Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் வாய்ப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் வாய்ப்பும்

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய இலங்கை அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப் பெரும, நடைபெறும் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு பெரு வெற்றியீட்டும் என அரசுத் தலைமை எதிர்பார்க் கின்றது என்று அறிவித்தமையோடு, இத்தேர்தலின் பின் னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் இரு விடயங்கள் பற்றியும் கோடிகாட் டியிருக்கின்றார்.

* இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என ஜனாதிபதி உறுதியாக நம்புகின்றார். அந்த வெற்றியை ஈட்டிக்கொண்டு, அதன் மூலம் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு ஒன்றை சில சீர்திருத்தங்களுடன் நடைமுறைக்குக் கொண் டுவர அவர் விரும்புகின்றார்.

* புதிய நாடாளுமன்றத்தில் சுமார் ஐம்பது புது முகங் கள் வரவிருக்கின்றன. இதன் அடிப்படையில், சிறிய அமைச்சரவை ஒன்றை ஜனாதிபதி அமைக்கத் திட்டமிட் டுள்ளார்.

இப்படி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியிருக் கின்றார்.

ஏற்கனவே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக் கியப்பட்டிருந்த எதிர்க்கட்சிகள் இப்போது இரண்டு பெரும் அணிகளாகப் பிரிந்து, பிளவுண்டு கிடக்கின்றன. போதாக்குறைக்கு அத்தேர்தலில் எதிரணி வேட்பாளருக்கு எச்ச, சொச்ச வெற்றியையாவது தமிழர் தாயகப் பிர தேசத்தில் ஈட்டித்தந்த தமிழர் தரப்புகள் இத்தேர்தலில் தனிவழி செல்லுகின்றன.

இவற்றை நோக்குகின்றபோது, ஜனாதிபதித் தேர்த லில் ஆளும் தரப்பிடம் பலத்த அடிவாங்கிய எதிரணி, இப் போது பொதுத் தேர்தலில் "செம அடி'வாங்கினாலும் ஆச்சரி யப்படுவதற்கில்லை என்றுதான் தோன்றுகின்றது.

ஆனாலும் அத்தகைய பரவலான ஆதரவு தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைமையின் கீழ் பொதுத் தேர்தலில் ஆளும் தரப்புக்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற ஆசனங்களாகப் பரிணமிக்க வாய்ப்புண்டா என்பதே கேள்வியாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட அண்மையில் இந் திய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தபோது, இத் தேர் தலில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களை முற்றாக எட்டாவிட்டாலும் அத்தகைய ஒரு வெற்றியை நெருங் குவோம் என்றே குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே, இருநூற்றியிருபத்தைந்து எம்.பிக்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவேண்டுமா னால், அரசுப் பக்கத்தில் குறைந்தது நூற்றியைம்பது பேர் எம்.பிக்களாவது தெரிவுசெய்யப்படவேண்டும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என சுயாதீன நோக்கர்களும் தேர்தல் கணிப்பீட்டுப் புள்ளி விவர ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஆகக்கூடியது இத்தேர்தலில் அரசுத் தரப்பு 130 முதல் 135 வரையான ஆசனங்களைப் பெறக்கூடும் என உத்தேசிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தற்போதைய அரசமைப்பை எப்படி யும் மாற்றவேண்டும் என்ற கங்கணத்திலும், முடிவிலும் இருக்கும் அரசுத் தரப்புக்கு, அந்த நடவடிக்கையை முன் னெடுப்பதற்கு குறைந்தபட்சம் பத்து முதல் பதினைந்து எம்.பிக்கள் மேலதிகமாகத் தேவைப்படுவர் என்பதும், அவர்களை எதிரணிப் பக்கத்தில் இருந்துதான் அரசுத்தரப்பு வளைத்துப் பிடிக்கவேண்டியிருக்கும் என்பதும் ஊகிக் கத்தக்கதே.

இதேபோன்றுதான், தற்போது ஆட்சியிலிருக்கும் ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2004 இல் ஆட்சிக்கு வந்தபோது, அறுதிப் பெரும்பான்மையை ஈட்டுவதற்கே அது அல்லாடியது. அதன் காரணமாக சபாநாயகர் தெரி வின் போது அப்பதவியை எதிரணி வேட்பாளரிடம் அது பறிகொடுக்க வேண்டியும் நேர்ந்தது.

அத்தகைய அட்சரகணித எண்ணிக்கையின் அடிப் படையில் இருந்த நாடாளுமன்ற எம்.பிக்கள் தொகையை, தமக்குச் சாதகமாக பலமானதும் ஸ்திரமானதுமான அர சாக மாற்றவேண்டிய இக்கட்டை 2005 நவம்பரில் பதவி யேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்கொண்டார்.

இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக எதிரணி யினரைத் தம்பக்கம் வளைத்துப் போடுவதற்காக எம்.பிக் கள் எல்லோருக்கும் அமைச்சர்கள், அமைச்சரவை அந் தஸ்து இல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எனப் பதவிகளைத் தூக்கி வீசவேண்டியவரானார் அவர். இது தான் நூறுக்கும் அதிகமான அமைச்சர்களை நியமித்த அவரின் தற்போதைய "கின்னஸ்' சாதனையின் பின்னணி. யார், யாருக்கு எந்தெந்த அமைச்சை, எந்தத் தகைமையில், வழங்கினோம் என்ற விவரத்தைக் கூடக் குறிப்பில் எழுதி வைத்துப் பார்த்துத்தான் அவர் நினைவுபடுத்திக் கொள் ளும் வகையில் அமைச்சர்கள், அவர்களின் அமைச்சுகளின் விவரங்கள் போன்றவற்றின் பட்டியல் மிகமிக நீண்டது.

இப்போது புதிய நாடாளுமன்றத்தில் பல புது முகங்கள் எம்.பிக்களாக வர வாய்ப்புண்டு. புது எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்காமல் தவிர்ப்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என ஜனாதிபதி கருதுகிறார் என்பதையே அமைச்சர் டலஸின் கூற்று சுட்டுகின்றது.

ஆனால், நாடாளுமன்றில் மூன்றில் இரு பங்கு பெரும் பான்மை ஈட்டுவதற்காக எதிரணிப் பக்கம் கண்வைக்க வேண்டிய கட்டாயத்தை ஜனாதிபதி எதிர்கொள்ளும் போது, அணி மாறலுக்கு விலையாக ஒரு வகையில் "சட்ட ரீதியான லஞ்சமாக' வழமைபோல, அமைச்சர்கள் பதவி என்ற ரொக்கத்தைத்தான் அவர் தூக்கி வீசவேண்டியிருக்கும். அப்போது, அமைச்சர்கள் எண்ணிக்கை புதிய நாடாளுமன்றத்திலும் தற்போது போன்று "கின்னஸ்' சாத னையை எட்டுவதைத் தவிர்க்கமுடியாமல் போகலாம்.

நன்றி - உதயன் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

புது எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்காமல் தவிர்ப்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என ஜனாதிபதி கருதுகிறார் என்பதையே அமைச்சர் டலஸின் கூற்று சுட்டுகின்றது.

ஓ இது தான் மஹிந்த சிந்தனையோ

:rolleyes::blink::o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.