நிறுத்தப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு அசினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏதாவது உண்டா?

பதில்: நாம் அரசுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவேண்டிய விடயங்களில் அதுவும் சில. அதன் விபரங்களை அதிகளவில் நான் இங்கு தெரிவிக்க விரும்பவில்லை. அது மளிகைச்சாமான் பட்டியல் போல நீளமானதாக இருக்கலாம். நாம் தொடர்ந்து பேச விரும்புகிறோம். அதன் மூலம் எந்த விடயத்தை முதலில் தீர்த்துக்கொள்ளலாம் என்பதை அறிய முடியும். அதனையே நாம் அரசுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளோம்.

கேள்வி: சிறீலங்காவில் முன்னர் ஏற்பட்ட நெருக்கடியான நிலமைகளில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பான விவாதங்கள் உள்ளன. சிறீலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டதனால் அங்கு நீதியான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பது கடினமானதாக இருக்கும். இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்: பயங்கரவாதத்தால் உலகில் பாதிக்கப்பட்டது சிறீலங்கா மட்டுமல்ல. பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அடிப்படை மனித உரிமைகளை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அடிப்படை மனித உரிமைகள் என்பது முக்கியமானது. அதனை கைவிடுவதை அனுமதிக்க முடியாது.

கேள்வி: வரிச்சலுகைக்காக சிறீலங்கா அரசு தனது இறையான்மையை விட்டுக்கொடுக்காது என சிறீலங்கா அரசு தெரிவித்து வருவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் என்ன கருதுகின்றது?

பதில்: இறையான்மை தொடர்பில் கலந்துரையாடுவது பயனள்ளதாக இருக்குமா என்பது தொடர்பில் என்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது. வரிச்சலுகை தொடர்பான நடவடிக்கைகளை சிறீலங்காவே மேற்கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல. அதனை அனைத்துலக சமூகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமைகள் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகள் அல்ல, அது அனைத்துலகத்தினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் விதிமுறைகள். சிறீலங்காவே வரிச்சலுகையை கோரியிருந்தது. எனவே அதற்கான நிபந்தனைகளை சிறீலங்கா நன்கு அறியும்.

சிறீலங்காவின் இறைமையில் தலையிடுகிறோம் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை ஏனெனில் இறைமை தொடர்பாக சிறீலங்காவே முடிவெடுக்க வேண்டும். வரிச்சலுகையின் நிர்வாகம் தொடர்பில் அவர்கள் தான் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தலைப்பட்சமான சலுகை. அது எமது இறைமைக்குள் உள்ளடங்கியுள்ளது.

கேள்வி: அடையமுடியாத இலக்கு, ஐரோப்பிய ஒன்றியம் இலக்கின் எல்லையை மாற்றியுள்ளது போன்ற கருத்துக்களை சிறீலங்கா அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. எனவே இது ஒரு அடையமுடியாத இலக்கு என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

பதில்: இல்லை, அது அடையமுடியாத இலக்கு என்று நான் எண்ணவில்லை. மக்களை கவர்வதற்காக வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் பதில் தருவது உபயோகமானதா என்பது தொடர்பில் என்னால் எந்த உறுதிப்பாட்டையும் காணமுடியவில்லை.

கேள்வி: அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் சில விடயங்கள் தொடர்பில் ஒரு இடைப்பட்ட நிலைக்கு வந்தால், அரசு நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் என வேறு ஏதாவது உண்டா?

பதில்: இது குதிரை வியாபாரம் தொடர்பான கேள்வி அல்ல. பேச்சுக்கள் தொடர்வதை நாம் விரும்புகிறோம், அதன் மூலம் நாம் ஒரு அனுகூலமான முடிவை எட்டமுடியும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் நாம் சிறீலங்கா அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட விரும்புகிறோம். இதில் வெளிப்படையான பிரச்சார இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள நான் விரும்பவில்லை.

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகள் மாற்றமடையுமா?

பதில்: அவ்வாறு மேற்கொள்ளமுடியும் என நாம் நம்புகிறோம்.

கேள்வி: தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தண்டனை நடவடிக்கை காலம் கடந்தது, செயல்திறனற்றது எனவும், சலுகைகளை வழங்கி சிறீலங்கா அரசை கட்டுப்படுத்துவது பயனுள்ளது எனவும் நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: சில சலுகைகளை வழங்கி பின்னர் அதனை தண்டனையாக மாற்றுவது என்ற கருத்தில் மேற்கொள்ளப்படும் வாதங்களை நான் எதிர்க்கிறேன்.

நன்றி: ஈழம் இ நியூஸ் & ஈழவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.